என் மலர்tooltip icon

    தேனி

    • இவரது சகோதரர் உத்தம பாளையத்தில் இருந்து கொண்டு அவ்வப்போது பெண்ணிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார்.
    • கதவை உடைத்து உள்ளே சென்ற போது பெண்ணின் வீட்டின்ஹாலில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி வடக்கு ராஜ வீதியை சேர்ந்த மணி மந்திரி மகள் விஜயலெட்சுமி (58). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனியாக வாழ்ந்து வந்தார். இவரது சகோதரர் உத்தம பாளையத்தில் இருந்து கொண்டு அவ்வப்போது விஜயலெட்சுமிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார்.

    கடந்த 7ஆம் தேதி வீட்டிற்கு வந்த அவர் மீண்டும் 2 நாட்கள் கழித்து அவருக்கு போன் செய்து ள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சகோதரரின் மகன் முத்துக்குமரன் (38) என்பவர் வீட்டிற்கு வந்து பார்த்தார். வீடு உட்புறமாக பூட்டி இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போது விஜயலெட்சுமி வீட்டின்ஹாலில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்து முத்து க்குமரன் போடி டவுன் போலீசாருக்கு புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெ க்டர் அசோக் தலைமையி லான் போலீசார் அங்கு வந்து அவரது உடலை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன விஜயலெட்சுமிக்கு அதிகளவு சொத்துகள் இருப்பதால் அதற்காக யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் பல்வேறு இடங்க ளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
    • இதனால் விரக்தியடைந்த அவர் அரளி விதையை அரைத்துக் குடித்து மயங்கினார்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியை சேர்ந்த வர் பாலம்மாள் (40). இவர் தோட்டத்தில் கூலிவேலை செய்து வந்தார். சில வருட ங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பால ம்மாள் பல்வேறு இடங்க ளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் விரக்தியடைந்த அவர் அரளி விதையை அரைத்துக் குடித்து மயங்கினார். இதுகுறித்து உத்தம பாளையம் போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனது தம்பிகளுடன் சேர்ந்து முருங்கை பயிரிட்டு வளர்த்து வருகிறார்.
    • சம்பவத்தன்று இவரது தோட்டத்திற்குள் வந்தவர்கள் தங்களுக்கு சொந்தமான இடம் என கூறி தகராறு செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள சென்னம நாயக்க ன்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி (55). இவர் தனது தம்பிகளுடன் சேர்ந்து முருங்கை பயிரிட்டு வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது தோட்டத்திற்குள் வந்த பெரியசாமி, அவரது மனைவி முருகேஸ்வரி, நல்லமாயன், தங்கப்பாண்டி ஆகியோர் இது தங்களுக்கு சொந்தமான இடம் என கூறி தகராறு செய்தனர்.

    மேலும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பராமரிப்பாளர் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு திறந்தநிலையில் இருந்தது.
    • ஆனால் பொரு ட்கள் எதுவும் திருடப்பட வில்லை. கதவுகள் மட்டும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி பிரீத்தா (31). இவர் தற்போது அன்னஞ்சி விலக்கில் குடியிருந்து வருகிறார். வாரம் ஒருமுறை தாமரைக்குளத்தில் உள்ள வீட்டை பார்த்து செல்வார். மேலும் மரியபாக்கியம் என்பவரை பராமரிப்பி ற்காக நியமித்துள்ளார்.

    சம்பவத்தன்று மரிய பாக்கியம் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் கதவு திறந்தநிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். ஆனால் பொரு ட்கள் எதுவும் திருடப்பட வில்லை. கதவுகள் மட்டும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதுகுறித்து பிரீத்தாவுக்கு தகவல் தெரிவித்து, பெரியகுளம் தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகி ன்றனர்.

    • பொதுமக்கள் கோரி க்கையை ஏற்று குமுளியில் பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
    • வணிக வளாக கடைகள், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான அறைகள் மற்றும் கழிப்பறை, குடிநீர் வசதியுடன் இந்த பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    கூடலூர்:

    தமிழக - கேரள எல்லை யில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தின் கடைசி எல்லையாக கூடலூர் நக ராட்சி உள்ளது. இப்பகுதியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை இல்லாததால் லோயர் கேம்பில் தற்காலிக பணிமனை தொடங்க ப்பட்டது.

