என் மலர்
தேனி
- சம்பவத்தன்று இரவு தனது வீட்டைபூட்டிவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள சகோதரர் வீட்டில் தூங்கசென்றார்.
- அறையில் இருந்த பித்தளை அண்டா, பானை, குத்துவிளக்கு, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும், ரூ.4500 பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது
தேனி:
தேனி அருகே அல்லி நகரத்தை சேர்ந்தவர் செல்வம்(51). இவர் பொம்மை விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது வீட்டைபூட்டிவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள சகோதரர் வீட்டில் தூங்கசென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்ப ட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிகிடந்தது. அறையில் இருந்த பித்தளை அண்டா, பானை, குத்துவிளக்கு, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும், ரூ.4500 பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- சம்பவத்தன்று பாண்டியை 3 பேரும் சேர்ந்து கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. (வயது 39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன், முத்தையா, காட்டுராஜா ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாண்டியை 3 பேரும் சேர்ந்து கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். காயமடைந்த பாண்டி சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் உதயராணி (50). இவருக்கும் கொடுவிலார் பட்டியை சேர்ந்த தனலெட்சுமி, கலைச்செல்வி ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் முன் விரோதம் இருந்துள்ளது. அவர் வீரபாண்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது தனலெட்சுமி, கலைச்செல்வி ஆகியோர் அவரை தகாத வார்த்தை களால் திட்டி தாக்கியுள்ள னர். காயமடைந்த உதய ராணி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வீரபாண்டி போலீ சில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இருவீட்டார் சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரிய வந்தது.
- அப்போது ஊர்நல அலுவலர் விசாரணை நடத்தியதில் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தது உறுதியானது.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டி பட்டி தாலுகா மூலக்க டையை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம்(25). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாழையூத்து பகுதி யில் வசிக்கும் தனது அக்கா மகளான ராஜேஸ்வரி(17) என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில் பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இருவீட்டார் சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரிய வந்தது.
5 மாத கர்ப்பிணியான ராஜேஸ்வரி ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். அப்போது ஊர்நல அலுவலர் வாசுகி அவரிடம் விசாரணை நடத்தியதில் மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தது உறுதியானது. இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசில் வாசுகி புகார் அளித்தார்.
அதன்பேரில் பாணடி ச்செல்வத்தை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் திருமணம் செய்து வைத்த அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை முதல் அணையிலிருந்து 300 கனஅடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
- கனமழையை தொடர்ந்து மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய நிலத்தை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
கூடலூர்:
மதுரை குடிநீர் திட்டத்தி ற்காக லோயர்கேம்ப் அருகே முல்லைபெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்றுமுன்தினம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்க ப்பட்டன.
நேற்று காலை 6 மணி யிலிருந்து 150 கனஅடி நீர்மட்டம் திறக்கப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டதால் மின்உற்பத்தி நடை பெறவில்லை. இந்நிலையில் இன்று காலை முதல் அணையிலிருந்து 300 கனஅடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பெரியாறு மின்உற்பத்தி நிலையத்தில் 22 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக உள்ளது. வரத்து 266 கனஅடி, இருப்பு 2285 மி.கனஅடி.
தேனி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையை தொடர்ந்து மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய நிலத்தை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கியுள்ளனர். வழக்கமாக இந்த மழை ஆடி மாதத்தில் பெய்யும். தற்போது தாமதமாக பெய்துள்ள நிலையிலும் விவசாய பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
இதேபோல் போடி, சோத்துப்பாறை, பெரிய குளம், வீரபாண்டி, தேவ தானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்தது. கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் குளித்து வருகின்றனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 46.95 அடியாக உள்ளது. நேற்று 157 கனஅடிநீர் வந்த நிலையில் இன்று 53 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலி ருந்து 69 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1615 மி.கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை யின்நீர்மட்டம் 68.22 அடியாகவும் உள்ளது.
