என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 மாணவிகள் மாயம்"

    • முதலாம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிள் மாயமானார்கள்.
    • போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள கோட்டைப்பட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி மகள் கவுசல்யா(17). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல தயார்நிலையில் இருந்தார். சம்பவத்தன்று குடும்பத்தினர் அனைவரும் விஷேசத்திற்கு சென்றனர். மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது மகள் கவுசல்யாவை காண வில்லை. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    போடி அருகில் உள்ள ஜே.கே.பட்டி அய்யனார் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி(21). இவர் போடியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று டி.சி வாங்கி வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது தாய் அமிர்தவள்ளி போடி டவுன் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை ேதடி வருகின்றனர்.

    • வெவ்வேறு சம்பவங்களில் 2 பள்ளி மாணவிகள் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் பண்ணைக்காடு பஜனைமடம் தெருவை சேர்ந்த முத்துமணி மகள் கிருத்திகா(14). இவர் தேனியில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று விடுதியில் இருந்த மாணவி திடீரென மாயமானார். சக மாணவிகள் இதுகுறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து விடுதி செயலாளர் அருள்பிரகாசம் கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

    கெங்குவார்பட்டி ராமர்கோவில் தெருைவ சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் காவியா(21). இவர் கொடைக்கானல் அன்னைதெரசா கல்லூரியில் பி.எஸ்.சி படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

    சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற காவியா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×