என் மலர்tooltip icon

    தேனி

    • ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோவில் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியும், உயர் நிலைப்பள்ளியும் உள்ளது.
    • மைதானம் இல்லாததால் மாணவிகள் தற்பொழுது சாலையில் விளையாடி வருகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோவில் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியும், உயர் நிலைப்பள்ளியும் உள்ளது. இந்த இரு பள்ளிகளிலும் நூற்றுக்கணக்கான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த அரசு உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் மாணவ - மாணவிகளுக்கு விளையாட்டு மைதானம் இதுவரை இல்லை.

    இதனால் மாணவ - மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பள்ளிக்கு அருகிலேயே இவ்வளவு நாட்களாக விளையாடி வந்த மாணவ- மாணவிகள் தற்பொழுது சாலையில் விளையாடி வருகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு கல்வியுடன் கூடிய விளையாட்டு அவசியம் என்று தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் பொருளா தாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவி கள் மைதானம் இல்லாததால் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.

    எனவே மாவட்ட கல்வி அதிகாரிகள், விளையாட்டுத்துறை அதிகாரிகள் இப்பிரச்சினை யில் உரிய கவனம் செலுத்தி மைதானம் அமைக்க முன்வர வேண்டும்.

    • இந்த ஆண்டு நீர்மட்டம் குறைவாக இருந்தபோதும் முதல் வாரத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது.
    • 27 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்து வந்த நிலையில் 400 கனஅடி நீர் திறக்கப்படுவதால் 36 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. 590 கனஅடிநீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. முதல்போக சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு நீர்மட்டம் குறைவாக இருந்தபோதும் முதல் வாரத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது.

    தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகர குடிநீர் திட்டத்திற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு பின்னர் 300 கனஅடிநீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 400 கனஅடியாக உயர்த்தப்பட்டு ள்ளது.

    இதனால் லோயர்கே ம்பில் கூடுதல் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 27 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்து வந்த நிலையில் 400 கனஅடி நீர் திறக்கப்படுவதால் 36 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. 590 கனஅடிநீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.08 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 79.04 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 20.6, தேக்கடி 14.6, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 2.6, சண்முகாநதி அணை 2.4, போடி 5.6, வைகை அணை 1.4, சோத்துப்பாறை 2, பெரியகுளம் 2, வீரபாண்டி 4.2, அரண்மனைப்புதூர் 4.8, ஆண்டிபட்டி 4.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • அரசு சார்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
    • விஷகடிகளுக்கான மருந்துகள் அனைத்தும் சுகாதார நிலை யங்களிலும் கிடைக்கும் வகையில் உள்ளது. உலக அளவில் தமிழகத்தில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என பேசினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜதானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் குடியிருப்பு, ஹைவேவிஸ் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

    மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் பேசியதாவது, தேனி மாவட்டம் கூடலூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் பொது சுகாதார அலகு கட்டிடம், பெரியகுளத்தில் ரூ.45லட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சிலமலை பகுதியில் ரூ.22.75 லட்சம் மதிப்பில் செவிலியர் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

    அழகர்சாமிபுரம், மேலசிந்தலைச்சேரி பகுதியில் தலா ரூ.30 லட்சம் மதிப்பில் 2 புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை யில் தேனி மாவட்டத்தில் பல்வேறு அறிவிப்புகளுக்கு அரசாணை பெறப்பட்டு மிகவிரைவில் பணிகள் தொடங்க உள்ளது. அதன்படி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்க மற்றும் உடற்கூறு ஆய்வு மையம் அமைக்க ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    ஓடைப்பட்டியில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், தேவாரத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட உள்ளது. காமயகவு ண்டன்ப ட்டி மற்றும் கோம்பை பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் இந்திய மருத்துவ முறை புறநோயாளிகள் பிரிவு ஆஸ்பத்திரி கட்டப்பட உள்ளது.

    பாம்புகடி மற்றும் நாய்கடிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கிராம ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவை யான மருந்து கையிருப்பில் உள்ளது.

    இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் மாரடைப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு முதலுதவி அளிக்க 3 வகையான 14 மாத்திரைகள் 8713 துணைசுகாதார நிலையங்களிலும், 2286 ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் கிடைக்கும் வகையில் உள்ளது. உலக அளவில் தமிழகத்தில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    • பஸ் நிலைதடுமாறி தாறுமாறாக செல்லவே கண்டக்டர் மற்றும் பயணிகள் கூச்சலிட்டனர்.
    • திடீரென விழித்த போது பஸ் பள்ளத்தில் கவிழ்வது போல் செல்லவே உடனடியாக பஸ்சில் இருந்து தங்கபாண்டியன் கீழே குதித்தார்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள நாயக்கர் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (43). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதுரையில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி அரசு பஸ்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் கண்டக்டராக பழனி செட்டிபட்டியை சேர்ந்த வினோத்குமார் (30) என்பவர் இருந்தார். பஸ் கொண்டமநாயக்கன்பட்டி 8கண் பாலத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தபோது தங்க பாண்டியன் கண் அயர்ந்து விட்டார்.

