என் மலர்tooltip icon

    தேனி

    • மருத்துவ உதவி கேட்டு தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
    • மாணவியின் மருத்துவ உதவிக்கு மாவட்ட கலெக்டர் பொறுப்பு நிதியில் இருந்து நிதி வழங்க உத்தரவிட்டார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே முத்துசங்கிலிபட்டியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விளம்பர சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ரூபிகா 2 கால்களிலும் படுகாயம் ஏற்பட்டது. அவரது தாயார் மருத்துவ உதவி கேட்டு தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

    மாணவியின் மருத்துவ உதவிக்கு மாவட்ட கலெக்டர் பொறுப்பு நிதியில் இருந்து நிதி வழங்க உத்தரவிட்டார். அதன்படி ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாணவியின் தாயிடம் ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் மொட்டனூத்து ஊராட்சி தலைவர் நிசாந்தி தனது சொந்த நிதியில் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினர்.

    அப்போது ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ. அய்யப்பன், ஊராட்சி செயலாளர் விஜயன், இந்துமுன்னணி மனோஜ்குமார், ஆச்சி, கார்த்திக், பகவதிராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

    • 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மழலையர் கல்வி முறை வகுப்புகள் கருவேல்நாயக்கன்பட்டி சமுதாயக்கூடத்தில் நவீன முறையில் தொடங்கப்பட்டது.
    • முன்னதாக பள்ளிக்கு வந்த மழலையர் மாணவ, மாணவிகளுக்கு பேண்டு, மேளதாளத்துடன், பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் நடுநிலை பள்ளியின் சார்பில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மழலையர் கல்வி முறை வகுப்புகள் கருவேல்நாயக்கன்பட்டி சமுதாயக்கூடத்தில் நவீன முறையில் தொடங்கப்பட்டது.

    இந்த தொடக்க நிகழ்ச்சிக்கு தேனி அல்லிநகரம் நகராட்சி 33-வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும், பள்ளி மேலாண்மை குழு தலைவருமான கடவுள் தலைமை தாங்கி வகுப்பினை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு மழலையர் அமரும் நாற்காலி மற்றும் கல்வி உபகரணங்கள், இனிப்புகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டிலட்சுமி, ஆசிரியர்கள் அறிவுடைநம்பி, சரண்யா, அஜீத்தா மற்றும் பொது பள்ளி பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிக்கு வந்த மழலையர் மாணவ, மாணவிகளுக்கு பேண்டு, மேளதாளத்துடன், பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • மின்சாரம் பெறப்படும் முறை குறித்து மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்று போன்ற பல்வேறு தடையின்மை சான்றுகளை பெற வேண்டும்
    • சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காலையில் 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்தப்பட வேண்டும்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    விநாயகர் சிலை அமைப்பதற்கு வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி சான்று, சிலை வைக்கப்படும் இடம் குறித்து தனியார்,அரசு,உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் தடையில்லா சான்று, ஒலிபெருக்கி அமைப்பது தொடர்பாக தடையில்லாச் சான்று, தற்காலிக அமைப்புகள் தீயணைப்புத்துறையின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ளதற்கான தடையில்லாச் சான்று, சட்ட விரோத மின் இணைப்பு இருக்க கூடாது என்பதற்காக மின்சாரம் பெறப்படும் முறை குறித்து மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்று போன்ற பல்வேறு தடையின்மை சான்றுகளை பெற வேண்டும்

    பீடம் மற்றும் சிலையுடன் மொத்த உயரம் 10 அடிக்கு மேலாக இருக்க கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் அமைக்கக் கூடாது. களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட வேண்டும். சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காலையில் 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்தப்பட வேண்டும்.

    விநாயகர் சிலைகள் வைத்து வழிபடும் இடங்களில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். சிலை அமையும் இடத்தில் அரசியல் கட்சியினரின் பெயர் பலகைகள் வைக்க கூடாது. சிலை வைத்திருக்கும் பொழுது எந்த அமைப்பின் மூலம் வைக்கப்படுகிறதோ அந்த அமைப்பினைச் சேர்ந்த 2 நபர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். பிற மத வழிபாட்டுத் தலங்களின் வழியே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல கூடாது.

    ரசாயன கலவையற்ற சிலைகளை பயன்படுத்தவேண்டும். சிலைகளை கரைப்பதற்கு முன்பாக மாலைகள், வஸ்திரங்கள் அலங்கார பொருட்களை அப்புறப்படுத்தி, கரைக்கப்படும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட வேண்டும். விதிகளை மீறுவோர்மீது அபராதம் விதிக்கப்படும்.