    இருந்தபோதும் இங்கு நெடுந்தூரத்தில் இருந்து வரும் வெளியூர் பஸ்கள் மட்டுமே நின்று சென்றது. பெரும்பாலான பஸ்கள் நிற்காததால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    மேலும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. எனவே குமுளியில் நிரந்தர பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கூடலூர் நகர்மன்ற தலைவர் மூலம் எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜனுக்கும் இந்த கோரிக்கை அனுப்ப ப்பட்டது. பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி மூலம் இந்த பரிந்துரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    பொதுமக்கள் கோரி க்கையை ஏற்று குமுளியில் பஸ் நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன் ஆகியோர் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகன்துரை, மண்டல இயக்குனர் ஆறுமுகம், பொது மேலா ளர்கள் டேனியல் சால மோன், சமுத்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வணிக வளாக கடைகள், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான அறைகள் மற்றும் கழிப்பறை, குடிநீர் வசதியுடன் இந்த பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களாக முல்லைப்பெரி யாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
    • கூடுதல் தண்ணீர் திறக்கப்ப ட்டுள்ளதால் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் நிலைய த்தில் 36 மெகாவாட்டிலிருந்து 2 ஜெனரேட்டர்கள் மூலம் 46 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. முதல் போக பாசனத்திற்காக கடந்த ஜூன் 1ந் தேதி 300 கன அடி தண்ணீர் திறக்கப்ப ட்டது. அதன்பின் 21ந் தேதி 336 கன அடியாகவும், 24ந் தேதி 400 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டது. ஆகஸ்டு 29ந் தேதி வரை 400 கன அடி திறக்கப்பட்ட நிலையில் மழை குறைந்ததால் 30 ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்ப ட்டது.

    கடந்த மாதம் 5ந் தேதி முதல் மீண்டும் 400 கன அடியாக அதிகரிக்க ப்பட்டது. குருவனூத்து பாலம் அருகே முல்லை ப்பெரியாற்றின் குறுக்கே மதுரை குடிநீர் திட்ட தடுப்பணை கட்டும் பணிக்காக கடந்த 9ந் தேதி அணையிலிருந்து தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முல்லைப்பெரி யாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக 500 கனஅடி நீர் திறக்கப்ப்படு கிறது. இன்று காலை நிலவர ப்படி அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. வரத்து 510 கன அடி. திறப்பு 500 கன அடி. இருப்பு 2520 மி.கன அடி. அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்ப ட்டுள்ளதால் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் நிலைய த்தில் 36 மெகாவாட்டிலிருந்து 2 ஜெனரேட்டர்கள் மூலம் 46 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.11 அடியாக உள்ளது. வரத்து8 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 1634 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 79.04 அடி. வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 12.8, தேக்கடி 2.8, கூடலூர் 1.4, உத்தமபாளையம் 1.2, சண்முகாநதி அணை 1.6, மஞ்சளாறு 6, சோத்து ப்பாறை 4, பெரியகுளம் 3.6 மி.மீ மழையளவு பதிவானது.

    • கேரளாவிற்கு கூலித்தொழி லாளர்களை ஜீப்பில் ஏற்றி செல்லும் செந்தில்குமார் பகலில் நோட்ட மிட்டு இரவில் திருடுவதை வாடிக்கையாக வைத்து ள்ளார்.
    • பகல் நேரத்தில் டிரைவராகவும் இரவில் தான் திருடுவதற்காக தேர்ந்தெடுத்த வீடு , நிறுவனங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (33). இவர் கூடலூரிலிருந்து கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்யும் கூலித்தொழி லாளர்களை ஏற்றி செல்லும் ஜீப் டிரைவராக உள்ளார். இந்நிலையில் குமுளி ஸ்பிரிங் வேலி என்ற இடத்தில் தனியார் செல்போன் டவர் உள்ளது. அங்கு வைத்திருந்த 205 லிட்டர் டீசல் திருடு போனது.

    இதுகுறித்து குமுளி போலீஸ் நிலைய த்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோபின் ஆண்டனி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி னார். அப்போது டீசலை திருடியது செந்தில்கு மார் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் தெரி விக்கையில், கேரளாவிற்கு கூலித்தொழி லாளர்களை ஜீப்பில் ஏற்றி செல்லும் செந்தில்குமார் பகலில் நோட்ட மிட்டு இரவில் திருடுவதை வாடிக்கையாக வைத்து ள்ளார்.

    பகல் நேரத்தில் டிரைவராகவும் இரவில் தான் திருடுவதற்காக தேர்ந்தெடுத்த வீடு , நிறுவனங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார். இவர் மீது குமுளி, வண்டி பெரியாறு, கம்பம் மெட்டு, கட்டப்பணை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது என்றனர்.

    • கிராம தேவதை வழிபாடு, நாகசக்தி அம்மன், அன்னை ஆதிபராசக்தி உருவ பிரதிஷ்டை வழிபாடு, கலச விளக்கு, மகா வேள்வி, விளக்கு பூஜைகள் நடைபெற்றது.
    • விழாவின் ஒரு பகுதியாக மாலை அக்னி சட்டி, முளைப்பாரி மற்றும் கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    வருசநாடு:

