என் மலர்
தேனி
- கேரளாவிற்கு கூலித்தொழி லாளர்களை ஜீப்பில் ஏற்றி செல்லும் செந்தில்குமார் பகலில் நோட்ட மிட்டு இரவில் திருடுவதை வாடிக்கையாக வைத்து ள்ளார்.
- பகல் நேரத்தில் டிரைவராகவும் இரவில் தான் திருடுவதற்காக தேர்ந்தெடுத்த வீடு , நிறுவனங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (33). இவர் கூடலூரிலிருந்து கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்யும் கூலித்தொழி லாளர்களை ஏற்றி செல்லும் ஜீப் டிரைவராக உள்ளார். இந்நிலையில் குமுளி ஸ்பிரிங் வேலி என்ற இடத்தில் தனியார் செல்போன் டவர் உள்ளது. அங்கு வைத்திருந்த 205 லிட்டர் டீசல் திருடு போனது.
இதுகுறித்து குமுளி போலீஸ் நிலைய த்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோபின் ஆண்டனி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி னார். அப்போது டீசலை திருடியது செந்தில்கு மார் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தெரி விக்கையில், கேரளாவிற்கு கூலித்தொழி லாளர்களை ஜீப்பில் ஏற்றி செல்லும் செந்தில்குமார் பகலில் நோட்ட மிட்டு இரவில் திருடுவதை வாடிக்கையாக வைத்து ள்ளார்.
பகல் நேரத்தில் டிரைவராகவும் இரவில் தான் திருடுவதற்காக தேர்ந்தெடுத்த வீடு , நிறுவனங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார். இவர் மீது குமுளி, வண்டி பெரியாறு, கம்பம் மெட்டு, கட்டப்பணை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது என்றனர்.
- கிராம தேவதை வழிபாடு, நாகசக்தி அம்மன், அன்னை ஆதிபராசக்தி உருவ பிரதிஷ்டை வழிபாடு, கலச விளக்கு, மகா வேள்வி, விளக்கு பூஜைகள் நடைபெற்றது.
- விழாவின் ஒரு பகுதியாக மாலை அக்னி சட்டி, முளைப்பாரி மற்றும் கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வருசநாடு:
வருசநாடு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் கலச மகாவேள்வி யாகப் பெருவிழா நடைபெற்றது. இதையடுத்து நேற்று மதியம் முதல்கால சுற்று பூஜை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து கிராம தேவதை வழிபாடு, நாகசக்தி அம்மன், அன்னை ஆதிபராசக்தி உருவ பிரதிஷ்டை வழிபாடு, கலச விளக்கு, மகா வேள்வி, விளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் ஒரு பகுதியாக மாலை அக்னி சட்டி, முளைப்பாரி மற்றும் கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இளைஞர் வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.
- சம்பங்கி பூக்களின் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விசுவாசபுரம் பகுதி விவசாயிகள் நிலங்களில் சம்பங்கி மலர் விதை கிழங்குகளை விதை க்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- ஒருவேளை மழை பொய்த்துப் போனாலும் சம்பங்கி பூக்கள் விளைச்சல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சொட்டுநீர் பாசன முறையை கையாண்டு விவ சாயம் செய்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரம், விசுவாசபுரம் சுற்றுப்பகுதி களில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு வரை கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் பூக்கள் உற்பத்தி மிகவும் குறைந்து செடிகள் அனைத்தும் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனிடையே போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு சில நாட்களாக பெய்த மழை காரணமாக விவசாயி கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தற்போது விசுவாசபுரம் பகுதியில் வெள்ளை நிற சம்பங்கி மலர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் விநாயகர் சதுர்த்தி தொடங்கி பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்கள், விசேஷ நாட்களும் கோவில் திருவிழாக்களும் தொடர்ந்து வருவதால் பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் சம்பங்கி பூக்களின் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விசுவாசபுரம் பகுதி விவசாயிகள் நிலங்களில் சம்பங்கி மலர் விதை கிழங்குகளை விதை க்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒருவேளை மழை பொய்த்துப் போனாலும் சம்பங்கி பூக்கள் விளைச்சல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சொட்டுநீர் பாசன முறையை கையாண்டு விவ சாயம் செய்து வருகின்றனர்.
செடிகளைச் சுற்றி களைகள் ஏற்படாமல் இருப்பதற்காகவும் உற்பத்தி செலவுகளை குறைக்கும் வகையிலும் சம்பங்கி பூக்கள் பயிரிடப்படும் நிலம் முழுவதும் தார் பாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாய்களில் துளைகள் இடப்பட்டு சம்பங்கி விதை கிழங்குகள் விதைக்கப்பட்டு நவீன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இதனால் செடிகளில் களைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும் .மேலும் தொழிலாளர்கள் தேவையும் குறையும் என்பதால் இதுபோன்ற யுக்தியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- சின்னமனூர் போலீசார் மின் மயானம் பகுதியில் ரோந்து சென்றனர்.
