search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமுளி அருகே சுற்றுலா பயணிகளை கவரும் கண்ணாடி பாலம் திறப்பு
    X

    குமுளி அருகே சுற்றுலா பயணிகளை கவரும் கண்ணாடி பாலம் திறப்பு

    • பாலம் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பூங்காவை கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமதுரியாஜ் திறந்து வைத்தார்.

    கூடலூர்:

    குமுளி அருகே வாகமன் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசிக்க வருகின்றனர். அவர்களை கவரும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தனியார் தொழில்முனைவோருடன் இணைந்து சுற்றுலா மையங்களை மேம்படுத்தும் கேரள அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இடுக்கி டி.டி.பி.சி மற்றும் பெரும்பாவூரில் உள்ள பாரத்மாதா வென்சஸ் பிரைவேட் லிமிடெட், கி.கி ஸ்டார்ஸ் இணைந்து வாகமனில் கேன்டிலீவர் கண்ணாடி பாலம் மற்றும் சாகச பூங்காவை உருவாக்கி உள்ளனர்.

    ரூ.3 கோடி மதிப்பில் கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரத்தில் 120 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. 35 டன் இரும்பு பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் ஏறி நின்று சுற்றுவட்டார பகுதியான முண்டகயம், கூட்டிக்கல், கொக்கையாறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த சாகச பூங்காவில் ஸ்கைசுவிங், ஸ்கை சைக்கிளிங், ஸ்கைரோலர், ராக்கெட் எஜெக்டர், பீரிபால், ராட்சத ஸ்விங், ஜிப்லைன் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த பூங்காவை கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமதுரியாஜ் திறந்து வைத்தார். இதன்மூலம் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×