என் மலர்
தேனி
- சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
- ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் சோகத்துடன் கதறி அழுதது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அப்பிபட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கும் ஐஸ்வர்யா (24) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரபாகரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினர். இதைப் பார்த்ததும் அவரது 2 குழந்தைகளும் கதறி அழுதனர்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஓடைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் சோகத்துடன் கதறி அழுதது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
- சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- எங்கு தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பெரிய குளம் போலீசில் புகார் அளித்தார்.
பெரியகுளம்:
பெரியகுளத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 49), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வெளியே சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பெரிய குளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
- காலையில் பொது அறிவு மற்றும் மதியத்தில் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 2367 ஆண்கள், 517 பெண்கள் என மொத்தம் 2884 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 618 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேனி:
தமிழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு வீரர்களுக்கு ஆட்கள் சேர்ப்பதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு ஆணையம் எழுத்து தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
தேனி மாவட்டத்தில் 3488 பேர் விண்ணப்பி த்திருந்தனர். இதற்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றது. காலையில் பொது அறிவு மற்றும் மதியத்தில் தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 2367 ஆண்கள், 517 பெண்கள் என மொத்தம் 2884 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
ெமாத்தம் 604 பேர் ஆப்செண்ட் ஆகினர். இதில் 477 ஆண்களும், 127 பெண்களும் அடங்குவார்கள். தேர்வு மையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 618 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை காவலர் பயிற்சி கல்லூரி பயிற்சித்துறை தலைவர் தமிழ்சந்திரன், தணிக்கை அலுவலராக நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை நேரடியாக பார்வையிட்டார் என தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் ேடாங்கரே தெரிவித்துள்ளார்.
- பாரதி நகரில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பூங்கா அமைக்கும் பணிகளையும் பேரூராட்சி அலுவல கத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- ஆய்வின்போது அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேனி:
பெரியகுளம் அருகே தென்கரை, வடுகபட்டி, தேவதானப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்கரை பேரூராட்சி பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஹவுசிங்போர்டு காலனியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் கட்டுமான பணிகள், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் குழாய் அமைக்கும் பணிகள், கைலாசப்பட்டி 12-வது வார்டு பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது கழிப்பறை கட்டுமான பணி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ஸ்டேட்பேங்க் காலனியில் ரூ.11.75 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதித்தல் பணி, பாரதி நகரில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பூங்கா அமைக்கும் பணிகளையும் பேரூராட்சி அலுவல கத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடுகபட்டி பேரூராட்சி பகுதியில் பொதுநூலகம் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டதையும், பெரியகடை வீதியில் 0.980 கி.மீ தூரத்திற்கு ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் சாலை புனரமைக்கும் பணிகளையும், மற்றும் பொதுநூலகத்தில் வாசகர்களுக்கு வைக்க ப்பட்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் வருகை பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டு வாசகர்களுக்கான புத்தகங்க ளை முறையாக பராமரித்திட நூலக அலு வலருக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதியில் மஞ்சளாறு சாலை பகுதியில் ரூ.240 லட்சம் மதிப்பீட்டில் 0.025 கி.மீ தூரத்திற்கு பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4-வது வார்டில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நாடக மேடையினையும், மற்றும் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறைகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடி க்கைகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) பாலசுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் மணிமாறன், செயல் அலுவலர் நிர்வாகம் (பொறுப்பு) சுப்பிரமணியன், செயல் அலுவலர்கள் மோகன்குமார்(தென்கரை), விஜயா (தேவதானப்பட்டி), சுரேஷ்(வடுகபட்டி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கேரளாவிற்கு ஏலத்தோட்ட தொழிலா ளர்களை ஜீப்பில் அழை த்துச் செல்லும் வேலை பார்த்து வருகிறார்.
- சம்பவத்தன்று தனது வாகனத்தில் ஆட்களை இறக்கிவிட்டு கம்பம் மெட்டு மலைச்சாலையில் வந்தபோது கேரளா மாநிலம் நெடுங்கண்டத்தை சேர்ந்த 4 பேர் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வாக னத்தை பின் தொடர்ந்து வந்தனர்.
