என் மலர்
தேனி
- வேட்டையாடும் கும்பல் அடிக்கடி வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சி களை விற்பனை செய்து வருகின்றனர்.
- புலிகள் சரணாலயத்தையொட்டி உள்ள வல்லக்கடவு பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மிளாமான் கிடந்தது.
கூடலூர்:
கேரள மாநிலம் இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சுமார் 925 கி.மீ. பரப்பளவில் பெரி யாறு புலிகள் காப்பகம் உள்ளது. இந்த சரணால யத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
வேட்டையாடும் கும்பல் அடிக்கடி வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சி களை விற்பனை செய்து வருகின்றனர். வனத்துறை யினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வேட்டை யாடுபவர்களை கைது செய்தபோதிலும் வன விலங்குள் வேட்டை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் புலிகள் சரணாலயத்தையொட்டி உள்ள வல்லக்கடவு பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மிளாமான் கிட ந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்து றையினர் மிளாமானின் உடலை கைப்பற்றி கால்ந டை மருத்துவ குழு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் வனப்பகுதியில் புதைத்தனர். வேட்டை கும்பலால் சுடப்பட்ட மிளாமான் மிரண்டு ஓடியதில் குடி யிருப்பு பகுதியில் இறந்தி ருக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் வேட்டை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வல்லக்கடவு பகுதியில் வேட்டையாடும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.
- மக்களவை தேர்தலை யொட்டி தேனி மாவட்டத்தி ற்குட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டார்.
- இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வருகிற 31ந் தேதி வெளி யிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தேனி:
மக்களவை தேர்தலை யொட்டி தேனி மாவட்டத்தி ற்குட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டார்.
வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டு அவர் பேசியதாவது:-
மக்களவை தேர்தலையொ ட்டி தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேனி மாவட்டத்தில் வாக்கு ச்சாவ டிகள் பகுப்பாய்வு செய்ய ப்பட்டன. இதில் ஆண்டி பட்டி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 316 வாக்குச்சாவ டிகளில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.
பெரியகுளம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 297 வாக்குச்சாவ டிகளில் 7 வாக்குச்சாவடிகள் அமைவிடம், கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ள்ளன. போடி சட்டப்பே ரவை தொகுதியில் உள்ள 315 வாக்குச்சாவடிகளில் 18 வாக்குச்சாடிகள் அமை விடம், கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
28 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ள்ளன. வரைவு வாக்குச்சா வடி பட்டியல் கோட்டா ட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலக ங்கள், நகராட்சி அலுவலக ங்க ளில் உள்ள தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ள்ளன.
வரைவு வாக்குச்சாவ டிகள் குறித்த சந்தேகங்கள், திருத்தங்கள் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வருகிற 30ந் தேதிக்குள் எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம். இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வருகிற 31ந் தேதி வெளி யிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
- சின்னமனூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
- கண்காணிப்பு கேமரா சரியாக இயங்குகிறதா மற்றும் போலீசாரின் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
சின்னமனூர் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புறம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.114.29 லட்சம் மதிப்பீட்டில் சங்கிலி தேவன் குளம் புனரமைக்க ப்பட்டதையும், ரூ.65.97 லட்சம் மதிப்பீட்டில் 3.681 கி.மீ தூரத்திற்கு தார்சாலை அமைக்கும் பணிகளையும், சின்னமனூர் நகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு தங்கு தடை யின்றி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.28.58 கோடி மதிப்பீட்டில் தரைமட்ட நீர்தேக்க த்தொட்டி, பொன் நகர் பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க த்தொட்டி கட்டுமானப் பணிகளையும், கண்ண ம்மாள் கார்டன் பகுதியில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுமானப் பணிகளையும், குடிநீர் விநியோகத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகராட்சி திட்டப்பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வருவத ற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் கைதி பதிவேடு, முதல் தகவல் அறிக்கை, சமுதாயப் பணி பதிவேடு, நடப்புத்தாள் பதிவேடு, சுற்றுக்காவல் பதிவேடு, மாதிரி பணி பதிவேடு, சீதன பதிவேடு, பொது நாட்குறிப்பு பதிவேடு மற்றும் நடப்பு தாள் பதி வேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என ஆய்வு செய்தார்.
மேலும், கண்காணிப்பு கேமரா சரியாக இயங்கு கிறதா மற்றும் போலீசாரின் பணிகள் குறித்தும் கேட்ட றிந்தார்.
