என் மலர்
தேனி
- கிணற்றில் உள்ள மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் உத்தமபாளையம் அம்மாபட்டியைச் சேர்ந்தவரை வேலைக்கு அழைத்தார்.
- இந்நிலையில் சம்பவத்தன்று மோட்டாரை பழுது பார்க்க சென்றவர் கிணற்றில் தவறி விழுந்தார்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே எல்லப்பட்டியைச் சேர்ந்தவர் பாலு. இவரது தோட்டத்து கிணற்றில் உள்ள மோட்டாரில் பழுது ஏற்பட்டது. பழுதை சரிபார்ப்பதற்கு உத்தமபாளையம் அம்மாபட்டியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 45) என்பவரை வேலைக்கு அழைத்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மோட்டாரை பழுது பார்க்க சென்ற ஆனந்த் கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி ஆனந்தை மீட்டனர்.
கிணற்றில் தவறி விழுந்ததில் ஆனந்துக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை அதிகம் நடைபெற்று வருகிறது.
- இதனால் போதை ஆசாமிகளால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளம் வருவாய் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெரியகுளம் நகராட்சி, 5 பேரூராட்சி மற்றும் 17 ஊராட்சி பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுப்பத ற்காக பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா தலைமையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடை பெற்றது.
இந்த கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மன்ற உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து காவல்துறையிடம் தெரிவித்தனர். இதில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை அதிகம் நடைபெறுவ தாகவும், இதனால் போதை ஆசாமிகளால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக மக்கள் கூடும் இடங்களான தென்கரை காந்தி சிலை நிறுத்தம், வைகை அணை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அனுமதி பெற்று மது விற்பனை நடைபெற்று வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க முறைகேடாக கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்ப னையை தடுத்து நிறுத்த இரவு ரோந்து பணியையும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும், முக்கிய இடங்களில் புற காவல் நிலையங்கள் அமைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், 2ம் ஆண்டு தொடக்க விழாவுமாக கடந்த 26 ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- கோவில் வளாகத்தில் இருந்து தேர்பவனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வைகை சாலை சந்திப்பு வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டியில் உள்ள அடைக்கல மாதா தேவாலயம் பழமை வாய்ந்தது. இந்த தேவாலயத்திற்கு கடந்த ஆண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அர்ச்சிப்பு பெருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், 2ம் ஆண்டு தொடக்க விழாவுமாக கடந்த 26 ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நவநாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதனை ெதாடர்ந்து விசேஷ திருப்பலி கோவிலில் நடைபெற்று, அடைக்கலமாதா சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது .கோவில் வளாகத்தில் இருந்து தேர்பவனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வைகை சாலை சந்திப்பு வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது.
அதனை தொடர்ந்து அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. விழா நிகழ்ச்சிகளுக்கு தேனி மாவட்ட அருள் தந்தை முத்து தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சேவா மிஷனரி அருள் சகோதரிகள், தேனி காணிக்கை அருட் சகோதரிகள், கமலவை அருட் சகோதரிகள் மற்றும் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவ பெருமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- கடந்த 3 மாதங்களாக இவர் வனத்துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.
- கடந்த சில நாட்களாக ஊருக்குள் வந்தது தெரியவரவே வனத்துறையினர் அவரை பிடிக்க சென்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் சின்னமனூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வனவேட்டையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர்.
தப்பி ஓடிய மன்னூத்து பகுதியை சேர்ந்த சவுந்திரபாண்டியன் என்பவரை தேடி வந்தனர். கடந்த 3 மாதங்களாக இவர் வனத்துறையினரிடம் சிக்காமல் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக ஊருக்குள் வந்தது தெரியவரவே வனத்துறையினர் அவரை பிடிக்க சென்றனர். வீட்டில் இருந்த சவுந்திரபாண்டியனை விசாரணைக்காக ஜீப்பில் அழைத்துச்சென்றனர்.
அப்போது அண்ணாநகரில் குபேந்திரன் என்பவர் வனத்துறையினரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி சவுந்திரபாண்டியனை விடுவிக்குமாறு கூறினார். ஆனால் வனத்துறையினர் விடாததால் தொடர்ந்து மிரட்டும் தோணியில் பேசினார். இதுகுறித்து வனவர் ஜெயக்குமார் கண்டமனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் குபேந்திரன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடைகளும், ரூ.8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை ஆகியவை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ளது.
