என் மலர்tooltip icon

    தேனி

    • சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது கஞ்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தனர்.

    கம்பம்:

    கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக போதை காளான், கஞ்சா எண்ணை போன்றவற்றை பயன்படுத்த கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வந்து செல்கின்றனர்.

    போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக-கேரள எல்லைப்பகுதியான குமுளியில் உள்ள சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் செண்ட் பாட்டில் வடிவத்தில் கஞ்சா எண்ணெய் இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டிவந்த கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த பிரசன்னா(21) என்பவரிடம் விசாரணை செய்தனர்.

    அப்போது அவர் கல்லூரி மாணவர் என்பதும், நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது கஞ்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தனர். போலீசார் கல்லூரி மாணவர் பிரசன்னாவை கைது செய்து கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். அவருடன் வந்த மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    • பெண் பணியில் இருந்தபோது எந்திரத்தில் சேலை இறுக்கி கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள முத்தனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மனைவி சிவனேஸ்வரி. (50). இவர் வைகை அணை சாலையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தபோது எந்திரத்தில் சேலை இறுக்கி கீேழ விழுந்தார். இதில் கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் தங்கபாண்டி கொடுத்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    • பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமை ந்துள்ள குமுளி, தேக்கடி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.70 அடியாக உள்ளது. வரத்து 725 கனஅடி, திறப்பு 300 கனஅடி, இருப்பு 2394 மி.கனஅடி.

    கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 136.40 அடியாக இருந்தது. நீர்வரத்து 1406 கனஅடியாகவும், நீர் இருப்பு 6219 மிகனஅடியாகவும் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.17 அடியாக உள்ளது. வரத்து 7 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1640 மி.கனஅடி.

    பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 49.80 அடியாக உள்ளது. இதன் மொத்த உயரம் 57 அடியாகும். மழை மேலும் நீடிக்கும் என்பதால் விரைவில் முழுகொள்ள ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அணைக்கு 41 கனஅடி நீர் வருகிறது. இதேபோல் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.85 அடியாக உள்ளது. வரத்து 8 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 37.67 மி.கனஅடி.

    • காதல் தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த வழக்கில் 2 பேருக்கும் 7 ஆண்டு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்ைத சேர்ந்தவர் சுருளிராஜ். இவர் கடந்த 17.10.2013ம் தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அணைக்கரை ப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (வயது23), என்பவர் தான் காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறி அவரிடம் தகராறு செய்தார். அப்போது சர்ச் தெருவை சேர்ந்த சுகுமார் (20) மற்றும் சுஜாதா (43) ஆகியோரும் அவரை தாக்கி உள்ளனர்.

    மேலும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். படுகாயம் அடைந்த சுருளிராஜ் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் கார்த்திக் மற்றும் சுகுமாரை கைது செய்தனர்.

    இந்தவழக்கு தேனி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் கொலை முயற்சியில் ஈடுபட்ட கார்த்திக் மற்றும் சுகுமாருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார்.

    அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுகவிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார். இவ்வழக்கில் அரசு வக்கீலாக விவேகானந்தன், புலன் விசாரணை மேற்கொண்ட போடி இன்ஸ்பெக்டர்கள் பாலகுரு, புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோருக்கு எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

    • லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
    • 513 அரசு பள்ளிகளில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தேனி:

    தேனி வட்டம் லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    பள்ளிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற தூய்மை விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது. இத்திட்டத்தில் சுகாதாரமான குடிநீர், தூய்மையாக வகுப்பறை களை வைத்துக் கொள்வது, பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்து க்கொள்வது, குப்பைகளை முறையாக பராமரிப்பது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது பள்ளி களில் காய்கறி தோட்டம் அமைப்பது போன்ற செயல்பாடுகளை மாண வர்களிடம் ஊக்குவிப்ப தற்கான பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளது.

    தேனி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க ப்பள்ளி, நடுநிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 513 அரசு பள்ளிகளில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

    லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி ஒவ்வொரு மாத மும் முதல் திங்கள் கிழமையில் நடைபெறும் .

    இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, முதன்மை கல்வி அலுவல ரின் நேர் முக உதவியாளர் பெருமாள், லெட்சுமிபுரம் பள்ளி தலைமையாசிரியர் பேபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தீர்த்த குடங்கள் தேவதானப்பட்டி சிவபெருமான் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
    • கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அனைத்து மூலஸ்தான மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் 300 ஆண்டுகள் பழமையான மீனாட்சியம்மன் சமேத சிவபெருமான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் தொடங்கியது. நேற்று கோவிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அங்கிருந்து தீர்த்த குடங்கள் தேவதானப்பட்டி சிவபெருமான் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    முன்னதாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கிய நிலையில் நேற்று 5-ம் கால பூஜை நடைபெற்றது. காலை 10.10 மணிக்கு திருக்கயிலாய வாத்தியங்களுடன் தீர்த்தக்குடங்கள் புறப்பாடாகி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அனைத்து மூலஸ்தான மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. திருவிழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு போலீசார் தலைமையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு மீனாட்சியம்மன், சிவபெருமான் உருவ படம் பொறித்த தங்கமுலாம் பூசப்பட்ட நாணயங்களும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை சின்னஞ்செட்டியார் வம்சாவழிகள் மற்றும் 24 மனை தெலுங்குசெட்டியார்கள், தவளையர் கோத்திரத்தினர் செய்திருந்தனர்.

