என் மலர்tooltip icon

    தேனி

    • தகாத வார்த்தைகளால் திட்டி அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினர். மேலும் வீட்டிற்கு பூட்டுபோடப்பட்டது.
    • இந்தநிலையில் பூட்டைஉடைத்து வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் பணம் ரூ.50ஆயிரத்தை 4 பேரும் திருடிச்சென்றதாக சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி தவமணி. இவர் அதேபகுதியை சேர்ந்த நாகம்மாள் என்பவருக்கு கிரைய விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்துள்ளார். இதில் பாதி பணம் கொடுத்துவிட்டு மீதி பணம் தராததால் உத்தமபாளையம் கோர்ட்டில் வழக்குதொடரப்பட்டது.

    இந்த நிலையில் தவமணியை நாகம்மாள், அழகுபிரியா, அழகுராணி, ராஜாராம் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பினர். மேலும் வீட்டிற்கு பூட்டுபோடப்பட்டது. இந்தநிலையில் பூட்டைஉடைத்து வீட்டில் இருந்த லேப்டாப் மற்றும் பணம் ரூ.50ஆயிரத்தை 4 பேரும் திருடிச்சென்றதாக தவமணி சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு கடனுதவிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
    • மாதாந்திர கடனுதவி வழங்கும் முகாமில் 244 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.20.70 கோடி வங்கி கடன், அவர்களது கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் மாதாந்திர முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மகளிர் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் முன்னிலையில் நடை பெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    பெண்களின் கூட்டு முயற்சியில் லாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் அப்பெண்க ளின் குடும்ப வருமானத்தை யும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவும் வறுமையிலிருந்து விடுபடச் செய்வதற்காகவும் மகளிர் திட்டத்தின் மூலம் சுழல்நிதி கடன், பொருளாதார கடன், தொழிற்கடன், வங்கிக் கடன்கள் போன்ற பல்வேறு கடனுதவிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இக்கடனுதவி களை பெண்கள் பயன்படு த்தி தங்களது பொருளா தாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    மாதாந்திர கடனுதவி வழங்கும் முகாமில் 244 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.20.70 கோடி வங்கி கடன், அவர்களது கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினார். மேலும் 2023-2024-ஆம் ஆண்டிற்கு 10713 குழுக்களுக்கு ரூ.594 கோடி கடனுதவி வழங்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இன்று வரை 5334 குழுக்களுக்கு ரூ.344.34 கோடி கடனுதவி வழங்கப்ப ட்டுள்ளது. மீதமுள்ள இலக்கினை டிசம்பர் மாத த்திற்குள் எட்டிட நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆபரண நகை தயாரிப்பதற்கு பயிற்சி பெற்ற 30 மாணவிகளுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களுடன் சுய தொழில் மேற்கொள்ள ரூ.1,52,000 க்கான வங்கி கடன் பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் ஆரோக்கிய சுகுமார், முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
    • மேலும் கிருஷ்ண அவதாரத்தை நினைவுபடுத்தும் வகையில் குழந்தை கிருஷ்ணர் விக்ரகத்திற்கும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி-பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இக்கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு இன்று சீனிவாசப் பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மேலும் கிருஷ்ண அவதாரத்தை நினைவுபடுத்தும் வகையில் குழந்தை கிருஷ்ணர் விக்ரகத்திற்கும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • போடியில் இருந்து காலை 7 மணிக்கு கிளம்பி 9 மணிக்கு மதுரை செல்லும் வகையிலும், மதுரையில் இருந்து மாலை 7 மணிக்கு கிளம்பி இரவு 9 மணிக்கு போடி வரும் வகையில் ஒரு ரெயில் சேவை உருவாக்கப்பட்டால் இம்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
    • ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில் விழாக்கால சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்

    தேனி:

    தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு தேனி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் சங்கரநாராயணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை, மதுரை ரெயிலை போடி வரை நீடித்ததற்கு மாவட்ட மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாரத்தில் 3 நாட்கள் போடியில் இருந்தும், 3 நாட்கள் சென்னையில் இருந்தும் இயக்கப்படும் ரெயிலை 7 நாட்களும் சென்னையில் இருந்தும் போடியில் இருந்தும் புறப்பட்டு செல்லும் வகையில் மாற்றம் செய்தால் தேனி மாவட்ட மக்கள் மற்றும் கேரள மக்கள் அதிகம் பயனடைவார்கள்.

