search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி-மூணாறு சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் -அதிகாரிகள் ஆய்வு
    X

    ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    போடி-மூணாறு சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் -அதிகாரிகள் ஆய்வு

    • சேதுபாரதம் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டது. போடி டி.எஸ்.பி. அலுவல கம் அருகே தொடங்கி மத்திய அரசின் நறுமண ப்பொருள் வாரிய அலுவல கம் வரை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
    • அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளும் போது வாகனங்கள் சென்று வர உரிய ஏற்பாடுகள் செய்யவும் பணிகளை தரமாக மற்றும் விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி-மதுரை அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் போடி - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை வாய்க்கால் அருகே சாலையின் குறுக்கே ரெயில் பாதை செல்கிறது.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கேரளாவுக்கு செல்லும் அத்தியாவசிய வாகனங்களும் நீண்ட நேரம் நின்று செல்லும் நிலை உள்ளது. எனவே இதனை தவிர்க்க நெடுஞ்சாலை த்துறை சார்பில் இரட்டை வாய்க்கால் பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    சேதுபாரதம் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டது. போடி டி.எஸ்.பி. அலுவல கம் அருகே தொடங்கி மத்திய அரசின் நறுமண ப்பொருள் வாரிய அலுவல கம் வரை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படு த்தும் பணிகள் முடிவடைந்து ராட்சத கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மதுரை கோட்ட தேசிய நெடு ஞ்சாலை பொறியாளர் முருகன், தேனி உதவி கோட்ட தேசிய நெடுஞ்சா லை பொறியாளர் ரம்யா, போடி சரக உதவி கோட்ட பொறியாளர் பிரவீன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பணிகள் மேற்கொள்ளும் போது வாகனங்கள் சென்று வர உரிய ஏற்பாடுகள் செய்யவும் பணிகளை தரமாக மற்றும் விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.

    Next Story
    ×