என் மலர்
தேனி
- கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
- வைகை அணையின் நீர்மட்டம் 47.18 அடியாக உள்ளது. 147 கன அடி நீர் வருகிறது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
தற்போது முதல் போக சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அணையின் நீர்மட்டத்தை பொறுத்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மதுரை குடிநீர் திட்டத்துக்காக லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் பம்பிங் செய்வதில் பிரச்சனை ஏறுபட்டது. கூடலூர், உத்தமபாளையம், கம்பம், காமயகவுண்டன்பட்டி, கோம்பை, பண்ணைபுரம், தேவாரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு முல்லைப்பெரியாறு அணை மூலமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 119.40 அடி நீர்மட்டம் உள்ளது. 526 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 400 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று நீர்திறப்பு 500 கன அடியாக உயர்த்தப்பட்டது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.18 அடியாக உள்ளது. 147 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர்திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 79.01 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
பெரியாறு 7, தேக்கடி 0.6, உத்தமபாளையம் 1, சண்முகாநதி அணை 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற இளம்பெண் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் மகள் வினோதினி(17). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு பெரியகுளத்தில் உள்ள ஜவுளிகடையில் வேலைபார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற வினோதினி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- பணம் கொடுக்கல் வாங்கலில் தம்பதியை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே வடகரை வைத்தியநாத புரத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி மனைவி மனோ ன்மணி(37). விவசாயம் செய்து வருகின்றனர். அழகுபாறை, அணைக்கல் பகுதியில் தென்ன ந்தோப்பை அதேபகுதியை சேர்ந்த சசிக்குமார், கற்பகம் ஆகியோருக்கு கிரைய அக்ரிமெண்ட் செய்து கொடுத்தனர்.
இதற்காக ரூ.10 லட்சம் பேசி முன்பணமாக ரூ.7 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி பணத்தை கேட்டபோது பிறகு தருவதாக இழுத்த டித்து வந்தனர். இந்தநிலை யில் சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி தோப்பில் இருக்கும் போது கற்பகம், சசிக்குமார் ஆகியோர் அத்துமீறி உள்ளே நுழைந்து அவர்களை தகாத வார்த்தை யால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து ள்ளனர்.
தோப்பின் ஆவணம் எங்களிடம் உள்ளது. இத னால் ஒன்றும் செய்யமுடி யாது எனக்கூறி அவரை தாக்க முயன்றனர். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில் பெரியகுளம் போலீசார் கற்பகம் மற்றும் சசிக்குமார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ்நிலையத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அடையாளம் காண முடியாத நிலையில் இறந்து கிடந்தார்.
- நாய்கள் கடித்தே ஒருவர் இறந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகில் உள்ள தென்கரை கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருபவர் சோனை. இவருக்கு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பஸ் நிலையத்தில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அடையாளம் காண முடியாத நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் பாகங்களை தெருநாய்கள் கடித்து குதறி இருந்தது தெரிய வந்தது.
நோய்வாய் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தவர் மயங்கி விழுந்த நிலையில் தெருநாய்கள் கடித்திருக்க லாம் என்றும், பஸ்க்காக காத்திருந்தபோது தெரு நாய்கள் கடித்திரு க்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.நகரில் தெரு நாய்கள் தொல்லையால் பொது மக்கள் பாதிக்க ப்பட்டு வரும் நிலையில் நாய்கள் கடித்தே ஒருவர் இறந்திரு ப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்து ள்ளது.
இது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை கைபற்றி மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார்.
- மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தி.மு.கவை தீய சக்தி என்று கூறி வந்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டத்தில் என் மண் என் மக்கள் என்ற கோஷத்துடன் பா.ஜ.க மாநில தலைவர் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கம்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,
கம்பத்தில் சாகுபடியாகும் திராட்சை சுவை மிகுந்தது. ஆனால் தற்போது கஞ்சா விற்பனையின் தலைநகரமாக மாறியுள்ளது. ஆனால் இதைபற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. மத்திய அரசின் திட்டங்களை முதலமைச்சர் மாநில அரசின் திட்டங்களை போல காட்டி வருகிறார். கேரளாவின் மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் இடமாக தமிழகம் மாறி வருகிறது. இதனை முதலமைச்சர் தட்டி கேட்பதில்லை. காரணம் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடப்பதால் கூட்டணியில் பிளவு வந்துவிட கூடாது என்பதற்காக மவுனம் காக்கிறார்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வைகை அணை தூர்வாரப்படவில்லை. கண்ணகி கோவிலை கேரளாவிற்கு தாரை வார்த்துவிட்டனர்.