கூடலூர் 1.2, சண்முகாநதிஅணை 5.6, உத்தமபாளையம் 1, போடி 1.6, வைகை அணை 3.8, சோத்துப்பாறை 4, பெரிய குளம் 1.4, வீரபாண்டி 3.4, அரண்மனைப்புதூர் 6.3, ஆண்டிப்பட்டி 5.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- எய்ட்ஸ் மற்றும் பால்வினைத்தொற்று, வளர் இளம் பருவ நலன், மனநலம், மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்பு ணர்வினை மாணவர்க ளிடம் ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
- தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் வழியாக பழனிசெட்டிபட்டி மேனகா மில் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது.
தேனி:
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் சார்பில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்பு ணர்வினை ஏற்படுத்தும் விதமாக கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவி கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.
எய்ட்ஸ் மற்றும் பால்வினைத்தொற்று, வளர் இளம் பருவ நலன், மனநலம், மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்பு ணர்வினை மாணவர்க ளிடம் ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் வழியாக பழனிசெட்டிபட்டி மேனகா மில் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இதில் 200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற முதல் 3 மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, 2ம் பரிசாக ரூ.7000, 3ம் பரிசாக ரூ.5000 மற்றும் 7 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது.
மேலும், சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் வினாடி வினா, நாடகம் மற்றும் ரீல் மேக்கிங் போட்டிகள் நடைபெற்றது.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாடு அலுவலர் முகமது பாரூக், தேனி தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
- சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் பருவமழை ஏமாற்றியதால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல்சாகுபடிக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் 2-ம் போக சாகுபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான போடி, அரசரடி, வெள்ளிஅணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இேதபோல் மஞ்சளாறு, சோத்துப்பாறை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக உள்ளது. வரத்து 3 கனஅடி, திறப்பு 150 கனஅடி. இருப்பு 2285 மி.கனஅடி. முல்லைபெரியாறு அணையிலிருந்து 400 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் மதுரை குடிநீர் திட்ட தடுப்பணை பணிக்காக 150 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக திறந்துவிடப்படுகிறது. இதனால் பெரியாறு மின்உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 46.98 அடியாக உள்ளது. வரத்து 157 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1619 மி.கனஅடியாக உள்ளது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான ஊத்தாம்பாறை மலைப்பகுதியில் வறண்டு கிடந்த ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மஞ்சளாறு அணை நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 67.40 அடியாகவும் உள்ளது.
வைகை அணை 17, மஞ்சளாறு 30, சோத்துப்பாறை 34, பெரியகுளம் 78, அரண்மனைப்புதூர் 23, சண்முகாநதிஅணை 1.4 மி.மீ மழையளவு பதிவானது.
- சம்பவத்தன்று வலி அதிகமானதால் விரக்தி அடைந்தவர் அரளிவிதையை அரைத்துகுடித்து மயங்கினார்.
- கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கூடலூர்:
கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டிைய சேர்ந்தவர் நாகராஜ் மனைவி செல்வி(48). இவர்கள் 2 பேரும் அதேபகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தங்கி வேலை செய்து வந்தனர். செல்விக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மாத்திரை வாங்கி பயன்படுத்தி வந்தார்.
சம்பவத்தன்று வலி அதிகமானதால் விரக்தி அடைந்த செல்வி அரளிவிதையை அரைத்துகுடித்து மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி சிவாஜிநகரை சேர்ந்தவர் ரமேஷ் மகள் ஜனனி(17). தனது உறவினர் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ஜனனி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சின்னமனூர் அருகே குச்சனூரை சேர்ந்தவர் கருப்பையா(55). கூலி தொழிலாளி. கேரளாவில் உள்ள தனது அண்ணனை பார்க்க செல்வதாக வீட்டில் கூறிச்சென்றார். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கருப்பையாவை தேடி வருகின்றனர்.
- ஒரு பகுதியில் பணிகள் முடிவடைந்த நிலையில் மற்றொரு பகுதியில் மணல் மூடைகளை அடுக்கி பணிகள் நடந்து வருகின்றன.
- தற்போது தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருவதால் நீர் திறப்பு 150 கனஅடியாக குறைக்கப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து மதுரைக்கு நேரடியாக குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு ரூ.1296 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கியது.
