என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
ஆண்டிப்பட்டியில் விவசாயிக்கு கொலைமிரட்டல் விடுத்த கும்பல்
- தனது தம்பிகளுடன் சேர்ந்து முருங்கை பயிரிட்டு வளர்த்து வருகிறார்.
- சம்பவத்தன்று இவரது தோட்டத்திற்குள் வந்தவர்கள் தங்களுக்கு சொந்தமான இடம் என கூறி தகராறு செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள சென்னம நாயக்க ன்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி (55). இவர் தனது தம்பிகளுடன் சேர்ந்து முருங்கை பயிரிட்டு வளர்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது தோட்டத்திற்குள் வந்த பெரியசாமி, அவரது மனைவி முருகேஸ்வரி, நல்லமாயன், தங்கப்பாண்டி ஆகியோர் இது தங்களுக்கு சொந்தமான இடம் என கூறி தகராறு செய்தனர்.
மேலும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