- அப்பகுதியில் சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் போலீசார் மின் மயானம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடிய மாரி முத்து (வயது56), கணேசன் (60) செ ல்வேந்திரன் (57) ஆகியோரை கைது செய்து பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கோம்பை போலீசார் ரோந்து சென்ற போது தென்னந்தோப்பில் சூதாடிய கணேசன் (47), சிவா (43), ஈஸ்வரன் (48), உதயா (40), அன்பு (44), குபேந்திரன் (50), கருப்பசாமி (48) ஆகியோரை கைது செய்து பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் லோக் அதாலத் நடைபெற்றது.
- தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம். 2342 வழக்குகளில் ரூ.17,66,64, 278-க்கு தீர்வு காணப்பட்டது என தேனி முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.
தேனி:
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி, தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரியகுளம், உத்த மபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடி சட்டப் பணிகள் சார்பில் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் லோக் அதாலத் நடைபெற்றது.
தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில், தேனி முதன்மை மாவட்ட நீதிபதி கணேசன் தலைமை உரையாற்றி தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட சட்டப் பணிகளின் ஆணைக்குழுவின் செய லாளர் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுரேஷ் வரவேற்றார். குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சரவணன், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கோபிநாதன், சார்பு நீதிபதி சுந்தரி, நீதித்துறை நடுவர் லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி (விரைவு) (நீதித்துறை நடுவர் நிலை) ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியகுளத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி மாரியப்பன், நீதித்துறை நடுவர் கமலநாதன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. உத்த மபாளை யத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா, மா வட்ட உரிமையியல் நீதிபதி சரவ ணசெந்தில்கு மார், நீதித்துறை நடுவர்(விரைவு) ரமேஷ், நீதித்துறை நடுவர் ராமநாதன் முன்னிலையில் நடைபெற்றது.
ஆண்டிபட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் பிச்சைராஜன் முன்னிலையில் நடைபெ ற்றது.
போடியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி உம்முல் பரிதா , நீதித்துறை நடுவர் வேலுமயில் முன்னி லையில் நடைபெற்றது.
தேனி, உத்தமபாளையம் பெரியகுளம், ஆண்டிபட்டி போடிநாயக்கனூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையி லுள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் வராக்கடன்களுக்காக நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம். 2342 வழக்குகளில் ரூ.17,66,64, 278-க்கு தீர்வு காணப்பட்டது என தேனி முதன்மை மாவட்ட நீதிபதி கணேசன் தெரிவித்தார்.
- நேற்று மீண்டும் யானைகள் கூட்டமாக அருவி பகுதியில் முகாமிட்டது.
- தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு புனித நீராடி செல்கின்றனர் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் அருவி பகுதிக்கு வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. தண்ணீர் தேடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக யானைகள் மங்கலதேவி கண்ணகி கோவில் மற்றும் சுருளி பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு யானைகள் முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி பின்னர் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் யானைகள் கூட்டமாக அருவி பகுதியில் முகாமிட்டது. இன்றும் அதே பகுதியிலேயே யானைகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
யானைகள் இடம் பெயர்ந்த பின்னர் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
- வைகை அணையின் நீர்மட்டம் 47.18 அடியாக உள்ளது. 147 கன அடி நீர் வருகிறது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
தற்போது முதல் போக சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அணையின் நீர்மட்டத்தை பொறுத்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மதுரை குடிநீர் திட்டத்துக்காக லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் பம்பிங் செய்வதில் பிரச்சனை ஏறுபட்டது. கூடலூர், உத்தமபாளையம், கம்பம், காமயகவுண்டன்பட்டி, கோம்பை, பண்ணைபுரம், தேவாரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு முல்லைப்பெரியாறு அணை மூலமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 119.40 அடி நீர்மட்டம் உள்ளது. 526 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 400 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று நீர்திறப்பு 500 கன அடியாக உயர்த்தப்பட்டது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.18 அடியாக உள்ளது. 147 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர்திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 79.01 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
பெரியாறு 7, தேக்கடி 0.6, உத்தமபாளையம் 1, சண்முகாநதி அணை 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற இளம்பெண் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் மகள் வினோதினி(17). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு பெரியகுளத்தில் உள்ள ஜவுளிகடையில் வேலைபார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற வினோதினி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- பணம் கொடுக்கல் வாங்கலில் தம்பதியை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே வடகரை வைத்தியநாத புரத்தை சேர்ந்தவர் சுப்பிர மணி மனைவி மனோ ன்மணி(37). விவசாயம் செய்து வருகின்றனர். அழகுபாறை, அணைக்கல் பகுதியில் தென்ன ந்தோப்பை அதேபகுதியை சேர்ந்த சசிக்குமார், கற்பகம் ஆகியோருக்கு கிரைய அக்ரிமெண்ட் செய்து கொடுத்தனர்.