    அப்போது பஸ் நிலைதடுமாறி தாறுமாறாக செல்லவே கண்டக்டர் மற்றும் பயணிகள் கூச்சலிட்டனர். திடீரென விழித்த போது பஸ் பள்ளத்தில் கவிழ்வது போல் செல்லவே உடனடியாக பஸ்சில் இருந்து தங்கபாண்டியன் கீழே குதித்தார். கட்டுப்பாட்டை இழந்து சென்ற பஸ் அங்கிருந்த மரத்தில் மோதி நின்றது.

    இதனால் தங்கபாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்டக்டர் வினோத்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், பஸ் பலத்த சேதமடைந்த நிலையிலும், அதில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசில் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்சா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி மாவட்டத்தில் கபடி வீராங்கனை உள்பட 4 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெரியபாண்டி மகள் தமயந்தி(19). சம்பவத்தன்று அவரது தந்தை வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த தமயந்தி மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேனி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே சுருளிபட்டியை சேர்ந்தவர் சரவணன் மகள் சங்கனி(19). இவர் திருமங்கலத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். குலதெய்வ வழிபாட்டுக்காக சொந்த ஊருக்கு வந்தார். வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.

    அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    ஆண்டிபட்டியை சேர்ந்தவர் ராஜயோக்கியம் மகள் சரண்யா(17). இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு கபடி வீராங்கனையாக உள்ளார். சம்பவத்தன்று அவரது தாய் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த சரண்யா திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சரண்யாவை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே எருமலை நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி மகள் மஞ்சுளா(17). இவர் பிளஸ்-1 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலை யில் அவர் திடீரென மாயானார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.

    • பாலம் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பூங்காவை கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமதுரியாஜ் திறந்து வைத்தார்.

    கூடலூர்:

    குமுளி அருகே வாகமன் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசிக்க வருகின்றனர். அவர்களை கவரும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தனியார் தொழில்முனைவோருடன் இணைந்து சுற்றுலா மையங்களை மேம்படுத்தும் கேரள அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இடுக்கி டி.டி.பி.சி மற்றும் பெரும்பாவூரில் உள்ள பாரத்மாதா வென்சஸ் பிரைவேட் லிமிடெட், கி.கி ஸ்டார்ஸ் இணைந்து வாகமனில் கேன்டிலீவர் கண்ணாடி பாலம் மற்றும் சாகச பூங்காவை உருவாக்கி உள்ளனர்.

    ரூ.3 கோடி மதிப்பில் கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரத்தில் 120 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. 35 டன் இரும்பு பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் ஏறி நின்று சுற்றுவட்டார பகுதியான முண்டகயம், கூட்டிக்கல், கொக்கையாறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த சாகச பூங்காவில் ஸ்கைசுவிங், ஸ்கை சைக்கிளிங், ஸ்கைரோலர், ராக்கெட் எஜெக்டர், பீரிபால், ராட்சத ஸ்விங், ஜிப்லைன் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த பூங்காவை கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமதுரியாஜ் திறந்து வைத்தார். இதன்மூலம் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை 3 நாட்கள் தேனி மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார்.
    • 9-ந் தேதி காலை 8 மணி முதல் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணம் செய்கிறார்.

    ஆண்டிபட்டி:

    என் மண் என் மக்கள் என்ற பிரசாரத்தை வலியுறுத்தி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நடைபயணம் செய்கிறார். 2-ம் கட்ட நடைபயணத்தை ஆலங்குளத்தில் தொடங்கிய அவர் நேற்று ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்நிலையில் இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை 3 நாட்கள் தேனி மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 6 மணிக்கு தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு வருகை தருகிறார். அங்கிருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அண்ணாமலை நாளை காலை கடமலைக்குண்டு, துரைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் நடைபயணம் செய்கிறார்.

    மாலை 3 மணி முதல் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 6 மணி முதல் போடி சட்டமன்ற தொகுதியிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். 9-ந் தேதி காலை 8 மணி முதல் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணம் செய்கிறார்.

    அவரது வருகையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அண்ணாமலை தேனி மாவட்டத்துக்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.

    • தேனி மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்துவரும் சாரல் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • மழைப்பொழிவால் மானாவாரி பயிரிட்ட விவசாயிகளும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. திண்டு க்கல், தேனி மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்துவரும் சாரல் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இந்தநிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தேனி, திண்டு க்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்ப தாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி நேற்றுமாலை சாரல் மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்ட த்துடனே உள்ளது. இதனால் மழை பெய்யும் என எதிர்பார்த்து உள்ளனர்.

    கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல்சாகுபடி செய்த விவசாயிகள் 2-ம் கட்ட உரம் மற்றும் மருந்து தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நெற்பயி ர்களில் கதிர் தள்ளும் பருவம் என்பதால் மழை ஏதுவாக இருக்கும். மேலும் மானாவாரி பயிரிட்ட விவசாயிகளும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 118.90 அடியாக உள்ளது. அணைக்கு 515 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 300 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.08 அடியாக உள்ளது. 54 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50 அடியாக உள்ளது. 21 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.88 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிற நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்த கனமழையால் கும்ப க்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் வரத்து சீராகி உள்ளதால் அனுமதி அளித்து வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பெரியாறு 12, தேக்கடி 13.4, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 2.2, சண்முகாநதிஅணை 3, போடி 6.2, மஞ்சளாறு 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • தேனி அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி அருகே கடமலை க்குண்டுவை சேர்ந்தவர் பெத்தன் மகள் நிவேதா(17). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் சம்பவ த்தன்று வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத தால் கடமலை க்குண்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நிவே தாவை தேடி வருகின்றனர்.

    கம்பத்தை சேர்ந்தவர் பொன்ராம் மகள் ஹரிதாதேவி(20). இவர் உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காத தால் கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (8ந் தேதி) நடைபெற உள்ளது.
    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (8ந் தேதி) நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீலப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூழையனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்த ப்படும் என செயற்பொறி யாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

    • கும்பல் தாக்கியதில் மயக்க நிலையில் இருந்த வாலிபரை வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
    • வாலிபரின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பச்சமலையான்கோட்டை இந்திராநகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 60). இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    3-வது மகன் மகாலிங்கம் (வயது 25) என்பவர் பூ வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்த ன்று ஜி.கல்லுப்பட்டி புஷ்பராணி நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் மயங்கி கிடந்தார்.

    இது குறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. மயக்க நிலையில் இருந்த மகாலிங்கத்தை வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இவரது நண்பர்கள் அனைவரும் சம்பவத்தன்று பிறந்தநாள் விழாவை கொண்டாடுவத ற்காக மது குடித்துக் கொண்டு இருந்ததாகவும், அப்போது அங்கு சென்ற மகாலிங்கம் தனியாக நடந்து சென்றார்.

    அப்போது மர்ம நபர்கள் அவரை தாக்கி விட்டு கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர்களை கண்டு பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமார் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், சப்-இன்ஸ்பெ க்டர் வேல்மணிகண்டன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை குடிநீர் திட்டக்கு ழாய் அமைக்கும் பணிகள் உத்தமபாளையம் முல்லை ப்பெரியாற்றில் மேல் பகுதியில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து ள்ளது.
    • தற்போது 2ம் கட்ட மாக ஆற்றின் மறு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    உத்தமபாளையம்:

    மதுரை குடிநீர் திட்டக்கு ழாய் அமைக்கும் பணிகள் உத்தமபாளையம் முல்லை ப்பெரியாற்றில் மேல் பகுதியில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து ள்ளது.

    இந்த நிலையில் ஆற்றின் அடுத்த பகுதியில் தூண்கள் அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணிகள் தொடங்கி உள்ளது. மதுரை மாநகராட்சிக்கு தினசரி 125 மில்லியன் கன அடி நீர் தண்ணீர் பெறும் வகையில் தேனி மாவட்டம் ேலாயர் கேம்பில் புதிய குடிநீர் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அம்ரூத்-3 என்னும் திட்டத்தில் ரூ.1295.76 கோடி மதிப்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    லோயர்கேம்ப், வண்ணா ந்துரை பகுதியில் தலைமை நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டி க்கு கொண்டு செல்லப்படு கிறது. அங்கு நீர் சுத்திகரிக்க ப்பட்டு மதுரைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்ப ட்டுள்ளது.

    தற்போது லோயர்கே ம்ப்பில் இருந்து தப்புக்குண்டு விலக்கு வரை குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

    இந்த வழித்தடத்தில் உத்தமபாளையம் பைபாஸ், கண்டமனூர் அருகே அடைக்கம்பட்டி ஆகிய இடங்களில் முல்லைப்பெரி யாற்றின் குறுக்கே தூண்கள் அமைத்து குழாயை அதன் மேல் பதிக்க திட்டமிடப்பட்டு ள்ளது. உத்தமபாளையத்தில் இதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. ஆற்றில் நீரோட்டம் ெதாடர்வதால் ஒரே நேரத்தில் பணிகள் மேற்கொள்ள முடியாது.

    எனவே முதல் கட்டமாக நீரோட்டம் மாற்றப்பட்டு அப்பகுதியில் தூண்கள் கட்டப்பட்டன. அங்கு 3 தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மேல் குழாய்களை பதித்து அளவீடு செய்யப்ப ட்டது. தற்போது 2ம் கட்ட மாக ஆற்றின் மறு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. தூண்கள் அமைப்பதற்காக மண் அள்ளும் எந்திரம் மூலம் அஸ்திவாரம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    வெள்ளம் வந்தாலும் குழாய்க்கு பாதிப்பு ஏற்ப டாத வகையில் உயரமாக கட்டப்பட்டு வருகிறது. 5 தூண்களில் 3 தூண்களு க்கான பணிகள் முடிவடை ந்துள்ளது. மீதம் உள்ள 2 தூண்கள் 3 மாதத்தில் கட்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி தேனி மாவட்டத்தில் விரைவில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்த னர்.

    ×