என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி அல்லிநகரம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளு வண்டி
- 111 பயனாளிகளுக்கு ரூ.104.88 லட்சம் மதிப்பீட்டில் தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது.
- இதனைத்தொடர்ந்து நகராட்சி 12-வது வார்டு பகுதியில் சமூக கழிப்பறை திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளு வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி தேனி சமதர்மபுரம் பகுதியில் உள்ள காமராஜர் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமை தாங்கினார். பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கணேசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பியும், தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தள்ளு வண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பாலமுருகன், கடவுள், திட்ட குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், நகர அமைப்பு அலுவலர் சலேத் அப்துல் நாசர், நகர அமைப்பு ஆய்வாளர் கணேஷ் குமார், சமுதாய அமைப்பாளர்கள் தமிழ்மணி, ராஜசெல்வி உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 111 பயனாளிகளுக்கு ரூ.104.88 லட்சம் மதிப்பீட்டில் தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நகராட்சி 12-வது வார்டு பகுதியில் சமூக கழிப்பறை திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்