என் மலர்
தேனி
- இவர் சம்பவத்தன்று பத்ரகாளிபுரம் ரோடு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த வாகனம் இவர் மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தேனி:
போடி அருகில் உள்ள குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (43). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று பத்ரகாளிபுரம் ரோடு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சங்கரபாண்டி யன் என்பவர் ஓட்டி வந்த வாகனம் இவர் மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி லலிதா கொடுத்த புகாரின் பேரில் பழனி செட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு தொகுப்பு வீடுகளை வழங்கி அவர்களுக்கு ரேசன்கார்டு வழங்கியது. ஆனால் அரசு வழங்கிய குடியிருப்புகளில் இருந்து ஒரு தரப்பினர் இவர்களை விரட்டிவிட்டுள்ளனர்.
- மழை மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கி இவர்கள் கடும் இன்னலுக்கு நடுவில் குகையில் வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வருசநாடு மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக அரசு தொகுப்பு வீடுகளை வழங்கி அவர்களுக்கு ரேசன்கார்டு வழங்கியது. ஆனால் அரசு வழங்கிய குடியிருப்புகளில் இருந்து ஒரு தரப்பினர் இவர்களை விரட்டிவிட்டுள்ளனர்.
இதனால் அந்த குடியிருப்புகளில் தங்கமுடியாமல் சுமார் 10 குடும்பத்தினர் வனப்பகுதியில் உள்ள பாறை இடுக்குகளில் வசித்து வருகின்றனர். மழை மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கி இவர்கள் கடும் இன்னலுக்கு நடுவில் குகையில் வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் வனப்பகுதியில் தேன் மற்றும் மூலிகைகளை சேகரித்து நகர்பகுதியில் விற்று வருகின்றனர். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தங்கள் குடும்பத்திற்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
தற்போது இந்த மலைக்குகையில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்ற போதிலும் 3 வேளை உணவுகூட கிடைக்கவில்லை என அவர்களின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், அரசு எங்களுக்காக கட்டி கொடுத்த வீடுகளில் சில நாட்கள் மட்டுமே வசித்து வந்தோம். அதன்பிறகு எங்களை ஒருதரப்பினர் அடித்து விரட்டிவிட்டனர். இதனால் கடந்த 6 மாதங்களாக மலைக்குகையில்தான் வசித்து வருகிறோம். இங்கு வானமே கூரையாக எங்கள் வீடு உள்ளது. இரவு நேரங்களில் வனவிலங்குகள் தொல்லை இருப்பதால் குழந்தைகளை காப்பாற்ற தூக்கம் இல்லாமல் விலங்குகளை விரட்டி வருகிறோம்.
பகல் நேரத்தில் நாங்கள் விறகு எடுத்துவர செல்கிறோம். அதனை வைத்து உணவு சமைத்து வருகிறோம். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏதேனும் உடல்நிலை பாதிக்கப்பட்டால் கூட ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லை. வனப்பகுதியில் கிடைக்கும் மூலிகைகளை வைத்து மருத்துவம் செய்கிறோம். நாங்கள் குடியிருந்த வீடுகளில் மின்இணைப்பு கொடுக்கப்படவில்லை. இப்பகுதியை சேர்ந்த பலருக்கு ஆதார் எண் கூட கிடையாது.அதனால்தான் மின்இணைப்பு கொடுக்கமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு சாதாரண மனிதனுக்கு தேவையான உண்ணஉணவு, உடுத்த உடை, இருப்பிடம் ஆகிய 3-ம் எங்களுக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.
எனவே அதிகாரிகள் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து குடியிருப்பு வசதி மற்றும் எங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.
- அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- மொத்தம் 426 பள்ளிகளில் பயிலும் 22,712 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தேனி:
முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன்முன்னிலையில் கம்பம் முகையதீன் ஆண்டவர்புரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தெப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் முன்னிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி அரசு மாதிரிப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்தனர். கிராமப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும், பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் தமிழ்நாடு முதல் -அமைச்சருக்கு கிடைக்கப்பெற்றதன் காரணமாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி தேனி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 310 பள்ளிகளில் பயிலும் 16,173 மாணவ, மாணவியர்களும், ஊரக பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதிகளில் 52 பள்ளிகளில் பயிலும் 2467 மாணவ, மாணவியர்களும், நகராட்சி பகுதிகளில் 40 பள்ளிகளில் பயிலும் 2106 மாணவ, மாணவியர்களும், நகர் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதிகளில் 24 பள்ளிகளில் பயிலும் 1966 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 426 பள்ளிகளில் பயிலும் 22,712 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
- சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.
