என் மலர்
நீங்கள் தேடியது "அருள்பாலித்த சீனிவாச பெருமாள்"
- ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
- மேலும் கிருஷ்ண அவதாரத்தை நினைவுபடுத்தும் வகையில் குழந்தை கிருஷ்ணர் விக்ரகத்திற்கும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி-பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு இன்று சீனிவாசப் பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும் கிருஷ்ண அவதாரத்தை நினைவுபடுத்தும் வகையில் குழந்தை கிருஷ்ணர் விக்ரகத்திற்கும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.