ஆய்வின்போது சின்ன மனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு, நகராட்சி ஆணையாளர் கோபிநாத், நகராட்சி பொறியாளர் பன்னீர், நகரமைப்பு ஆய்வாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோலிக்குண்டு விளையாடும் போது தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் ஏற்பட்டது.
- தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும் தெற்கு தெருவை சேர்ந்த பவித்ரன் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோலிக்குண்டு விளையாடும் போது தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று பவித்ரன் மற்றும் அவரது நண்பர்கள் மாரிமுத்து, வசந்த், ரிஷிக்கேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து கணேசனை கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.
படுகாயம் அடைந்த கணேசன் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ரன், வசந்த், ரிஷிக்கேஸ்வரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ராஜதானி கள்ளர்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
- எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
ஆண்டிபட்டி:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை சேர்ந்தவர் விஜய்பாபு (41). இவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ராஜதானி கள்ளர்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தேனி மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் விஜய்பாபு பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி, மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- வளர்ச்சி த்திட்ட ப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்திர விட்டார்.
தேனி:
தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அரண்ம னைபுதூர் பகுதியில், ரூ.301.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.18லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணி களையும், 15-வது நிதிக்குழு மானியம் 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகளையும்,
கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளையும், ரூ.3.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமையலறை பணிகளையும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவர்கள் கழிப்பறை கட்டிடத்தினை யும் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆசிரியர்கள் கழிப்பறை கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வின்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி, மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொடுவிலார்பட்டி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வரத்து வாய்க்கால் மற்றும் நீர் செறிவூட்டு குழி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வளர்ச்சி த்திட்ட ப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்திர விட்டார்.
- வெவ்வேறு சமூகம் என்பதால் பிரச்சினை ஏற்படும் என சில நாட்கள் கழித்து சொந்த ஊருக்கு அழைத்துச்செல்வ தாக கூறியுள்ளார்
- இந்தநிலையில் ஜெய ப்பிரகாசிற்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் பெங்களூரு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதா னப்பட்டி அருகே வேல்நகரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(42). இவருக்கும் பெங்களூரு சீனிவாச காலனியை சேர்ந்த மஞ்சுளா(35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூரில் திருமணம் நடைபெற்றது.
ஜெயப்பிரகாஷ் தங்கள் குடும்பத்தில் காதல் திருமணத்தை ஏற்று க்கொள்ள மாட்டார்கள். மேலும் வெவ்வேறு சமூகம் என்பதால் பிரச்சினை ஏற்படும். எனவே சில நாட்கள் கழித்து சொந்த ஊருக்கு அழைத்துச்செல்வ தாக கூறியுள்ளார். தான் சொந்த ஊரில் வீடு கட்டி வருவதாகவும், அதற்கு கடன் வாங்கியதாகவும் கூறியுள்ளார். எனவே மஞ்சுளாவிடம் இருந்து ரூ.18 லட்சம் பல தவணைகளில் பெற்றுள்ளார். மேலும் அவரிடம் 12 பவுன் நகையையும் நைசாக பேசி பெற்றுள்ளார்.
இந்தநிலையில் ஜெய ப்பிரகாசிற்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் பெங்களூரு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் ஜெயப்பிரகாஷ் சொந்தஊருக்கு திரும்பிவிட்டார். அவரை தேடி மஞ்சுளா வந்தபோது ஜெயப்பிரகாஷ், அவரது தம்பி மதுகுமார், தந்தை பழனிச்சாமி, உறவினர்கள் மலர், திருநாவுக்கரசு, முருகேசன் ஆகியோர் அவ தூறாக பேசி மஞ்சுளாவை தாக்கி வெளியேற்றினர்.
இதுகுறித்து ஜெய மங்கலம் போலீசில் மஞ்சுளா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- பி.எட். மாணவிகளுக்கு பிரைட் பிகினிங்க்ஸ் என்ற தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
தேனி:
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்மு றை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் பி.எட். மாணவிகளுக்கு பிரைட் பிகினிங்க்ஸ் என்ற தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பியூலாராஜினி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினரை உதவி பேராசி ரியர் யோகாஅஞ்சுஸ்ரீ அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பெரியகுளம் டி.எஸ்.பி. கீதாதிருவாசகம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்படுவது குறித்து பேசினார். கவுரவ விருந்தினராக தமிழ்நாடு என்.ஜி.ஓ. பெடரேசன் பொதுச் செயலாளர் ராஜன் கலந்து கொண்டு பேசினார். கல்லூரி செயலாளர் குணசேகரன் வாழ்த்தி பேசினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உதவி பேராசிரியர் ஜீவிதா நன்றி கூறினார்.
