என் மலர்tooltip icon

    தேனி

    • கோம்பை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் பண்ணைப்புரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
    • அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் கோம்பை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் பண்ணைப்புரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை கடத்த முயன்ற பண்ணைப்புரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரபிரபு (வயது 48), கோம்பையைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் (37), பண்ணைப்புரம் 9-வது வார்டைச் சேர்ந்த இளங்குரமன் (43) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இவர்கள் எங்கிருந்து இந்த கஞ்சாவை கடத்தி வந்தனர்? யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • இதன் காரணமாக 2-வது உரம் தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.

    கூடலூர்:

    கேரள எல்லை யில்அமை ந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் முதல் போக நெல்சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும்.

    இந்த ஆண்டு போதிய அளவு நீர்மட்டம் இல்லாத போதும் 400 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்வதும், ஏமாற்றுவதுமாக இருந்தது.

    இதனால் நாற்றாங்கால் அமைத்த விவசாயிகள் கவலை அடைந்தனர். இருந்தபோதும் தொடர்ந்து நடவு பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது சாகுபடி செய்யப்பட்ட பயிரில் கதிர் தள்ளும் நிலையில் உள்ளது.

    எனவே தற்போது பெய்து வரும் மழை அதற்கு ஏதுவாக இருக்கும். இதன் காரணமாக 2-வது உரம் தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர். இதுமட்டு மல்லாது மானாவாரியாக அவரை, தட்டை, மொச்சை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் மழை இதற்கு செழித்து வளர உதவியாக இருக்கும்.

    ஏல தோட்ட விவசாயி களும் மழை இல்லாததால் தண்ணீரை டிராக்டர் மற்றும் லாரிகளில் பணம் கொடுத்து வாங்கி வாடிய பயிர்களை காப்பாற்றி வந்தனர்.

    ெதாடர் மழை காரண மாக ஏலச்செடிகள் மீண்டும் செழித்து வளர தொடங்கி உள்ளன.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.50 அடியாக உள்ளது. 515 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 47.23 அடியாக உள்ளது. 77 கன அடி நீர் வருகிறது. மதுைர மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.60 அடியாக உள்ளது. 82 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.06 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 49.6, தேக்கடி 19.2, போடி 0.2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 1.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • அய்யனார்புரத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் கனமழையால் மழைநீர் தேங்கியது.
    • வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் வந்துவிடுமோ என்று அச்சமடைந்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அய்யனார்புரத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வட்டாட்சியர் அலுவலகத்தையொட்டி அமைந்துள்ள இப்பகுதியில் மழை பெய்யும் சமயங்களில் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்பது தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இங்குள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தண்ணீர் அதிக அளவு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொள்வதால் மழை காலங்களில் எல்லாம் இப்பகுதி மக்கள் இதேபோன்ற துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் வந்துவிடுமோ என்று அச்சமடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 1,09,987 விண்ணப்பங்கள் மீது கள சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.
    • 72.21 சதவீத கள சரி பார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற 5ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப முகாம்களில் பெறப்பட்ட 3,00,880 விண்ணப்பங்களில் 1,09,987 விண்ணப்பங்கள் மீது கள சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஷஜீவனா பொம்மைய கவுண்டன்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி மாவட்டத்தில் மொத்தம் 517 ரேசன் கடைகள் உள்ளன. அவற்றில் 4,32,038 குடும்ப அட்டைகள் உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல் கட்டமாக பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் வட்டத்தில் 24.07.2023 முதல் 4.08.2023 வரை நடைபெற்ற முகாமில் 1,49,188 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    2ம் கட்டமாக தேனி, ஆண்டிப்பட்டி மற்றும் போடி வட்டத்தில் 05.08.2023 முதல் 11.08.2023 வரை நடைபெற்ற முகாமில் 1,33,646 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18.08.2023 முதல் 20.08.2023 வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் 18,046 விண்ணப்பங்கள் என மொத்தம் 3,00,880 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இவற்றில் 3ல் ஒரு பங்கு என 1,09,987 விண்ணப்பங்கள் கள சரிபார்ப்பு பணிகளுக்கு அனுப்பட்டுள்ளது. கள சரிபார்ப்பதற்காக 517 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 72. 21 சதவீத கள சரி பார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற 5ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது.

    • தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
    • நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது.

    கூடலூர்:

    முல்லைப்ெபரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது.