இதற்காக ரூ.10 லட்சம் பேசி முன்பணமாக ரூ.7 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி பணத்தை கேட்டபோது பிறகு தருவதாக இழுத்த டித்து வந்தனர். இந்தநிலை யில் சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி தோப்பில் இருக்கும் போது கற்பகம், சசிக்குமார் ஆகியோர் அத்துமீறி உள்ளே நுழைந்து அவர்களை தகாத வார்த்தை யால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து ள்ளனர்.
தோப்பின் ஆவணம் எங்களிடம் உள்ளது. இத னால் ஒன்றும் செய்யமுடி யாது எனக்கூறி அவரை தாக்க முயன்றனர். இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில் பெரியகுளம் போலீசார் கற்பகம் மற்றும் சசிக்குமார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ்நிலையத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அடையாளம் காண முடியாத நிலையில் இறந்து கிடந்தார்.
- நாய்கள் கடித்தே ஒருவர் இறந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகில் உள்ள தென்கரை கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருபவர் சோனை. இவருக்கு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பஸ் நிலையத்தில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அடையாளம் காண முடியாத நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் பாகங்களை தெருநாய்கள் கடித்து குதறி இருந்தது தெரிய வந்தது.
நோய்வாய் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தவர் மயங்கி விழுந்த நிலையில் தெருநாய்கள் கடித்திருக்க லாம் என்றும், பஸ்க்காக காத்திருந்தபோது தெரு நாய்கள் கடித்திரு க்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.நகரில் தெரு நாய்கள் தொல்லையால் பொது மக்கள் பாதிக்க ப்பட்டு வரும் நிலையில் நாய்கள் கடித்தே ஒருவர் இறந்திரு ப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்து ள்ளது.
இது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை கைபற்றி மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார்.
- மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தி.மு.கவை தீய சக்தி என்று கூறி வந்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டத்தில் என் மண் என் மக்கள் என்ற கோஷத்துடன் பா.ஜ.க மாநில தலைவர் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கம்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,
கம்பத்தில் சாகுபடியாகும் திராட்சை சுவை மிகுந்தது. ஆனால் தற்போது கஞ்சா விற்பனையின் தலைநகரமாக மாறியுள்ளது. ஆனால் இதைபற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. மத்திய அரசின் திட்டங்களை முதலமைச்சர் மாநில அரசின் திட்டங்களை போல காட்டி வருகிறார். கேரளாவின் மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் இடமாக தமிழகம் மாறி வருகிறது. இதனை முதலமைச்சர் தட்டி கேட்பதில்லை. காரணம் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடப்பதால் கூட்டணியில் பிளவு வந்துவிட கூடாது என்பதற்காக மவுனம் காக்கிறார்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வைகை அணை தூர்வாரப்படவில்லை. கண்ணகி கோவிலை கேரளாவிற்கு தாரை வார்த்துவிட்டனர்.
சனாதனம் குறித்து பட்டத்து இளவரசர் உதயநிதி புதிய தத்துவம் கூறி உள்ளார். கோவிலில் எவ்வாறு சாமி கும்பிட வேண்டும் என இவர்கள் சொல்லி தர தேவையில்லை. ஏற்றத்தாழ்வு, சாதிய பாகுபாடு இருக்க கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். சனாதனம் பற்றி பேசும் உதயநிதி தனது தாயாரை கோவிலுக்கு செல்ல கூடாது என கூற முடியுமா? அதனால்தான் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தி.மு.கவை தீய சக்தி என்று கூறி வந்தனர்.
ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு என முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் தி.மு.க மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. விடுதலை செய்யப்பட்ட பல தி.மு.க அமைச்சர்களின் வழக்குகள் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அவர்கள் எந்தெந்த சிறையில் இருப்பார்கள் என்பது தெரியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை கைபற்றி மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார் இவ்வாறு அவர் பேசினார்.
3ஆம் நாள் பயணமாக இன்று தேனி நகர் பொம்மைய கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து பங்களா மேடு வரை பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
- கிருஷ்ணஜெயந்தி விழாவையையொட்டி 30 அடி உயர வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறினர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி பாலகிருஷ்ணசாமி கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவிலாகும்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன் படி இந்த ஆண்டு 3 நாட்கள் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவு நாள் நிகழ்ச்சியாக வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு 30 அடி உயரம் கொண்ட தேக்குமரம் ஊன்றப்பட்டது.
அதன்பின் இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏற முயன்றனர். அவர்கள் மீது மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் கம்பத்தின் உச்சியில் இருந்த பரிசை இளைஞர்கள் எடுத்து வந்தபோது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணாசேகர் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.






