search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase water"

    • இந்த ஆண்டு நீர்மட்டம் குறைவாக இருந்தபோதும் முதல் வாரத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது.
    • 27 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்து வந்த நிலையில் 400 கனஅடி நீர் திறக்கப்படுவதால் 36 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. 590 கனஅடிநீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. முதல்போக சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு நீர்மட்டம் குறைவாக இருந்தபோதும் முதல் வாரத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது.

    தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகர குடிநீர் திட்டத்திற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு பின்னர் 300 கனஅடிநீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 400 கனஅடியாக உயர்த்தப்பட்டு ள்ளது.

    இதனால் லோயர்கே ம்பில் கூடுதல் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 27 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்து வந்த நிலையில் 400 கனஅடி நீர் திறக்கப்படுவதால் 36 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. 590 கனஅடிநீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.08 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 79.04 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 20.6, தேக்கடி 14.6, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 2.6, சண்முகாநதி அணை 2.4, போடி 5.6, வைகை அணை 1.4, சோத்துப்பாறை 2, பெரியகுளம் 2, வீரபாண்டி 4.2, அரண்மனைப்புதூர் 4.8, ஆண்டிபட்டி 4.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×