    விநாயகர் சிலைகளை பெரியகுளத்தில் பாலசுப்பிரமணியன் கோவில் அருகில் உள்ள வராகநதி, உத்தமபாளையத்தில் ஞானம்மாள் கோவில் அருகில் உள்ள முல்லைப்பெரியாறு, கம்பம் சுருளிப்பட்டி ரோடு அருகில் உள்ள முல்லைப்பெரியாறு, சின்னமனுார்-மார்கையன்கோட்டை பாலம் அருகில் உள்ள முல்லைபெரியாறு, தேனி அரண்மனைப்புதுார் பாலம் அருகில் உள்ள முல்லைபெரியாறு, ஆண்டிபட்டி-பெரியகுளம் சாலையில் உள்ள வைகை ஆறு, வருசநாடு அருகில் உள்ள மொட்டப்பாறை செக்டேம், போடி பகுதியில் உள்ள கொட்டக்குடி (புதூர்) ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • பலியான ஜெகன்குமார் உடல் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் ஜெகன்குமார்(29). இவர் தனியார் செல்போன் கடையில் வேலைபார்த்து வந்தார். இவருடன் கோம்பையை சேர்ந்த அன்னபூரணி(18) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தினமும் பணிமுடிந்ததும் அன்னபூரணியை அவரது வீட்டில் இறக்கிவிட்டு மீண்டும் காலையில் வேலைக்கு அழைத்து வருவது ஜெகன்குமாருக்கு வழக்கம். அதன்படி நேற்று இரவு பணிமுடிந்து கடையில் இருந்து அன்னபூரணியை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

    உத்தமபாளையம் சாலையில் துர்க்கையம்மன் கோவில் அருகே குமுளியில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜெகன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அன்னபூரணி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பலியான ஜெகன்குமார் உடல் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    • கம்பம்-குமுளி சாலையில் அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • சோதனையில் யானை தந்தம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் வனப்பகுதியில் யானை தந்தம் கடத்தப்படுவதாக மத்திய வ னவிலங்கு குற்றகா ட்டுப்பாட்டு பணியக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வனவிலங்கு குற்றகட்டுப்பாட்டு பணியக இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் கம்பம் மேற்கு ரேஞ்சர் ஸ்டாலின் மற்றும் வனத்துறையினர் கம்பம்-குமுளி சாலையில் அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அவர்கள் யானை தந்தம் கடத்தியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து யானை தந்தத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கூடலூர் கன்னிகாளி புரத்தை சேர்ந்த சுரேஷ்கண்ணன்(32), கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கடைசிகடவு பகுதியை சேர்ந்த முகேஷ்கண்ணன் (28) என்பதும், யானை தந்தத்தை பைக்கில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து எங்கிருந்து யானை தந்தம் கடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் ேவறு யாருக்கும் தொடர்புள்ளதா என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப தகராறில் வேதனையடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி விஸ்வதாஸ்காலனியை சேர்ந்த ஜெயக்குமார் மகள் காஞ்சனா(17). இவர் பெரியகுளத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம்ஆண்டு படித்து வந்தார். இவரை அதேபகுதியை சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் இருகுடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த மாணவி காஞ்சனா சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை ஜெயக்குமார் கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையில் இளம்பெண் விஷம் குடித்து மயங்கினார்.
    • சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் காந்திகிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மனைவி கார்த்திகா(25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து கார்த்திகா தனது பெற்றோரிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் மனோஜ்குமார் கார்த்திகாவின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கார்த்திகா விஷம்குடித்து மயங்கியதாகவும், அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார்.

    இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேனி மாவட்டம் போடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார் 64 இடங்களில் சிலை பிரதி ஷ்டை செய்ய திட்டமிட ப்பட்டள்ளது.
    • விநாயாகர் சிலை ஊர்வலம் போலீ சார் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட சாலைகளில் நடைபெற உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    நாடு முழுவதும் வருகிற 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு இந்து அமைப்பினர் 3 அடி முதல் 12 அடிவரை விநாயகர் சிலை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்ற னர். தேனி மாவட்டம் போடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார் 64 இடங்களில் சிலை பிரதி ஷ்டை செய்ய திட்டமிட ப்பட்டள்ளது.

    இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விநாயாகர் சிலை ஊர்வலம் போலீ சார் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட சாலைகளில் நடைபெற உள்ளது.

    • தேனி மாவட்ட எல்லைகளான கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு பகுதிகளில் சோதனை நடத்த கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
    • போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து மாவட்ட எல்லையில் வாகனங்களில் வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்கின்றனர்.