- தேவதானப்பட்டி அருகே தேவாங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவ- மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.
- மாணவர்களை வரவேற்கும் விதமாக 2ம் & 3ம் ஆண்டு மாணவ- மாணவி்கள் நடனமாடினர் பிறகு கல்லூரி முதல்வர் கல்லூரியின் சிறப்பு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே தேவாங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவ- மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தலைவர் உமையாள் முருகேசன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி்விழாவினை தொடங்கி வைத்தார்.
செயலாளர் காமராஜர் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மாணவர்களை வரவேற்கும் விதமாக 2ம் & 3ம் ஆண்டு மாணவ- மாணவி்கள் நடனமாடினர். கல்லூரி முதல்வர் வேல்விழி கல்லூரியின் சிறப்பு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தார்.
துணை முதல்வர் ராஜீவ் வரவேற்புரை வழங்கினார். துறைத் தலைவர்கள் ஸ்டெல்லா மேரி, சாகுல் ஹமீத், கதிரேசன், ரதிமாலா ஆகியோர் அவர்தம் துறைசார்ந்த விபரங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தனர். கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெற்று சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவி்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர். முதலாம் ஆண்டு துறைத்தலைவர் இலக்கியாதேவி நன்றியுரை வழங்கினார். மாணவர்கள் மற்றும்பெற்றோர்களும் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர்போஸ் விழாவினை தொகுத்து வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
- போடி புதூர் வடிவேல் நகரை சேர்ந்த நர்சிங் மாணவி மற்றும் ஒரு பெண் மாயமானார்கள்.
- புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி புதூர் வடிவேல் நகரை சேர்ந்த பழனிவேல் மகள் மாரீஸ்வரி(17). இவர் சத்தியமங்கலத்தில் நர்சிங் படித்து வந்தார். சம்பவத்தன்று உடல்நிலை சரியில்லை எனக்கூறி சொந்தஊருக்கு வந்தார். வீட்டில் இருந்த மாரீஸ்வரி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருநாக்கமுத்தன்பட்டி இந்திராகாலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லபாண்டி மனைவி மதுபாலா(24). இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. செல்லபாண்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அப்போதுமுதல் குழந்தை அவரது தாத்தா வீட்டில் வசித்து வந்தது.
சம்வத்தன்று மதுபாலா ஆஸ்பத்திரிக்கு சென்று ஊசிபோட்டு வருவதாக கூறிச்சென்று மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை மச்சக்காளை கொடுத்த புகாரின்பேரில் கூடலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பள்ளி நுழைவாயிலில் காய்கறி மார்க்கெட் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள இறைச்சி கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டு வருகின்றன.
- அவ்வப்போது மழை பெய்து வருவதால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி நகரின் மையப்பகுதியில் அரசு உதவிபெறும் ஆரம்பபள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி காய்கறி மார்க்கெட் அருகில் செயல்படுகிறது. 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளி நுழைவாயிலில் காய்கறி மார்க்கெட் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள இறைச்சி கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.
இதனால் டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. பள்ளியின் அருகிலேயே 200 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகமும் குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் , மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தாமரைக்குளம் பகுதியில் ஒருவீட்டில் பணம் மற்றும் பழமையான முருகன், வள்ளி-தெய்வானை சிலைகளை திருடிச்சென்றனர்.
- கொள்ளை நடந்த வீடுகளில் கைரேகை மற்றும் தடயங்களை கொண்டு ஆய்வு செய்தனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டில் புகுந்த திருட்டுகும்பல் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது. இதனைதொடர்ந்து தாமரைக்குளம் பகுதியில் பழனிவேல் என்பவரது வீட்டில் பணம் மற்றும் பழமையான முருகன், வள்ளி-தெய்வானை சிலைகளை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தனிப்படை அமைத்து கைவரிசை காட்டிய கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். கொள்ளை நடந்த வீடுகளில் கைரேகை மற்றும் தடயங்களை கொண்டு ஆய்வு செய்தனர். மேலும் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய 5 நபர்களின் விபரங்களை சேகரித்த போது அவர்கள் வீடுகளில் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து 2 சிறுவர்கள் மற்றும் மதுசூதனன்(22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் மதுசூதனன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2 சிறுவர்களையும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். அவர்களிடமிருந்து சிலைகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட சிலைகள் கோவில்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதா என உண்மை தன்னை அறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அதன்பின்னரே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.