கம்பம்:
கம்பம் அருகில் உள்ள காமயக்கவுண்டன் பட்டி யை சேர்ந்தவர் ஜெயராஜ் (54). இவர் கேரளாவிற்கு ஏலத்தோட்ட தொழிலா ளர்களை ஜீப்பில் அழை த்துச் செல்லும் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று தனது வாகனத்தில் ஆட்களை இறக்கிவிட்டு கம்பம் மெட்டு மலைச்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது கேரளா மாநிலம் நெடுங்கண்டத்தை சேர்ந்த பிரபு (29), ஜெயபால் (29), ெஜயபாண்டி (22), மகேஷ் (24) ஆகிய 4 ேபரும் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வாக னத்தை பின் தொடர்ந்து வந்தனர்.
அவர்கள் ஜெயராஜின் வாகனத்தை இடிக்கும் வகையில் ஆபத்தான முறையில் பயணித்ததால் இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மற்றும் அம்சாபுரம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மாமனார்கள்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த குழந்தை மனைவி பழனியம்மாள் (53). இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார். அதன் பிறகு மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் அருகில் உள்ள அம்சாபுரம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மனைவி பிரவீனா (24). இவர் வேலுச்சாமிக்கு 2வது மனைவியாவார். இவர்களுக்கு 1 பெண்குழந்தை உள்ளது. சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவர் சம்பவத்தன்று பத்ரகாளிபுரம் ரோடு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த வாகனம் இவர் மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தேனி:
போடி அருகில் உள்ள குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (43). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று பத்ரகாளிபுரம் ரோடு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சங்கரபாண்டி யன் என்பவர் ஓட்டி வந்த வாகனம் இவர் மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி லலிதா கொடுத்த புகாரின் பேரில் பழனி செட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு தொகுப்பு வீடுகளை வழங்கி அவர்களுக்கு ரேசன்கார்டு வழங்கியது. ஆனால் அரசு வழங்கிய குடியிருப்புகளில் இருந்து ஒரு தரப்பினர் இவர்களை விரட்டிவிட்டுள்ளனர்.
- மழை மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கி இவர்கள் கடும் இன்னலுக்கு நடுவில் குகையில் வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வருசநாடு மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக அரசு தொகுப்பு வீடுகளை வழங்கி அவர்களுக்கு ரேசன்கார்டு வழங்கியது. ஆனால் அரசு வழங்கிய குடியிருப்புகளில் இருந்து ஒரு தரப்பினர் இவர்களை விரட்டிவிட்டுள்ளனர்.
இதனால் அந்த குடியிருப்புகளில் தங்கமுடியாமல் சுமார் 10 குடும்பத்தினர் வனப்பகுதியில் உள்ள பாறை இடுக்குகளில் வசித்து வருகின்றனர். மழை மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கி இவர்கள் கடும் இன்னலுக்கு நடுவில் குகையில் வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் வனப்பகுதியில் தேன் மற்றும் மூலிகைகளை சேகரித்து நகர்பகுதியில் விற்று வருகின்றனர். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தங்கள் குடும்பத்திற்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
தற்போது இந்த மலைக்குகையில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்ற போதிலும் 3 வேளை உணவுகூட கிடைக்கவில்லை என அவர்களின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், அரசு எங்களுக்காக கட்டி கொடுத்த வீடுகளில் சில நாட்கள் மட்டுமே வசித்து வந்தோம். அதன்பிறகு எங்களை ஒருதரப்பினர் அடித்து விரட்டிவிட்டனர். இதனால் கடந்த 6 மாதங்களாக மலைக்குகையில்தான் வசித்து வருகிறோம். இங்கு வானமே கூரையாக எங்கள் வீடு உள்ளது. இரவு நேரங்களில் வனவிலங்குகள் தொல்லை இருப்பதால் குழந்தைகளை காப்பாற்ற தூக்கம் இல்லாமல் விலங்குகளை விரட்டி வருகிறோம்.
பகல் நேரத்தில் நாங்கள் விறகு எடுத்துவர செல்கிறோம். அதனை வைத்து உணவு சமைத்து வருகிறோம். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏதேனும் உடல்நிலை பாதிக்கப்பட்டால் கூட ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லை. வனப்பகுதியில் கிடைக்கும் மூலிகைகளை வைத்து மருத்துவம் செய்கிறோம். நாங்கள் குடியிருந்த வீடுகளில் மின்இணைப்பு கொடுக்கப்படவில்லை. இப்பகுதியை சேர்ந்த பலருக்கு ஆதார் எண் கூட கிடையாது.அதனால்தான் மின்இணைப்பு கொடுக்கமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு சாதாரண மனிதனுக்கு தேவையான உண்ணஉணவு, உடுத்த உடை, இருப்பிடம் ஆகிய 3-ம் எங்களுக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.
