search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமுளி அருகே புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
    X

    புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் காமிரா பொருத்திய காட்சி.

    குமுளி அருகே புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

    • மூங்கிலாற்று பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடித்து திரும்பிய தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் புலிகள் நடமாட்டத்தை பார்த்துள்ளனர்
    • டைமுக் பகுதியில் புலி நடமாடியதால் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பீதி அடைந்தனர்.

    கூடலூர்:

    கேரள-தமிழக எல்லையான குமுளி அருகே மூங்கிலாற்று பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடித்து திரும்பிய தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் புலிகள் நடமாட்டத்தை பார்த்துள்ளனர். இதுகுறித்து வண்டிபெரியாறு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் 5-ம் நம்பர் தேயிலை தோட்டம் அருகே மீண்டும் புலி நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை பார்வையிட்ட வனத்துறையினர் அங்கு காமிரா பொருத்தியுள்ளனர். இதன்மூலம் புலி நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே டைமுக் பகுதியில் புலி நடமாடியதால் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பீதி அடைந்தனர். அந்த புலியை வனத்துறையினர்கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். எனவே தற்போது குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலியை விரைவில் பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×