என் மலர்tooltip icon

    தேனி

    • குடும்ப பிரச்சினையில் இளம்பெண் விஷம் குடித்து மயங்கினார்.
    • சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் காந்திகிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மனைவி கார்த்திகா(25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து கார்த்திகா தனது பெற்றோரிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் மனோஜ்குமார் கார்த்திகாவின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கார்த்திகா விஷம்குடித்து மயங்கியதாகவும், அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார்.

    இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேனி மாவட்டம் போடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார் 64 இடங்களில் சிலை பிரதி ஷ்டை செய்ய திட்டமிட ப்பட்டள்ளது.
    • விநாயாகர் சிலை ஊர்வலம் போலீ சார் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட சாலைகளில் நடைபெற உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    நாடு முழுவதும் வருகிற 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு இந்து அமைப்பினர் 3 அடி முதல் 12 அடிவரை விநாயகர் சிலை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்ற னர். தேனி மாவட்டம் போடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார் 64 இடங்களில் சிலை பிரதி ஷ்டை செய்ய திட்டமிட ப்பட்டள்ளது.

    இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விநாயாகர் சிலை ஊர்வலம் போலீ சார் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட சாலைகளில் நடைபெற உள்ளது.

    • தேனி மாவட்ட எல்லைகளான கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு பகுதிகளில் சோதனை நடத்த கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
    • போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து மாவட்ட எல்லையில் வாகனங்களில் வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்கின்றனர்.

    கம்பம்:

    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலால் கடந்த 2019, 2021ஆம் ஆண்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. கோழிக்கோடு மருதோங்கரை, ஆயஞ்சேரி பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக புனேவில் உள்ள மத்திய அரசு வைராலஜி இன்ஸ்டியூடிட்ற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் 4 பேருக்கு நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனாஜார்ஜ் தெரிவித்துள்ளார். இறந்த 2 பேர் மற்றும் குடும்பத்தினர் 2 பேருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் கோழிக்கோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கூலித்தொழிலாளர்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினர் சென்று வருகின்றனர். எனவே தேனி மாவட்ட எல்லைகளான கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு பகுதிகளில் சோதனை நடத்த கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதன் பேரில் கம்பம் மெட்டு அடிவார பகுதியில் டாக்டர் சிராஜீதின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முரளி, தினேஷ் மற்றும் குழுவினர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன் மற்றும் போலீசாருடன் இணைந்து வாகனங்களில் வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்கின்றனர்.

    மேலும் கேரளாவில் இருந்து வரும் வாகன ஓட்டிகளின் விபரங்களை சேகரித்து வருகிறனர் என தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.

    • போடி நகராட்சி பகுதி களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
    • பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ரூ.12,000 வசூல் செய்யபட்டது.

    போடி:

    போடி நகராட்சி பகுதி களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

    அதன் பேரில் நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி தலைமையில் சுகாதார அதிகாரிகள் போடி காமராஜர் பஜார், பஸ் நிலையம் உள்ளிட்ட நகர்ப்பகுதியில் உள்ள ஓட்டல், வணிக நிறுவன ங்கள், இறைச்சிக் கடை களில் சோதனை நடத்தினர்.

    அப்போது சில கடைகளில் பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ரூ.12,000 வசூல் செய்யபட்டது.

    மேலும் கடைகளில் இருந்து 120 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது போன்று தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடை களின் உரிமம் ரத்து செய்ய ப்படுவதுடன் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.

    • காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது. கூட்டத்தில் கலெ க்டர் ஷஜீவனா தலைமை வகித்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • முகாமில் பல்வேறு திட்டங்கள் சார்பில் 1061 பயனாளி களுக்கு ரூ.6.94 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது. கூட்டத்தில் கலெ க்டர் ஷஜீவனா தலைமை வகித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது,

