search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே கபடி வீராங்கனை உள்பட 4 பேர் மாயம்
    X

    கோப்பு படம்

    தேனி அருகே கபடி வீராங்கனை உள்பட 4 பேர் மாயம்

    • தேனி மாவட்டத்தில் கபடி வீராங்கனை உள்பட 4 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெரியபாண்டி மகள் தமயந்தி(19). சம்பவத்தன்று அவரது தந்தை வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த தமயந்தி மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேனி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே சுருளிபட்டியை சேர்ந்தவர் சரவணன் மகள் சங்கனி(19). இவர் திருமங்கலத்தில் உள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். குலதெய்வ வழிபாட்டுக்காக சொந்த ஊருக்கு வந்தார். வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.

    அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    ஆண்டிபட்டியை சேர்ந்தவர் ராஜயோக்கியம் மகள் சரண்யா(17). இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு கபடி வீராங்கனையாக உள்ளார். சம்பவத்தன்று அவரது தாய் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த சரண்யா திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சரண்யாவை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே எருமலை நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி மகள் மஞ்சுளா(17). இவர் பிளஸ்-1 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலை யில் அவர் திடீரென மாயானார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×