    போடியில் இருந்து மதுரை செல்லும் ரெயில் மாலை 6 மணிக்கு கிளம்பி 8 மணிக்கு மதுரை செல்கிகிறது. இதனை மாலை 5.30 மணிக்கு கிளம்பி 7.30 மணிக்கு மதுரை செல்லும் வகையில் இயக்கினால் அங்கிருந்து சென்னை, பெங்களூர், மைசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.

    போடியில் இருந்து காலை 7 மணிக்கு கிளம்பி 9 மணிக்கு மதுரை செல்லும் வகையிலும், மதுரையில் இருந்து மாலை 7 மணிக்கு கிளம்பி இரவு 9 மணிக்கு போடி வரும் வகையில் ஒரு ரெயில் சேவை உருவாக்கப்பட்டால் இம்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    போடி, தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் ரிசர்வேஷன் மற்றும் அன்ரிசர்வ்டு பெட்டிகள் எந்த எண் உள்ள பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதற்கான டிஸ்பிளே போர்டு அமைக்கப்படாமல் உள்ளது. இதனை விரைந்து அமைக்க வேண்டும். ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில் விழாக்கால சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

    • முருகனின் தந்தை தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
    • அன்னூர் போலீசார் முருகனின் உடலை தோண்டி எடுத்து உடல்கூறாய்வு செய்ய முடிவு செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது36). இவர் கோவை மாவட்டம் அன்னூரில் இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் கவிதா (35) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முருகன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக கவிதா தனது உறவினர்களுக்கு தெரிவித்தார்.

    அதன்பேரில் அவரது உடல் அன்னூரில் இருந்து சாமாண்டிபுரத்துக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் முருகனின் தந்தை தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து அன்னூர் போலீசார் முருகனின் உடலை தோண்டி எடுத்து உடல்கூறாய்வு செய்ய முடிவு செய்தனர். இதற்காக அன்னூர் போலீசார் கம்பத்திற்கு வந்து அவரது உடலை தோண்டி எடுக்க தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனு கொடுத்தனர். மேலும் உத்தமபாளையம் தாசில்தாரிடமும் மனு அளிக்கப்பட்டது.

    அன்னூர் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ்வரன் தலைமையில் உத்தமபாளையம் வட்டாட்சியர் மேற்பார்வையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் இன்று முருகனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து முருகனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரசால் அங்கீகரிக்க ப்பட்ட விதை விற்பனை நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்ட விதைகள் தரமற்றதாகவும் தகுதியற்றதாகவும் உள்ளது கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • வேளாண்துறை அதிகாரி களிடம் புகார் அளித்த நிலையில் முறையான பதில் கிடைக்காததால் காய்க்காத அவரை செடிகளுடன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

    போடி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பா லானோர் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். தற்போது அவரை சாகுபடி செய்ய ஏற்ற பருவம் என்பதால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பல ஏக்கரில் அவரை பயிரிட்டு விவ சாயம் மேற்கொண்டனர்.

    இந்நிலையில் ஏக்கருக்கு 30,000 மேல் செலவு செய்து அவரை பயிரிட்ட நிலையில் செடிகள் எதுவும் பூக்காம லும் காய்கள் பிடிக்காமலும் முதிர்ந்து போனது.

    அரசால் அங்கீகரிக்க ப்பட்ட விதை விற்பனை நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்ட விதைகள் தரமற்றதாகவும் தகுதியற்றதாகவும் உள்ளது கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சம்பந்த ப்பட்ட நிறுவனத்திடமும் வேளாண்துறை அதிகாரி களிடம் புகார் அளித்த நிலையில் முறையான பதில் கிடைக்காததால் காய்க்காத அவரை செடிகளுடன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

    கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்தும் அவரை செடிகள் விளைச்சல் கிடைக்காததால் கவலை தெரிவித்த விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் போலி விதைகள் வழங்கிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    • சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது கஞ்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தனர்.

    கம்பம்:

    கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக போதை காளான், கஞ்சா எண்ணை போன்றவற்றை பயன்படுத்த கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வந்து செல்கின்றனர்.

    போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக-கேரள எல்லைப்பகுதியான குமுளியில் உள்ள சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் செண்ட் பாட்டில் வடிவத்தில் கஞ்சா எண்ணெய் இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டிவந்த கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த பிரசன்னா(21) என்பவரிடம் விசாரணை செய்தனர்.