    அணைக்கு நீர் வரத்து 620 கன அடியாக உள்ளது. நீர் மட்டம் 118.40 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 300 கன அடி நீர் திறக்கப்படுவதால் மின் உற்பத்தியும் நடந்து வருகிறது. நீர் இருப்பு 2339 மி.கன அடியாக உள்ளது.

    இதே போல் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 47.24 அடியாக உள்ளது. கடந்த 3 நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை 332 கன அடி நீர் வருகிறது.

    அணையில் இருந்து 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1650 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.20 அடியாக உள்ளது. வரத்து 141 கன அடி. இருப்பு 324.54 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 76.25 அடி. வரத்து 30 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 35.54 மி.கன அடி.

    மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரியாறு 1, தேக்கடி 0.2, வைகை அணை 54, கொடைக்கானல் 20 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • வண்ணாத்திபாறை துணை மின்நிலையத்தில் நாளை(4-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • காலை 10 மணிமுதல் மாைல 4 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    சின்னமனூர்:

    வண்ணாத்திபாறை துணை மின்நிலையத்தில் நாளை(4-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    எனவே அன்று காலை 10 மணிமுதல் மாைல 4 மணிவரை குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிபட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயர்கேம்ப், மேல்மணலாறு, கீழ்மணலாறு, ஹைவேவிஸ், மகாராஜாமெட்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

    • கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 52). இவர் குடும்பத்துடன் நெசவு வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (24) க்கும் தேனி மாவட்டம் கம்பம் அருகே சுக்காங்கால்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணராஜா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பேரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    கணவருடன் தனித்தகுடித்தம் நடத்தி வந்தார். இந்த நிலையில் அவரது மனைவிக்கு தெரியாமல் ரூ.3 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாலினி தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து ஷாலினியை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் காபில்கான் (வயது 22). இவர் பட்டபடிப்பு முடித்து விட்டு அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருந்தார். அவரது நண்பர் முகமது சமீரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் சமீரின் சகோதரி ஷபானா என்பவருடன் காபில்கான் செல்போனில் பேசி வந்துள்ளார்.

    இதனை ஷபானாவின் கணவர் அலாவுதீன் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இந்த நிலையில் வண்டிபேட்டை பகுதியில் காபில்கான் நின்று கொண்டு இருந்தபோது முகமது சமீர் மற்றும் அலாவுதீன் ஆகியோருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் காபில்கானை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டினர். மேலும் உடலில் சரமாரியாக குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து சின்னமனூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை வழக்கில் தொடர்புடைய முகமது சமீர், அலாவுதீன், ஷபானா ஆகிய 3 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

    • மூங்கிலாற்று பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடித்து திரும்பிய தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் புலிகள் நடமாட்டத்தை பார்த்துள்ளனர்
    • டைமுக் பகுதியில் புலி நடமாடியதால் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பீதி அடைந்தனர்.

    கூடலூர்:

    கேரள-தமிழக எல்லையான குமுளி அருகே மூங்கிலாற்று பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடித்து திரும்பிய தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் புலிகள் நடமாட்டத்தை பார்த்துள்ளனர். இதுகுறித்து வண்டிபெரியாறு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் 5-ம் நம்பர் தேயிலை தோட்டம் அருகே மீண்டும் புலி நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை பார்வையிட்ட வனத்துறையினர் அங்கு காமிரா பொருத்தியுள்ளனர். இதன்மூலம் புலி நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே டைமுக் பகுதியில் புலி நடமாடியதால் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பீதி அடைந்தனர். அந்த புலியை வனத்துறையினர்கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். எனவே தற்போது குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலியை விரைவில் பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரவிந்த் தனது தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார்.
    • வயலில் மின்சார வயர்கள் தாழ்வாக சென்று கொண்டிருந்தது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள பங்களாபட்டி பெரியார்காலனியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 34). இவர் பெரியகுளம் நகராட்சி கழிவுநீர் நீருந்து பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஹேமாவதி (30). இவர்களுக்கு லக்ஷன் (3) என்ற மகனும், ஜெயஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர்.

