search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேகமலை வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 2 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    மேகமலை வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 2 பேர் கைது

    • சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியில் அதிகளவில் மான், காட்டு மாடு வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது
    • அதன்படி வனக்காப்பாளர்கள் ரோந்து சென்ற போது மஞ்சள் நதிக் கண்மாயில் மானின் தலை, குடல் போன்ற உள் உறுப்புகள் சிதறி கிடந்தது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியான எரசக்கநாயக்கனூர் மலை மற்றும் பெருமாள் மலை பகுதியில் அதிகளவில் மான், காட்டு மாடு வேட்டையாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வனக்காப்பாளர்கள் ரோந்து சென்ற போது மஞ்சள் நதிக் கண்மாயில் மானின் தலை, குடல் போன்ற உள் உறுப்புகள் சிதறி கிடந்தது.

    இது குறித்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கன்னிச்சேர்வைபட்டி எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த தங்கம் மகன் சுரேஷ், நாகராஜ் மகன் பிரகாஷ், சின்னஓவுலாபுரத்தை சேர்ந்த ஜெயராஜ் மகன் சிவா, சின்னச்சாமி மகன் ராகுல் ஆகிய 4 பேரும் மானை வேட்டையாடியது தெரிய வந்தது.

    இதையடுத்து வேட்டை கும்பலை சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×