சனாதனம் குறித்து பட்டத்து இளவரசர் உதயநிதி புதிய தத்துவம் கூறி உள்ளார். கோவிலில் எவ்வாறு சாமி கும்பிட வேண்டும் என இவர்கள் சொல்லி தர தேவையில்லை. ஏற்றத்தாழ்வு, சாதிய பாகுபாடு இருக்க கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். சனாதனம் பற்றி பேசும் உதயநிதி தனது தாயாரை கோவிலுக்கு செல்ல கூடாது என கூற முடியுமா? அதனால்தான் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தி.மு.கவை தீய சக்தி என்று கூறி வந்தனர்.
ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு என முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் தி.மு.க மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. விடுதலை செய்யப்பட்ட பல தி.மு.க அமைச்சர்களின் வழக்குகள் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அவர்கள் எந்தெந்த சிறையில் இருப்பார்கள் என்பது தெரியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை கைபற்றி மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார் இவ்வாறு அவர் பேசினார்.
3ஆம் நாள் பயணமாக இன்று தேனி நகர் பொம்மைய கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து பங்களா மேடு வரை பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
- கிருஷ்ணஜெயந்தி விழாவையையொட்டி 30 அடி உயர வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறினர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி பாலகிருஷ்ணசாமி கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவிலாகும்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன் படி இந்த ஆண்டு 3 நாட்கள் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவு நாள் நிகழ்ச்சியாக வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு 30 அடி உயரம் கொண்ட தேக்குமரம் ஊன்றப்பட்டது.
அதன்பின் இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏற முயன்றனர். அவர்கள் மீது மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் கம்பத்தின் உச்சியில் இருந்த பரிசை இளைஞர்கள் எடுத்து வந்தபோது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணாசேகர் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- பெண் கைதியை தேனி கோர்ட்டில் ஆஜர் படுத்த அரசு பஸ்சில் அழைத்துச் சென்றனர்.
- திடீரென பெண் கைதி பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி தங்கம் (வயது48). இவர் அதே ஊரைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரையும், அவரது மனைவி சரோஜாவையும் கடுமையாக தாக்கி கொள்ளையடிக்க முயன்றார்.
அப்போது அவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் தங்கம் தப்பி ஓடினார். இது குறித்து க.விலக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கைது செய்தனர்.
பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக தலைமைக் காவலர் முத்தையா, பெண் காவலர் ராஜேஸ்வரி ஆகியோர் அவரை தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் தேனி கோர்ட்டில் ஆஜர் படுத்த அரசு பஸ்சில் அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென தங்கம் பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
- மேலும் விவரங்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின்மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
விநாயக சதுர்த்தி விழாவினைச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கொண்டாட வேண்டும். மேலும் விவரங்களுக்கு ேபாலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான விதை ஆண்டிபட்டியில் தொடங்கப்பட்டுள்ளது.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி எப்போது சொல்ல ஆரம்பித்தாரோ அன்றில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு தூக்கம் வரவில்லை.
ஆண்டிபட்டி:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரையை கடந்த ஜூலை மாதம் ராமேஸ்வரத்தில் தொடங்கினார். தனது 2-வது கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 4-ந் தேதி தொடங்கினார். அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் பாதயாத்திரை வந்த அண்ணாமலை நேற்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வந்தார்.
உசிலம்பட்டி வழியாக ஆண்டிபட்டிக்கு வந்த அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். எம்.ஜி.ஆர். சிலை வழியாக ஜக்கம்பட்டி வரை 2 கி.மீ தூரம் நடந்து சென்றார். அப்போது லேசான சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலையை அண்ணாமலைக்கு அணிவித்தனர்.
அப்போது கொட்டும் மழையில் பொதுமக்களிடம் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான விதை ஆண்டிபட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு தரப்பினருக்கும், நம்பிக்கை இல்லாத சனாதன தர்மத்தை ஒழிக்க நினைக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.
கடவுள் நம்பிக்கை கொண்ட யாரும் சனாதன தர்மத்தை ஒழிக்க நினைப்பவர்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஊழல் பேர்வழிகளை தங்கள் கட்சியில் வைத்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் வருகிற பாராளுமன்ற தேர்தலாகும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி எப்போது சொல்ல ஆரம்பித்தாரோ அன்றில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு தூக்கம் வரவில்லை.
ஊழல், வாரிசுகளை கட்சியில் வைத்துள்ள ஒரு கூட்டணிக்கும், நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் மோடி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நடக்கக்கூடிய தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு அளிப்பார்கள். மகாபாரத யுத்தத்தைப் போன்று ஒரு பக்கம் கவுரவர்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பாண்டவர்கள் போல நின்று கொண்டு இருக்கிறோம். மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.