    அப்போது அவர் கல்லூரி மாணவர் என்பதும், நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது கஞ்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தனர். போலீசார் கல்லூரி மாணவர் பிரசன்னாவை கைது செய்து கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். அவருடன் வந்த மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    • பெண் பணியில் இருந்தபோது எந்திரத்தில் சேலை இறுக்கி கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள முத்தனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மனைவி சிவனேஸ்வரி. (50). இவர் வைகை அணை சாலையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தபோது எந்திரத்தில் சேலை இறுக்கி கீேழ விழுந்தார். இதில் கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் தங்கபாண்டி கொடுத்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    • பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமை ந்துள்ள குமுளி, தேக்கடி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.70 அடியாக உள்ளது. வரத்து 725 கனஅடி, திறப்பு 300 கனஅடி, இருப்பு 2394 மி.கனஅடி.

    கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 136.40 அடியாக இருந்தது. நீர்வரத்து 1406 கனஅடியாகவும், நீர் இருப்பு 6219 மிகனஅடியாகவும் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.17 அடியாக உள்ளது. வரத்து 7 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1640 மி.கனஅடி.

    பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 49.80 அடியாக உள்ளது. இதன் மொத்த உயரம் 57 அடியாகும். மழை மேலும் நீடிக்கும் என்பதால் விரைவில் முழுகொள்ள ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அணைக்கு 41 கனஅடி நீர் வருகிறது. இதேபோல் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.85 அடியாக உள்ளது. வரத்து 8 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 37.67 மி.கனஅடி.

    • காதல் தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த வழக்கில் 2 பேருக்கும் 7 ஆண்டு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்ைத சேர்ந்தவர் சுருளிராஜ். இவர் கடந்த 17.10.2013ம் தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அணைக்கரை ப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (வயது23), என்பவர் தான் காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறி அவரிடம் தகராறு செய்தார். அப்போது சர்ச் தெருவை சேர்ந்த சுகுமார் (20) மற்றும் சுஜாதா (43) ஆகியோரும் அவரை தாக்கி உள்ளனர்.

    மேலும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். படுகாயம் அடைந்த சுருளிராஜ் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் கார்த்திக் மற்றும் சுகுமாரை கைது செய்தனர்.

    இந்தவழக்கு தேனி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் கொலை முயற்சியில் ஈடுபட்ட கார்த்திக் மற்றும் சுகுமாருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார்.

    அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுகவிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார். இவ்வழக்கில் அரசு வக்கீலாக விவேகானந்தன், புலன் விசாரணை மேற்கொண்ட போடி இன்ஸ்பெக்டர்கள் பாலகுரு, புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோருக்கு எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

    • லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
    • 513 அரசு பள்ளிகளில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தேனி:

    தேனி வட்டம் லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    பள்ளிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற தூய்மை விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது. இத்திட்டத்தில் சுகாதாரமான குடிநீர், தூய்மையாக வகுப்பறை களை வைத்துக் கொள்வது, பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்து க்கொள்வது, குப்பைகளை முறையாக பராமரிப்பது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது பள்ளி களில் காய்கறி தோட்டம் அமைப்பது போன்ற செயல்பாடுகளை மாண வர்களிடம் ஊக்குவிப்ப தற்கான பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளது.

    தேனி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க ப்பள்ளி, நடுநிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 513 அரசு பள்ளிகளில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

    லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி ஒவ்வொரு மாத மும் முதல் திங்கள் கிழமையில் நடைபெறும் .

    இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, முதன்மை கல்வி அலுவல ரின் நேர் முக உதவியாளர் பெருமாள், லெட்சுமிபுரம் பள்ளி தலைமையாசிரியர் பேபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தீர்த்த குடங்கள் தேவதானப்பட்டி சிவபெருமான் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
    • கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அனைத்து மூலஸ்தான மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் 300 ஆண்டுகள் பழமையான மீனாட்சியம்மன் சமேத சிவபெருமான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் தொடங்கியது. நேற்று கோவிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அங்கிருந்து தீர்த்த குடங்கள் தேவதானப்பட்டி சிவபெருமான் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    முன்னதாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கிய நிலையில் நேற்று 5-ம் கால பூஜை நடைபெற்றது. காலை 10.10 மணிக்கு திருக்கயிலாய வாத்தியங்களுடன் தீர்த்தக்குடங்கள் புறப்பாடாகி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அனைத்து மூலஸ்தான மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. திருவிழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு போலீசார் தலைமையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு மீனாட்சியம்மன், சிவபெருமான் உருவ படம் பொறித்த தங்கமுலாம் பூசப்பட்ட நாணயங்களும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை சின்னஞ்செட்டியார் வம்சாவழிகள் மற்றும் 24 மனை தெலுங்குசெட்டியார்கள், தவளையர் கோத்திரத்தினர் செய்திருந்தனர்.

    ×