    • கோம்பை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் பண்ணைப்புரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
    • அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் கோம்பை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் பண்ணைப்புரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை கடத்த முயன்ற பண்ணைப்புரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரபிரபு (வயது 48), கோம்பையைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் (37), பண்ணைப்புரம் 9-வது வார்டைச் சேர்ந்த இளங்குரமன் (43) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இவர்கள் எங்கிருந்து இந்த கஞ்சாவை கடத்தி வந்தனர்? யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • இதன் காரணமாக 2-வது உரம் தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.

    கூடலூர்:

    கேரள எல்லை யில்அமை ந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் முதல் போக நெல்சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும்.

    இந்த ஆண்டு போதிய அளவு நீர்மட்டம் இல்லாத போதும் 400 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்வதும், ஏமாற்றுவதுமாக இருந்தது.

    இதனால் நாற்றாங்கால் அமைத்த விவசாயிகள் கவலை அடைந்தனர். இருந்தபோதும் தொடர்ந்து நடவு பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது சாகுபடி செய்யப்பட்ட பயிரில் கதிர் தள்ளும் நிலையில் உள்ளது.

    எனவே தற்போது பெய்து வரும் மழை அதற்கு ஏதுவாக இருக்கும். இதன் காரணமாக 2-வது உரம் தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர். இதுமட்டு மல்லாது மானாவாரியாக அவரை, தட்டை, மொச்சை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் மழை இதற்கு செழித்து வளர உதவியாக இருக்கும்.

    ஏல தோட்ட விவசாயி களும் மழை இல்லாததால் தண்ணீரை டிராக்டர் மற்றும் லாரிகளில் பணம் கொடுத்து வாங்கி வாடிய பயிர்களை காப்பாற்றி வந்தனர்.

    ெதாடர் மழை காரண மாக ஏலச்செடிகள் மீண்டும் செழித்து வளர தொடங்கி உள்ளன.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.50 அடியாக உள்ளது. 515 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 47.23 அடியாக உள்ளது. 77 கன அடி நீர் வருகிறது. மதுைர மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.60 அடியாக உள்ளது. 82 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.06 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 49.6, தேக்கடி 19.2, போடி 0.2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 1.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • அய்யனார்புரத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் கனமழையால் மழைநீர் தேங்கியது.
    • வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் வந்துவிடுமோ என்று அச்சமடைந்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அய்யனார்புரத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வட்டாட்சியர் அலுவலகத்தையொட்டி அமைந்துள்ள இப்பகுதியில் மழை பெய்யும் சமயங்களில் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்பது தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இங்குள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தண்ணீர் அதிக அளவு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொள்வதால் மழை காலங்களில் எல்லாம் இப்பகுதி மக்கள் இதேபோன்ற துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் வந்துவிடுமோ என்று அச்சமடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 1,09,987 விண்ணப்பங்கள் மீது கள சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.
    • 72.21 சதவீத கள சரி பார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற 5ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப முகாம்களில் பெறப்பட்ட 3,00,880 விண்ணப்பங்களில் 1,09,987 விண்ணப்பங்கள் மீது கள சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஷஜீவனா பொம்மைய கவுண்டன்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி மாவட்டத்தில் மொத்தம் 517 ரேசன் கடைகள் உள்ளன. அவற்றில் 4,32,038 குடும்ப அட்டைகள் உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல் கட்டமாக பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் வட்டத்தில் 24.07.2023 முதல் 4.08.2023 வரை நடைபெற்ற முகாமில் 1,49,188 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    2ம் கட்டமாக தேனி, ஆண்டிப்பட்டி மற்றும் போடி வட்டத்தில் 05.08.2023 முதல் 11.08.2023 வரை நடைபெற்ற முகாமில் 1,33,646 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18.08.2023 முதல் 20.08.2023 வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் 18,046 விண்ணப்பங்கள் என மொத்தம் 3,00,880 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இவற்றில் 3ல் ஒரு பங்கு என 1,09,987 விண்ணப்பங்கள் கள சரிபார்ப்பு பணிகளுக்கு அனுப்பட்டுள்ளது. கள சரிபார்ப்பதற்காக 517 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 72. 21 சதவீத கள சரி பார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற 5ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது.

    • தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
    • நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது.

    கூடலூர்:

    முல்லைப்ெபரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது.

    அணைக்கு நீர் வரத்து 620 கன அடியாக உள்ளது. நீர் மட்டம் 118.40 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 300 கன அடி நீர் திறக்கப்படுவதால் மின் உற்பத்தியும் நடந்து வருகிறது. நீர் இருப்பு 2339 மி.கன அடியாக உள்ளது.

    இதே போல் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 47.24 அடியாக உள்ளது. கடந்த 3 நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை 332 கன அடி நீர் வருகிறது.

    அணையில் இருந்து 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1650 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.20 அடியாக உள்ளது. வரத்து 141 கன அடி. இருப்பு 324.54 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 76.25 அடி. வரத்து 30 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 35.54 மி.கன அடி.

    மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரியாறு 1, தேக்கடி 0.2, வைகை அணை 54, கொடைக்கானல் 20 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • வண்ணாத்திபாறை துணை மின்நிலையத்தில் நாளை(4-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • காலை 10 மணிமுதல் மாைல 4 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    சின்னமனூர்:

    வண்ணாத்திபாறை துணை மின்நிலையத்தில் நாளை(4-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    எனவே அன்று காலை 10 மணிமுதல் மாைல 4 மணிவரை குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிபட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயர்கேம்ப், மேல்மணலாறு, கீழ்மணலாறு, ஹைவேவிஸ், மகாராஜாமெட்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

    ×