    கம்பம்:

    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலால் கடந்த 2019, 2021ஆம் ஆண்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. கோழிக்கோடு மருதோங்கரை, ஆயஞ்சேரி பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக புனேவில் உள்ள மத்திய அரசு வைராலஜி இன்ஸ்டியூடிட்ற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் 4 பேருக்கு நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனாஜார்ஜ் தெரிவித்துள்ளார். இறந்த 2 பேர் மற்றும் குடும்பத்தினர் 2 பேருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் கோழிக்கோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கூலித்தொழிலாளர்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினர் சென்று வருகின்றனர். எனவே தேனி மாவட்ட எல்லைகளான கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு பகுதிகளில் சோதனை நடத்த கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதன் பேரில் கம்பம் மெட்டு அடிவார பகுதியில் டாக்டர் சிராஜீதின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முரளி, தினேஷ் மற்றும் குழுவினர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன் மற்றும் போலீசாருடன் இணைந்து வாகனங்களில் வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்கின்றனர்.

    மேலும் கேரளாவில் இருந்து வரும் வாகன ஓட்டிகளின் விபரங்களை சேகரித்து வருகிறனர் என தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.

    • போடி நகராட்சி பகுதி களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
    • பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ரூ.12,000 வசூல் செய்யபட்டது.

    போடி:

    போடி நகராட்சி பகுதி களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

    அதன் பேரில் நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி தலைமையில் சுகாதார அதிகாரிகள் போடி காமராஜர் பஜார், பஸ் நிலையம் உள்ளிட்ட நகர்ப்பகுதியில் உள்ள ஓட்டல், வணிக நிறுவன ங்கள், இறைச்சிக் கடை களில் சோதனை நடத்தினர்.

    அப்போது சில கடைகளில் பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ரூ.12,000 வசூல் செய்யபட்டது.

    மேலும் கடைகளில் இருந்து 120 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது போன்று தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடை களின் உரிமம் ரத்து செய்ய ப்படுவதுடன் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.

    • காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது. கூட்டத்தில் கலெ க்டர் ஷஜீவனா தலைமை வகித்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • முகாமில் பல்வேறு திட்டங்கள் சார்பில் 1061 பயனாளி களுக்கு ரூ.6.94 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது. கூட்டத்தில் கலெ க்டர் ஷஜீவனா தலைமை வகித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது,

    பருவகாலங்களில் விவசாயிகள் இடுபொரு ட்கள் பெறுவதற்கு தேவை யான செலவினங்களை மேற்கொள்ள தங்களது வீடுகளில் உள்ள நகைகளை அடகு வைத்து கடனாக பெற்று விவசாயம் செய்து வருவதாக தெரிவித்தார்கள். இதை தவிர்ப்பதற்காக அனைத்து தேசியமயமாக்க ப்பட்ட வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும், விவசாய பணிகளுக்கென விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    விவசாய கடன் அட்டை பெறுவதன் மூலம் ரூ.1.60 லட்சம் வரையில் நில உடைமை அடிப்படையில் பிணையமில்லா கடனாக பெறலாம். மேலும், அசலுடன் வட்டியை குறித்த காலத்தில், சரியாக செலுத்தும் விவசாயிகளுக்கு, 3 சதவீத வட்டி தொகை, ஊக்கத்தொகையாக விவசாயிகள் வங்கி கண க்கில் வரவு வைக்கப்படும்.

    விவசாயிகள் உழவன் செயலி மற்றும் இ-நாம் செயலியை பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஆன்லைன் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் பெறமுடியும். மேலும், இணையவழி மூலம் விவசாய பொருட்களை விற்பனை செய்வது தொட ர்பான சந்தேகங்க ளுக்கு வேளாண்துறை அதிகாரி களை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என்றார். இந்த முகாமில் பல்வேறு திட்டங்கள் சார்பில் 1061 பயனாளி களுக்கு ரூ.6.94 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இம்முகாமில் தேனி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் கவிதா நந்த கோபால், ஊராட்சிமன்ற தலைவர்ரமேஷ்பாபு, வட்டாட்சியர் சரவணபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் வசதி இல்லாததால் ஆண்டிபட்டி மற்றும் சக்கம்பட்டி பகுதிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
    • நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இப்பகுதிகளில் இயக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிகளுக்கு கடந்த 40 ஆண்டுகளாக இயக்கி வந்த பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.

    அதன்பின் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் ஆண்டிபட்டி மற்றும் சக்கம்பட்டி பகுதிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பஸ் வசதி இல்லாததால் ஆட்டோவிற்கு அதிக தொகை கொடுத்து சென்று வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் இப்பகுதிகளில் இருந்து ஆண்டிபட்டிக்கு அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்களும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இப்பகுதிகளில் இயக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×