search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமனூரில் பணத்தகராறில் வாலிபரை குத்திக்கொன்ற 2 பேர் கைது
    X

    கொலை செய்யப்பட்ட காபில்.


    சின்னமனூரில் பணத்தகராறில் வாலிபரை குத்திக்கொன்ற 2 பேர் கைது

    • ரூ.2 லட்சம் கடன் வாங்கியதை திருப்பி தர காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
    • காபில் பணத்தை திருப்பி கொடுக்காமல் தகராறு செய்து முகமது சமீரை தாக்கி உள்ளார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிக்குளம் பகுதியை சேர்ந்தவர் அபுதாகீர் மகன் காபில் (வயது21). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த காதர் மகன் முகமது சமீர் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த பணத்ைத திருப்பி தர காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    நேற்று இரவு காபில் முகமது சமீரிடம் கடனை திருப்பி தருவதாகவும், சின்னமனூர் வண்டிப்பேட்டை பகுதிக்கு வருமாறு கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து முகமது சமீர் அவரது உறவினர் அலாவுதீனுடன் அங்கு சென்றார்.

    அப்போது காபில் பணத்தை திருப்பி கொடுக்காமல் தகராறு செய்து முகமது சமீரை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் காபிலை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காபில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். கொலை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து காபிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பதுங்கி இருந்த முகமதுசமீர் மற்றும் அலாவுதீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×