- புதிய கட்டிடங்கள் மற்றும் பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடைகள் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. புதிய ரேஷன் கடைகளை ஆண்டிபட்டி எம்.எஎல்.ஏ. மகாராஜன் திறந்து வைத்தார்.
சில்வார்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, டி. சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடைகளுக்கான கட்டிடம், கன்னியப்பிள்ளை பட்டி ஊராட்சி வரதராஜபுரம் ரோடு பிரிவில் ரூ.8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை ஆகியவை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ளது.
புதிய கட்டிடங்கள் மற்றும் பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், ஆண்டிபட்டி நகர செயலாளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன், டி.சுப்புலாபுரம் ஊராட்சி தலைவர் அழகுமணி, ராஜகோபாலன்பட்டி ஊராட்சித் தலைவர் வேலுமணி மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில், இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
- காலதாமதமின்றி ஆய்வு முடிவுகளை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் ஷஜீவனா வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தேனி:
தேனி மாவட்டம் ரத்தினம்நகர் பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேனி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய அரசால் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் (இ.நாம்) விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில், இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், சின்னமனூர் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இ.நாம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
முதல் கட்டத்தில், விவசாயிகளின் விளைபொருள் வாகனங்களில் கொண்டுவரப்பட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு லாட் உருவாக்கம் செய்யப்பட்டதையும்,
இரண்டாவது கட்டத்தில், விளைபொருட்களின் மாதிரி மற்றும் தரம் சோதனை ஆய்வாளர்களால் (Assay Analyst) பரிசோதிக்கப்பட்டதையும், மூன்றாம் கட்டத்தில், மின்னணு முறையில் இணையதளத்தில் ஏலம் மேற்கொண்டதையும்,
நான்காவது கட்டத்தில், விளைபொருட்களின் எடை சரிபார்க்கப்பட்டு விலைப்பட்டியல் உருவாக்கப்பட்டு விற்பனை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதையும், இறுதியாக, விளைபொருட்களுக்கான தொகையானது வங்கி காசோலை போன்ற முறையில் உரிய தொகை கிடைக்கப்பெற்ற பிறகு விளைபொருட்கள் வெளியே எடுத்து செல்வது வரை கணினியில் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டதையும், விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டத் தொகை செலுத்திய நபர்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
விளைபொருட்களை எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி மற்றும் போக்குவரத்து செலவினங்களை குறைக்கும் நோக்கில், விவசாயிகளின் இருப்பிடம் மற்றும் தோட்டத்திற்கே அலுவலர்கள் நேரில் சென்று, இ.நாம் செயலி மூலம் விற்பனை செய்து கொடுக்கப்படும் என்கிற விற்பனை திட்டத்தினை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடம் திட்டத்தில் மேற்கொண்ட பரிவர்த்தனை, அதன் பயன்பாடுகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்படும் வேளாண் விளைபொருளின் விவரங்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் பொருளீட்டுக்கடன் தொடர்பான பதிவேடுகளையும், விதை பரிசோதனை நிலைய ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் அதனை பராமரிக்கும் முறை குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
விதைமாதிரிகள் உரிய முறையில் விவசாயிகளிடம் பெற்று காலதாமதமின்றி ஆய்வு முடிவுகளை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் ஷஜீவனா வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
- 2 ஆண்டுகள் முடியும் தருவாயில் இன்னும் கட்டிட பணி முழுமை பெறாமலும், பயன்பாட்டிற்கு வராமலும் தொய்வான நிலையில் உள்ளது.
- ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் இதுபோன்று பல்வேறு மக்களின் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் தேக்கம் அடைந்து வருகிறது.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தில் சுடுகாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 கோடியில் மின் மயானம் அமைப்பதற்கு ஆண்டிபட்டி பேரூராட்சி அடிப்படை வசதி திட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. இந்நிலையில் 2 ஆண்டுகள் முடியும் தருவாயில் இன்னும் கட்டிட பணி முழுமை பெறாமலும், பயன்பாட்டிற்கு வராமலும் தொய்வான நிலையில் உள்ளது.
கடந்த 4 மாதங்களுக்கு முன் தேனி மாவட்ட கலெக்டர் மின் மயான கட்டிட பணியை ஆய்வு செய்த நிலையிலும் கட்டிடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் இன்னும் காலதாமதம் ஏற்படுவதாக தெரிகிறது.
மேலும் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் இதுபோன்று பல்வேறு மக்களின் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக உள்ளது. அணைக்கு 94 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2237 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 46.74 அடியாக உள்ளது.
நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1614 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 302.98 மி.கன அடியாக உள்ளது.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 67.24 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 27.84 மி.கன அடியாக உள்ளது. பெரியாறு 17.6, தேக்கடி 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- எதற்காக இரும்பு வியாபாரியை கொல்ல முயன்றனர்? என போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
- சரியாக வெட்டினாயா? இல்லையா? அவர் உண்மையிலேயே இறந்து விட்டாரா? என கேட்டு தனது காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
தேனி:
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி வாசவி நகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபாலபாண்டியன் (வயது 55) பழைய இரும்பு வியாபாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது கடையில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த வேணுகோபாலபாண்டியன் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவரது மனைவி உமா மகேஸ்வரி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த அழகுமலை மகனான கார் டிரைவர் முத்து காமாட்சி (23), அவரது நண்பர்களான மூர்த்தி மகன் செல்வக்குமார் (23), லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கண்ணப்பன் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
எதற்காக இரும்பு வியாபாரியை கொல்ல முயன்றனர்? என போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-
வேணுகோபால பாண்டியனின் மகள் 16 வயதுடைய பிளஸ்1 மாணவியும், முத்து காமாட்சியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். மேலும் பெரியகுளத்தில் உள்ள பாட்டி வீட்டில் அவரை தங்க வைத்துள்ளனர். அங்கு சென்றும் முத்துகாமாட்சி மாணவியுடன் பேசி பழகி வந்துள்ளார்.
மேலும் மாணவி பயன்படுத்தி வந்த செல்போனையும் பெற்றோர்கள் பறித்துக் கொண்டனர். காதலுக்கு தொடர்ந்து இடையூறு செய்து வந்ததால் தந்தையை கொலை செய்ய மாணவி முடிவு செய்துள்ளார். இதனை தனது காதலனிடம் கூறியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று வேலை முடித்து தனியாக வந்து கொண்டு இருந்த இரும்பு வியாபாரி வேணுகோபால பாண்டியனை மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். ஆனால் அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடினர். அரிவாளால் வெட்டி விட்டு முத்து காமாட்சி தனது காதலிக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். சரியாக வெட்டினாயா? இல்லையா? அவர் உண்மையிலேயே இறந்து விட்டாரா? என கேட்டு தனது காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். போலீசார் முத்துகாமாட்சியின் செல்போனை வாங்கி பார்த்த போது மாணவி அனுப்பிய குறுந்தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வியாபாரியை அரிவாளால் வெட்டிய 3 பேர் மற்றும் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மகள் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- இவர் தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
- முத்துதேவன்பட்டி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் பைக் மோதியது.
சின்னமனூர்:
தேனி அருகே வீரபாண்டி கூழையனூரை சேர்ந்தவர் சிவா (வயது32). இவர் தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
முத்துதேவன்பட்டி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் பைக் மோதியது. இதில் காயம் அடைந்த சிவாவை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிவாவின் தந்தை சந்தானம் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
- இதனால் தனலட்சுமி கோபித்துக்கொண்டு விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
மேலசொக்கநாதபுரம்:
போடியை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் (வயது27). இவரது மனைவி தனலட்சுமி (25). இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர். அலெக்ஸ்பாண்டியன் முனிசிபல் அலுவலகத்தில் தெருவிளக்கு பொருத்தும் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இதனால் தனலட்சுமி கோபித்துக்கொண்டு விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். 2 பேரும் 2 மாதம் சேர்ந்து வாழ நீதிபதி அறிவுரை வழங்கி உள்ளார்.இந்த நிலையில் மீண்டும் தகராறில் ஈடுபட்ட அலெ க்ஸ்பாண்டியன் தனலட்சு மியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார். இது குறித்து போடி நகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து அலெக்ஸ்பா ண்டியனை கைது செய்தனர்.
- அணைகள் மற்றும் ஆறு, குளம், கண்மாய் ஆகிய நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது.
- மேற்கு தொடர்ச்சி மலை, கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
கூடலூர்:
தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. கோடை காலத்தை மிஞ்சும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
மேலும் அணைகள் மற்றும் ஆறு, குளம், கண்மாய் ஆகிய நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை, கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. 93 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 400 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர் மட்டம் 47.01 அடியாக சரிந்துள்ளது. வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூல வைகை ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து அடியோடு நின்று விட்டது.
எனவே மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 67.05 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.