எனவே அதிகாரிகள் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து குடியிருப்பு வசதி மற்றும் எங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.
- அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- மொத்தம் 426 பள்ளிகளில் பயிலும் 22,712 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தேனி:
முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன்முன்னிலையில் கம்பம் முகையதீன் ஆண்டவர்புரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தெப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் முன்னிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி அரசு மாதிரிப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்தனர். கிராமப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும், பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் தமிழ்நாடு முதல் -அமைச்சருக்கு கிடைக்கப்பெற்றதன் காரணமாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி தேனி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 310 பள்ளிகளில் பயிலும் 16,173 மாணவ, மாணவியர்களும், ஊரக பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதிகளில் 52 பள்ளிகளில் பயிலும் 2467 மாணவ, மாணவியர்களும், நகராட்சி பகுதிகளில் 40 பள்ளிகளில் பயிலும் 2106 மாணவ, மாணவியர்களும், நகர் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதிகளில் 24 பள்ளிகளில் பயிலும் 1966 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 426 பள்ளிகளில் பயிலும் 22,712 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
- சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.
சின்னமனூர்:
சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் தலைமையில் எம்.ஜி.ஆர். அணி தேனி மாவட்ட இணை செயலாளர்பிச்சைக்கனி முன்னிலையில், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.
இதில் சின்னமனூர்நகர் அவைத்தலைவர் இளநீர்ராமர், தேனி மாவட்ட பிரதிநிதி மதிவாணன், வக்கீல்பரிவு பொறுப்பாளர்ஜெகன்ராஜ் மற்றும் சின்னமனூர் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கம்பத்தில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது.
- விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நகர்பகுதியில் ஊர்வலமாக வந்தனர்.
கம்பம்:
கம்பத்தில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது. பேரணியை கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கம்பம் பள்ளத்தாக்கு ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நகர்பகுதியில் ஊர்வலமாக வந்தனர். ரோட்டரி கிளப் கம்பம் நகர தலைவர் டாக்டர் வேல்பாண்டியன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- ஒரே ஒரு கடை உள்ள நிலையில் அதற்காக வேளாண்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரும் பொருப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்கு ஒரு உதவியாளரும் உள்ளார்.
- அனை த்து கடைகளை யும் திறந்து விற்பனை நடைபெற அதி காரிகள் நட வடிக்கை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ரெயில்நிலையம் செல்லும் சாலையில் 100 அடி ரோட்டில் உழவர் சந்தை உள்ளது. சந்தை ெதாடங்க ப்பட்டபோது அனைத்து கடைகளும் இயங்கிவந்த நிலையில் பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது.
தமிழக அரசு புதிதாக பொறுப்பேற்றபின் நலிவடைந்த நிலையில் உள்ள உழவர்சந்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை ஒரே ஒரு கடையுடன் உழவர் சந்தை இயங்கி வருகிறது. உரிய பராமரிப்பு, அடி ப்படை வசதிகள் எதுவும் இல்லாததாலும், போக்கு வரத்து வசதிகள் இல்லாத தாலும் விவசாயிகள் இங்கு கடை வைப்பதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
ஒரே ஒரு கடை உள்ள நிலையில் அதற்காக வேளாண்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரும் பொருப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு உதவியாளரும் உள்ளார். ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துகிறீர்கள் என்ற காமெடியை போல மக்கள் வராத இந்த உழவர்சந்தைக்கு தினமும் அலுவலகம் திறக்கப்பட்டு காய்கறிகள் விலைப்பட்டியில் வைக்கப்படுகிறது.
விவசாயிகள் யாரும் ஆர்வம் காட்டாததால் இங்கு கடை வைத்திருக்கும் ஒருவரும் சில மணிநேரம் இங்கு அமர்ந்துவிட்டு பின்னர் தெருத்தெருவாக காய்கறிகளை விற்பனைக்கு எடுத்துச்சென்றுவிடுகிறார். குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறிகள் கிடைக்கவேண்டும். விவசாயிகள் எந்தவித இடைத்தரகரும் இன்றி தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உழவர்சந்தை திறக்கப்ப ட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் உழவர் சந்தை இங்கு மக்களுக்கு பயன்இல்லாத நிலையில் இருப்பதால் இங்கு அனை த்து கடைகளை யும் திறந்து விற்பனை நடைபெற அதி காரிகள் நட வடிக்கை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