    வருசநாடு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் கலச மகாவேள்வி யாகப் பெருவிழா நடைபெற்றது. இதையடுத்து நேற்று மதியம் முதல்கால சுற்று பூஜை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கிராம தேவதை வழிபாடு, நாகசக்தி அம்மன், அன்னை ஆதிபராசக்தி உருவ பிரதிஷ்டை வழிபாடு, கலச விளக்கு, மகா வேள்வி, விளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் ஒரு பகுதியாக மாலை அக்னி சட்டி, முளைப்பாரி மற்றும் கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இளைஞர் வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • சம்பங்கி பூக்களின் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விசுவாசபுரம் பகுதி விவசாயிகள் நிலங்களில் சம்பங்கி மலர் விதை கிழங்குகளை விதை க்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • ஒருவேளை மழை பொய்த்துப் போனாலும் சம்பங்கி பூக்கள் விளைச்சல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சொட்டுநீர் பாசன முறையை கையாண்டு விவ சாயம் செய்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரம், விசுவாசபுரம் சுற்றுப்பகுதி களில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு வரை கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் பூக்கள் உற்பத்தி மிகவும் குறைந்து செடிகள் அனைத்தும் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனிடையே போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு சில நாட்களாக பெய்த மழை காரணமாக விவசாயி கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தற்போது விசுவாசபுரம் பகுதியில் வெள்ளை நிற சம்பங்கி மலர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் விநாயகர் சதுர்த்தி தொடங்கி பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்கள், விசேஷ நாட்களும் கோவில் திருவிழாக்களும் தொடர்ந்து வருவதால் பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் சம்பங்கி பூக்களின் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விசுவாசபுரம் பகுதி விவசாயிகள் நிலங்களில் சம்பங்கி மலர் விதை கிழங்குகளை விதை க்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஒருவேளை மழை பொய்த்துப் போனாலும் சம்பங்கி பூக்கள் விளைச்சல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சொட்டுநீர் பாசன முறையை கையாண்டு விவ சாயம் செய்து வருகின்றனர்.

    செடிகளைச் சுற்றி களைகள் ஏற்படாமல் இருப்பதற்காகவும் உற்பத்தி செலவுகளை குறைக்கும் வகையிலும் சம்பங்கி பூக்கள் பயிரிடப்படும் நிலம் முழுவதும் தார் பாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாய்களில் துளைகள் இடப்பட்டு சம்பங்கி விதை கிழங்குகள் விதைக்கப்பட்டு நவீன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இதனால் செடிகளில் களைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும் .மேலும் தொழிலாளர்கள் தேவையும் குறையும் என்பதால் இதுபோன்ற யுக்தியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • சின்னமனூர் போலீசார் மின் மயானம் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • அப்பகுதியில் சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் போலீசார் மின் மயானம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடிய மாரி முத்து (வயது56), கணேசன் (60) செ ல்வேந்திரன் (57) ஆகியோரை கைது செய்து பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    கோம்பை போலீசார் ரோந்து சென்ற போது தென்னந்தோப்பில் சூதாடிய கணேசன் (47), சிவா (43), ஈஸ்வரன் (48), உதயா (40), அன்பு (44), குபேந்திரன் (50), கருப்பசாமி (48) ஆகியோரை கைது செய்து பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் லோக் அதாலத் நடைபெற்றது.
    • தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம். 2342 வழக்குகளில் ரூ.17,66,64, 278-க்கு தீர்வு காணப்பட்டது என தேனி முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.

    தேனி:

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி, தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரியகுளம், உத்த மபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடி சட்டப் பணிகள் சார்பில் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் லோக் அதாலத் நடைபெற்றது.

    தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில், தேனி முதன்மை மாவட்ட நீதிபதி கணேசன் தலைமை உரையாற்றி தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட சட்டப் பணிகளின் ஆணைக்குழுவின் செய லாளர் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுரேஷ் வரவேற்றார். குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சரவணன், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கோபிநாதன், சார்பு நீதிபதி சுந்தரி, நீதித்துறை நடுவர் லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி (விரைவு) (நீதித்துறை நடுவர் நிலை) ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பெரியகுளத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி மாரியப்பன், நீதித்துறை நடுவர் கமலநாதன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. உத்த மபாளை யத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா, மா வட்ட உரிமையியல் நீதிபதி சரவ ணசெந்தில்கு மார், நீதித்துறை நடுவர்(விரைவு) ரமேஷ், நீதித்துறை நடுவர் ராமநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

    ஆண்டிபட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் பிச்சைராஜன் முன்னிலையில் நடைபெ ற்றது.

    போடியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி உம்முல் பரிதா , நீதித்துறை நடுவர் வேலுமயில் முன்னி லையில் நடைபெற்றது.

    தேனி, உத்தமபாளையம் பெரியகுளம், ஆண்டிபட்டி போடிநாயக்கனூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையி லுள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் வராக்கடன்களுக்காக நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம். 2342 வழக்குகளில் ரூ.17,66,64, 278-க்கு தீர்வு காணப்பட்டது என தேனி முதன்மை மாவட்ட நீதிபதி கணேசன் தெரிவித்தார்.

    • நேற்று மீண்டும் யானைகள் கூட்டமாக அருவி பகுதியில் முகாமிட்டது.
    • தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு புனித நீராடி செல்கின்றனர் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் அருவி பகுதிக்கு வருகின்றனர்.

    தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. தண்ணீர் தேடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக யானைகள் மங்கலதேவி கண்ணகி கோவில் மற்றும் சுருளி பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு யானைகள் முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி பின்னர் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நேற்று மீண்டும் யானைகள் கூட்டமாக அருவி பகுதியில் முகாமிட்டது. இன்றும் அதே பகுதியிலேயே யானைகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    யானைகள் இடம் பெயர்ந்த பின்னர் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ×