என் மலர்
நீங்கள் தேடியது "woman's body"
- இவரது சகோதரர் உத்தம பாளையத்தில் இருந்து கொண்டு அவ்வப்போது பெண்ணிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார்.
- கதவை உடைத்து உள்ளே சென்ற போது பெண்ணின் வீட்டின்ஹாலில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி வடக்கு ராஜ வீதியை சேர்ந்த மணி மந்திரி மகள் விஜயலெட்சுமி (58). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனியாக வாழ்ந்து வந்தார். இவரது சகோதரர் உத்தம பாளையத்தில் இருந்து கொண்டு அவ்வப்போது விஜயலெட்சுமிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார்.
கடந்த 7ஆம் தேதி வீட்டிற்கு வந்த அவர் மீண்டும் 2 நாட்கள் கழித்து அவருக்கு போன் செய்து ள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சகோதரரின் மகன் முத்துக்குமரன் (38) என்பவர் வீட்டிற்கு வந்து பார்த்தார். வீடு உட்புறமாக பூட்டி இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போது விஜயலெட்சுமி வீட்டின்ஹாலில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்து முத்து க்குமரன் போடி டவுன் போலீசாருக்கு புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெ க்டர் அசோக் தலைமையி லான் போலீசார் அங்கு வந்து அவரது உடலை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன விஜயலெட்சுமிக்கு அதிகளவு சொத்துகள் இருப்பதால் அதற்காக யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு மகள் மட்டும் தாயின் பொறுப்பில் வளர்ந்து வந்தார்
- காவல்துறையினர் விசாரிக்க வந்த போது ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது
இந்திய தலைநகர் புது டெல்லியின் வடகிழக்கில் உள்ளது கஜூரி காஸ் பகுதி.
இங்கு வசித்து வந்த திரவுபதி (35) என்பவருக்கு ஜோதிஷ் யாதவ் என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாட்டால் திரவுபதியும், அவரது கணவரும் பிரிந்து வாழ்ந்தனர். நான்கு குழந்தைகளில் 3 பேரை, கணவர் ஜோதிஷ் தன்னுடன் பீகாரில் வளர்த்து வந்தார். இத்தம்பதியினரின் ஒரு 15-வயது மகளை மட்டும் திரவுபதி தன் பொறுப்பில் வளர்ந்து வந்தார்.
முதல் கணவரை பிரிந்த திரவுபதி, சுனில் என்பவருடன் வாழ்ந்து வந்தார். சுனில் கட்டிட பணியாளராக வேலை பார்த்து வந்தார். சில மாதங்களாக திரவுபதிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சுனில் சந்தேகித்ததால், இவர்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், திரவுபதி காணாமல் போனதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இரு தினங்களுக்கு முன் தகவல் வந்தது.
கடைசியாக அவரது மகள் அவரை இரு தினங்களுக்கு முன் கண்டதாகவும் அதற்கு பிறகு அவர் காணவில்லையென்றும் விசாரனையில் தெரிய வந்ததால் காவல்துறையினர் வீட்டை சோதனையிட வந்தனர். அப்போது ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் உரிமையாளர் முன்னிலையில் காவல்துறையினர் அந்த அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு கட்டிலுக்கு கீழே நெற்றியில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்த திரவுபதியின் சடலத்தையும், அவரது கழுத்தை சுற்றி துப்பட்டா ஒன்று இறுக்கப்பட்டிருப்பதையும் காவல்துறையினர் கண்டனர். அறை முழுவதும் ரத்தக் கறை காணப்பட்டது.
கொலை வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், காணாமல் போன சுனிலை தேடி வருகின்றனர்.
அனைத்து கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டிருப்பதாக புது டெல்லி வடகிழக்கு காவல்துறை துணை ஆணையர் ஜாய் டர்கி தெரிவித்தார்.