இந்து மதத்தை தொடர்ந்து கொச்சைபடுத்தி வரும் தி.மு.க.வினர் வாக்கு வங்கிக்காக சிறுபான்மையினரை ஆதரித்து வருகின்றனர். முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் கூட இந்து மதத்தை அழிக்க முடியவில்லை. தற்போது முளைத்து 3 இலை கூட விடாத உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை அழித்து காட்டுகிறேன் என சவால் விடுகிறார். இந்த சவாலுக்கான தீர்வு தேர்தல் முடிவில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வன விலங்குகள் தண்ணீர் தேடி காஞ்சிமரத்துறை, சுருளியாறு மின் நிலைய குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகின்றன.
- மங்கலதேவி கண்ணகி கோவிலில் யானைகள் கூட்டம் முகாமிட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லை மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது.
இதையொட்டிய வனப்பகுதியான வண்ணாத்திப்பாைற, சுருளியாறு உள்ளிட்ட இடங்களில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. கடும் வெப்பம் காரணமாக வன விலங்குகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்க வில்லை. இதனால் வன விலங்குகள் தண்ணீர் தேடி காஞ்சிமரத்துறை, சுருளியாறு மின் நிலைய குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகின்றன.
குறிப்பாக யானைகள் கூட்டமாக முகாமிட்டு ள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மங்கலதேவி கண்ணகி கோவிலில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. அங்கு வனத்துறை அலுவலக குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி பகுதியிலேயே நீண்ட நேரம் காத்திருக்கிறது.
வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காததால் இங்கு முகாமிட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே வனப்பகுதியில் தடுப்பணைகள் கட்டி வன விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- யூனியன் அலுவலகம் கட்டப்பட்டு 40 ஆண்டு களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் முறையான பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
- மேற்கூரை சேதமடைந்து காணப்படுவ தால் அதிகாரிகள் அச்சத்து டன் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் மயி லாடும்பாறை கிராமத்தில் கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் கட்டப்பட்டு40 ஆண்டு களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் முறையான பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
அதனால் அலுவலக கட்டிடம் அதிக அளவில் சேதமடைந்து காணப்படு கிறது. மேலும் மழை பெய்யும் நேரங்களில் கட்டி டத்தின் சில அறைகளுக்குள் மேற்கூரை வழியாக நீர்க்கசிவு ஏற்படுகிறது. அதனால் ஆவணங்கள் மழை நீரில் நனைந்து விடும் அபாயம் உள்ளது.
மேலும் மேற்கூரை சேதமடைந்து காணப்படுவ தால் அதிகாரிகள் அச்சத்து டன் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதேபோல அலுவலக கட்டிடத்தில் குறைந்த அறைகள் மட்டுமே உள்ளது. இதனால் பணியாளர்கள் இட நெருக்கடிக்கு மத்தியில் அமர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.
எனவே ஒன்றிய அலுவலகத்தை இடித்து விட்டு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை எடுத்து கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே புதிய அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் தொடங்க ப்பட வில்லை. மாவட்ட அதிகாரி கள் உரிய நடவ டிக்கை எடுத்து புதிய ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி களை விரை வில் தொடங்க வேண்டும் என பொது மக்கள் கோரி க்கை விடுத்து ள்ளனர்.
- ரேசன் கடை பகுதியில் தூங்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- தகராறில் தொழிலாளி தலையில் கல்லைபோட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருச நாடு அருகே கீழபூசனூத்து கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது72). இவரது மனைவி இறந்து விட்டதால் தனது மகள் வீட்டில் வசித்து வந்தார்.
இரவு நேரத்தில் அப்பகுதி யில் உள்ள ரேசன் கடை வராண்டாவில் தூங்குவார். அங்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (33) என்பவரும் தூங்கினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இது குறித்து லட்சுமணன் சதீஷ்குமாரின் பெற்றோரி டம் தெரிவித்தார். அவர்கள் சதீஷ்குமாரை கண்டித்தனர்.
இந்த நிலையில் வெளியூர் சென்ற சதீஷ்குமார் மீண்டும் ஊர் திரும்பினார். அப்போது ரேசன் கடையில் தூங்குவதற்காக சென்றார். அங்கு தூங்கிக்கொண்டி ருந்த லட்சுமணனுடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் கல்லை எடுத்து லட்சுமணன் தலையில் போட்டார். இதில் அவர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கிருந்து சதீஷ்குமார் தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் லட்சுமணன் இறந்து கிடப்பதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் வருசநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து லட்சுமணன் உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அப்பகுதியில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