சின்னமனூர்:
சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் தலைமையில் எம்.ஜி.ஆர். அணி தேனி மாவட்ட இணை செயலாளர்பிச்சைக்கனி முன்னிலையில், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.
இதில் சின்னமனூர்நகர் அவைத்தலைவர் இளநீர்ராமர், தேனி மாவட்ட பிரதிநிதி மதிவாணன், வக்கீல்பரிவு பொறுப்பாளர்ஜெகன்ராஜ் மற்றும் சின்னமனூர் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கம்பத்தில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது.
- விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நகர்பகுதியில் ஊர்வலமாக வந்தனர்.
கம்பம்:
கம்பத்தில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது. பேரணியை கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கம்பம் பள்ளத்தாக்கு ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நகர்பகுதியில் ஊர்வலமாக வந்தனர். ரோட்டரி கிளப் கம்பம் நகர தலைவர் டாக்டர் வேல்பாண்டியன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- ஒரே ஒரு கடை உள்ள நிலையில் அதற்காக வேளாண்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரும் பொருப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்கு ஒரு உதவியாளரும் உள்ளார்.
- அனை த்து கடைகளை யும் திறந்து விற்பனை நடைபெற அதி காரிகள் நட வடிக்கை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ரெயில்நிலையம் செல்லும் சாலையில் 100 அடி ரோட்டில் உழவர் சந்தை உள்ளது. சந்தை ெதாடங்க ப்பட்டபோது அனைத்து கடைகளும் இயங்கிவந்த நிலையில் பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது.
தமிழக அரசு புதிதாக பொறுப்பேற்றபின் நலிவடைந்த நிலையில் உள்ள உழவர்சந்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை ஒரே ஒரு கடையுடன் உழவர் சந்தை இயங்கி வருகிறது. உரிய பராமரிப்பு, அடி ப்படை வசதிகள் எதுவும் இல்லாததாலும், போக்கு வரத்து வசதிகள் இல்லாத தாலும் விவசாயிகள் இங்கு கடை வைப்பதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
ஒரே ஒரு கடை உள்ள நிலையில் அதற்காக வேளாண்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரும் பொருப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு உதவியாளரும் உள்ளார். ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துகிறீர்கள் என்ற காமெடியை போல மக்கள் வராத இந்த உழவர்சந்தைக்கு தினமும் அலுவலகம் திறக்கப்பட்டு காய்கறிகள் விலைப்பட்டியில் வைக்கப்படுகிறது.
விவசாயிகள் யாரும் ஆர்வம் காட்டாததால் இங்கு கடை வைத்திருக்கும் ஒருவரும் சில மணிநேரம் இங்கு அமர்ந்துவிட்டு பின்னர் தெருத்தெருவாக காய்கறிகளை விற்பனைக்கு எடுத்துச்சென்றுவிடுகிறார். குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறிகள் கிடைக்கவேண்டும். விவசாயிகள் எந்தவித இடைத்தரகரும் இன்றி தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உழவர்சந்தை திறக்கப்ப ட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் உழவர் சந்தை இங்கு மக்களுக்கு பயன்இல்லாத நிலையில் இருப்பதால் இங்கு அனை த்து கடைகளை யும் திறந்து விற்பனை நடைபெற அதி காரிகள் நட வடிக்கை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வேட்டையாடும் கும்பல் அடிக்கடி வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சி களை விற்பனை செய்து வருகின்றனர்.
- புலிகள் சரணாலயத்தையொட்டி உள்ள வல்லக்கடவு பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மிளாமான் கிடந்தது.
கூடலூர்:
கேரள மாநிலம் இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சுமார் 925 கி.மீ. பரப்பளவில் பெரி யாறு புலிகள் காப்பகம் உள்ளது. இந்த சரணால யத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
வேட்டையாடும் கும்பல் அடிக்கடி வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சி களை விற்பனை செய்து வருகின்றனர். வனத்துறை யினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வேட்டை யாடுபவர்களை கைது செய்தபோதிலும் வன விலங்குள் வேட்டை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் புலிகள் சரணாலயத்தையொட்டி உள்ள வல்லக்கடவு பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மிளாமான் கிட ந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்து றையினர் மிளாமானின் உடலை கைப்பற்றி கால்ந டை மருத்துவ குழு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் வனப்பகுதியில் புதைத்தனர். வேட்டை கும்பலால் சுடப்பட்ட மிளாமான் மிரண்டு ஓடியதில் குடி யிருப்பு பகுதியில் இறந்தி ருக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் வேட்டை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வல்லக்கடவு பகுதியில் வேட்டையாடும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.
- மக்களவை தேர்தலை யொட்டி தேனி மாவட்டத்தி ற்குட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டார்.
- இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வருகிற 31ந் தேதி வெளி யிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தேனி:
மக்களவை தேர்தலை யொட்டி தேனி மாவட்டத்தி ற்குட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டார்.
வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டு அவர் பேசியதாவது:-
மக்களவை தேர்தலையொ ட்டி தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேனி மாவட்டத்தில் வாக்கு ச்சாவ டிகள் பகுப்பாய்வு செய்ய ப்பட்டன. இதில் ஆண்டி பட்டி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 316 வாக்குச்சாவ டிகளில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.
பெரியகுளம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 297 வாக்குச்சாவ டிகளில் 7 வாக்குச்சாவடிகள் அமைவிடம், கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ள்ளன. போடி சட்டப்பே ரவை தொகுதியில் உள்ள 315 வாக்குச்சாவடிகளில் 18 வாக்குச்சாடிகள் அமை விடம், கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
28 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ள்ளன. வரைவு வாக்குச்சா வடி பட்டியல் கோட்டா ட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலக ங்கள், நகராட்சி அலுவலக ங்க ளில் உள்ள தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ள்ளன.
வரைவு வாக்குச்சாவ டிகள் குறித்த சந்தேகங்கள், திருத்தங்கள் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வருகிற 30ந் தேதிக்குள் எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம். இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வருகிற 31ந் தேதி வெளி யிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
- சின்னமனூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
- கண்காணிப்பு கேமரா சரியாக இயங்குகிறதா மற்றும் போலீசாரின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
சின்னமனூர் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புறம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.114.29 லட்சம் மதிப்பீட்டில் சங்கிலி தேவன் குளம் புனரமைக்க ப்பட்டதையும், ரூ.65.97 லட்சம் மதிப்பீட்டில் 3.681 கி.மீ தூரத்திற்கு தார்சாலை அமைக்கும் பணிகளையும், சின்னமனூர் நகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு தங்கு தடை யின்றி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.28.58 கோடி மதிப்பீட்டில் தரைமட்ட நீர்தேக்க த்தொட்டி, பொன் நகர் பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க த்தொட்டி கட்டுமானப் பணிகளையும், கண்ண ம்மாள் கார்டன் பகுதியில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுமானப் பணிகளையும், குடிநீர் விநியோகத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகராட்சி திட்டப்பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வருவத ற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் கைதி பதிவேடு, முதல் தகவல் அறிக்கை, சமுதாயப் பணி பதிவேடு, நடப்புத்தாள் பதிவேடு, சுற்றுக்காவல் பதிவேடு, மாதிரி பணி பதிவேடு, சீதன பதிவேடு, பொது நாட்குறிப்பு பதிவேடு மற்றும் நடப்பு தாள் பதி வேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என ஆய்வு செய்தார்.
மேலும், கண்காணிப்பு கேமரா சரியாக இயங்கு கிறதா மற்றும் போலீசாரின் பணிகள் குறித்தும் கேட்ட றிந்தார்.
ஆய்வின்போது சின்ன மனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு, நகராட்சி ஆணையாளர் கோபிநாத், நகராட்சி பொறியாளர் பன்னீர், நகரமைப்பு ஆய்வாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோலிக்குண்டு விளையாடும் போது தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் ஏற்பட்டது.
- தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும் தெற்கு தெருவை சேர்ந்த பவித்ரன் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோலிக்குண்டு விளையாடும் போது தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று பவித்ரன் மற்றும் அவரது நண்பர்கள் மாரிமுத்து, வசந்த், ரிஷிக்கேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து கணேசனை கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.
படுகாயம் அடைந்த கணேசன் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ரன், வசந்த், ரிஷிக்கேஸ்வரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ராஜதானி கள்ளர்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
- எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
ஆண்டிபட்டி:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை சேர்ந்தவர் விஜய்பாபு (41). இவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ராஜதானி கள்ளர்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தேனி மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் விஜய்பாபு பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி, மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- வளர்ச்சி த்திட்ட ப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்திர விட்டார்.
தேனி:
தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அரண்ம னைபுதூர் பகுதியில், ரூ.301.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.18லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணி களையும், 15-வது நிதிக்குழு மானியம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகளையும்,
கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளையும், ரூ.3.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமையலறை பணிகளையும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவர்கள் கழிப்பறை கட்டிடத்தினை யும் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆசிரியர்கள் கழிப்பறை கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வின்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி, மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொடுவிலார்பட்டி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வரத்து வாய்க்கால் மற்றும் நீர் செறிவூட்டு குழி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வளர்ச்சி த்திட்ட ப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்திர விட்டார்.