இதற்காக லோயர்கேம்ப் குறுவனூத்து பாலம் வண்ணாத்துறையில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. ஒரு பகுதியில் பணிகள் முடிவடைந்த நிலையில் மற்றொரு பகுதியில் மணல் மூடைகளை அடுக்கி பணிகள் நடந்து வருகின்றன.
நேற்று காலை இந்த தடுப்பணை பணிகளுக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இன்று காலை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாசனத்துக்காக 400 கன அடி நீர் திறக்கப்பட்டது. தற்போது தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருவதால் நீர் திறப்பு 150 கனஅடியாக குறைக்கப்பட்டது. பணிகள் விரைவில் முடிந்ததும் வழக்கம்போல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- போடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
- 7-ந் தேதி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் தேர் பவனி நடைபெற உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
செப்டம்பர் 8-ம் தேதி தேவமாதா பிறந்த தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து ஆர்.சி கிறிஸ்துவ தேவாலயங்களிலும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
போடி பார்க் நிறுத்தம் அருகில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் இருந்து தேவமாதா உருவம் பொறித்த கொடி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வழிபாட்டுடன் தேவாலய கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். 7-ந் தேதி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் தேர் பவனி நடைபெற உள்ளது.
- விழாவில் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, கேரளாவின் பாரம்பரிய உடைகளை உடுத்தி உற்சாகமாக கொண்டாடினார்கள்.
- கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
தேனி:
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம் ஓணம் பண்டிகை வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, கேரளாவின் பாரம்பரிய உடைகளை உடுத்தி, பாயாசம் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகமாக கொண்டாடினார்கள். மேலும் ஓணம் பண்டிகை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர்கள் மாதவன், டாக்டர் சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், சயின்ஸ் அண்டு ஹிமானீட்டீஸ் துறையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சித்ரா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தினர்.
- தேனி மாவட்டம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் விளைகின்ற குறுமிளகு மிகுந்த காரத்தன்மையும், மருத்துவ குணமும் நிறைந்ததால் உலக நாடுகளில் இதற்கு தனி மதிப்பு உள்ளது.
- போதிய மழையின்மை காரணமாக வறட்சியான சூழல் நிலவுவதால் மிளகு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் குறுமிளகு விளைச்சல் குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளது.
போடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளான குரங்கணி, டாப் ஸ்டேஷன், போடி மெட்டு மற்றும் கேரள பகுதிகளான வண்டல் மேடு, பியல்ராவ், பூப்பாறை, ராஜா காடு, கஜானா பாறை போன்ற பகுதிகளில் மிளகு அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் விளைகின்ற குறுமிளகு மிகுந்த காரத்தன்மையும், மருத்துவ குணமும் நிறைந்ததால் உலக நாடுகளில் இதற்கு தனி மதிப்பு உள்ளது.
ஏலத் தோட்டத்தில் உள்ள மரங்களில் துணைப் பயிராக வளர்க்கப்படும் குறுமிளகு மத்திய அரசின் நறுமண உற்பத்தி பொருள்கள் அமைப்பு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
ஏலக்காய் போன்று இதுவும் பணப்பயிர்களின் ஒன்றாக கருதப்படுவதாலும் முக்கிய ஏற்றுமதி பயிராக திகழ்வதாலும் மத்திய அரசு நறுமண ஏற்றுமதி பொருள்களின் விதிமுறைகள் இதற்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளில் போதிய மழையின்மை காரணமாக வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மிளகு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது
கடந்த 20 நாட்களுக்கு முன்பு 1 கிலோ ரூ. 430 முதல் முதல் ரூ.450 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ. 150 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்து முதல் தர மிளகு கிலோ ரூ. 650 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
வெளிச்சந்தையில் ரூ. 520 வரை விற்கப்பட்ட மிளகு தற்போது அதன் தரத்தை பொறுத்து ரூ.680 முதல் ரூ.700 வரை விற்கப்படுகிறது.
போதிய மழையின்மை காரணமாக மிளகு சாகுபடி குறைந்து வருவதால் மேலும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயர்ந்தாலும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.