    அரவிந்த் தனது தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். நேற்று இப்பகுதியில் பலத்த மழை பெய்தநிலையில் வயல் பகுதியில் தண்ணீர் தேங்கியது. மேலும் வயலில் மின்சார வயர்கள் தாழ்வாக சென்று கொண்டிருந்தது. இதனை கவனிக்காமல் ஹேமாவதி வயலில் தேங்கிய தண்ணீரை அகற்ற சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

    இதை பார்த்த அவரது கணவர் தனது மனைவியை காப்பாற்ற சென்றார். இதனால் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. படுகாயம் அடைந்து கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விற்கப்பட்ட ஒரு காரில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் அது திருட்டு வாகனம் என தெரியவந்துள்ளது.
    • போலியான ஆவணங்களை தயாரிப்பது, வாகனங்களை திருடுவது, அதனை எவ்வாறு விற்று கைமாற்றுவது போன்ற நுட்பங்களை அறிந்து செயல்பட்டு வந்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    மதுரை மாவட்டம் கொடிகுளத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வம். இவர் 4 சக்கர வாகனங்கள் விற்பனை செய்வதாக இணையதளம் மூலம் விளம்பரம் செய்தார். இந்த விளம்பரத்தை பார்த்து தூத்துக்குடியை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் அன்புச்செல்வத்தை தொடர்பு கொண்டார்.

    அவர் தனது காரை ரூ.9.10 லட்சத்துக்கு விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்தார். அன்புச்செல்வத்துடன் அவரது கூட்டாளிகள் மதுரை கோச்சடையை சேர்ந்த முருகன், கொடி குளத்தை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் மதன்ராஜிடம் காரை விற்றனர். அந்த காரை தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு மதன்ராஜ் விற்றார்.

    இந்நிலையில் அந்த கார் திருட்டு கார் என தெரிய வரவே அதனை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மதன்ராஜ் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். இதேபோல் டிராக்டர் விற்பனை செய்வதாக கூறி அன்புச்செல்வம், அவரது நண்பர்கள் ஆகியோர் தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்த அயோத்திராமனை ஆண்டி பட்டி அருகில் உள்ள கொண்டம நாயக்கன்ப ட்டிக்கு வரவழைத்தனர்.

    அவரிடம் ரூ.4.70 லட்சம் பெற்றுக்கொண்டு டிராக்ட ரை விற்பனை செய்தனர். இதனை பெயர் மாற்றம் செய்வதற்கு சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக த்திற்கு கொண்டு சென்ற போது இது திருட்டு டிராக்டர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அயோத்திராமனும் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அன்புச்செல்வன் மற்றும் அவரது நண்பர்க ளான முருகன், ஆனந்த், மாரிமுத்து, முத்துப்பாண்டி, வேல்முருகன் ஆகிய 6 பேர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து ஆண்டிபட்டி டி.எஸ்.பி ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    விலை உயர்ந்த வாகன ங்களை திருடி அதனை ஓ.எல்.எக்ஸ் என்ற இணைய தளம் மூலம் இவர்கள் விற்று வந்துள்ளனர். விற்கப்பட்ட ஒரு காரில் இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் அது திருட்டு வாகனம் என தெரியவந்துள்ளது. இவர்கள் 6 பேரும் 3 குழுக்க ளாக பிரிந்து செயல்பட்டு வந்துள்ளனர். போலியான ஆவணங்களை தயாரிப்பது, வாகனங்களை திருடுவது, அதனை எவ்வாறு விற்று கைமாற்றுவது போன்ற நுட்பங்களை அறிந்து செயல்பட்டு வந்துள்ளனர்.

    இவர்களிடமிருந்து போலியான அரசின் ரப்பர் ஸ்டாம்பு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ள்ளன. வாகனத்தின் என்ஜின்நம்பர், சேஸ்நம்பர், ஆர்.சி.புக் போன்ற அனை த்து ஆவணங்களையும் இவர்களே போலியாக தயார் செய்துள்ளனர். விலை உயர்ந்த கார், டிராக்டர், ஜே.சி.பி வாக னத்தை இக்கும்பல் திருடி வந்துள்ள னர். எனவே பொதுமக்கள் இணையதளம் மூலம் வாகனங்கள் விற்கப்படும் என்ற அறிவிப்பு வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார். கைது செய்யப்பட்ட 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்த ப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டனர். இந்த கும்பலுடன் வேறுயாரேனும் கொள்ளை யில் ஈடுபட்டுள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமணந்தொழு அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக பேசினார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை - மயிலை ஊராட்சிக்குட்பட்ட குமணந்தொழு அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாதவன் தலைமை வகித்தார்.ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் சிறப்பு அழைப்பாளராக விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

    மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக பேசினார். இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் வக்கீல்சுப்பிரமணி, தங்கப்பாண்டி, ஒன்றிய குழு தலைவர் சித்ரா சுரேஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபாகரன், மச்சக்காளை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாடசாமி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாடசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×