    பருவகாலங்களில் விவசாயிகள் இடுபொரு ட்கள் பெறுவதற்கு தேவை யான செலவினங்களை மேற்கொள்ள தங்களது வீடுகளில் உள்ள நகைகளை அடகு வைத்து கடனாக பெற்று விவசாயம் செய்து வருவதாக தெரிவித்தார்கள். இதை தவிர்ப்பதற்காக அனைத்து தேசியமயமாக்க ப்பட்ட வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும், விவசாய பணிகளுக்கென விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    விவசாய கடன் அட்டை பெறுவதன் மூலம் ரூ.1.60 லட்சம் வரையில் நில உடைமை அடிப்படையில் பிணையமில்லா கடனாக பெறலாம். மேலும், அசலுடன் வட்டியை குறித்த காலத்தில், சரியாக செலுத்தும் விவசாயிகளுக்கு, 3 சதவீத வட்டி தொகை, ஊக்கத்தொகையாக விவசாயிகள் வங்கி கண க்கில் வரவு வைக்கப்படும்.

    விவசாயிகள் உழவன் செயலி மற்றும் இ-நாம் செயலியை பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஆன்லைன் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் பெறமுடியும். மேலும், இணையவழி மூலம் விவசாய பொருட்களை விற்பனை செய்வது தொட ர்பான சந்தேகங்க ளுக்கு வேளாண்துறை அதிகாரி களை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என்றார். இந்த முகாமில் பல்வேறு திட்டங்கள் சார்பில் 1061 பயனாளி களுக்கு ரூ.6.94 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இம்முகாமில் தேனி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் கவிதா நந்த கோபால், ஊராட்சிமன்ற தலைவர்ரமேஷ்பாபு, வட்டாட்சியர் சரவணபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் வசதி இல்லாததால் ஆண்டிபட்டி மற்றும் சக்கம்பட்டி பகுதிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
    • நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இப்பகுதிகளில் இயக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிகளுக்கு கடந்த 40 ஆண்டுகளாக இயக்கி வந்த பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.

    அதன்பின் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் ஆண்டிபட்டி மற்றும் சக்கம்பட்டி பகுதிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பஸ் வசதி இல்லாததால் ஆட்டோவிற்கு அதிக தொகை கொடுத்து சென்று வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் இப்பகுதிகளில் இருந்து ஆண்டிபட்டிக்கு அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்களும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இப்பகுதிகளில் இயக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் கேரளாவிற்கு ஏலக்காய், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர்.
    • ஆனால் போடிமெட்டு சோதனை சாவடியில் எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் வாகனங்கள் வழக்கம்போல் சென்றுவர அனுமதிக்கப்படுகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளா மாநிலத்தில் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக நிபா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கோழிக்கோடு பகுதியில் இந்த வைரஸ் தாக்குதலால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் கேரளாவை ஒட்டியுள்ள கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டு யாருக்கேனும் நோய்தொற்று அறிகுறி உள்ளதா என சோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் கேரளாவிற்கு ஏலக்காய், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். இதனால் நோய் பரவலை தடுக்க மருத்துவ முகாம்கள், சோதனை சாவடியில் கண்காணிப்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் போடிமெட்டு சோதனை சாவடியில் எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் வாகனங்கள் வழக்கம்போல் சென்றுவர அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் கம்பம்மெட்டு, குமுளி வழிப்பாதையிலும் வாகனங்கள் சோதனை செய்யப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர். எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆசிரியைக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
    • இந்நிலையில் மது போதையில் வந்த கணவர் அவரது மனையின் பள்ளிக்குள் நுழைந்து அவரை சரமாரியாக பிளேடால் கிழித்துள்ளார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த பிரியங்கா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பிரியங்காவுக்கும் அவரது கணவர் ரமேஷுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மது போதையில் வந்த ரமேஷ் மனைவி பிரியங்கா பணிபுரியும் தனியார் பள்ளிக்குள் நுழைந்து அவரை சரமாரியாக பிளேடால் கிழித்துள்ளார். அப்போது அங்கே இருந்த சக பெண் ஆசிரியர் தடுக்க முற்பட்டபோது அவரையும் பிளேடால் கிழித்துள்ளார். இதனைப் பார்த்த பள்ளி குழந்தைகள் அலறி அடித்து பள்ளி வகுப்பறைக்குள் அங்கு மிங்கும் ஓடி கூச்சலிட்டுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் ரமேசை கைது செய்து பெரியகுளம் வடகரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் காயமடைந்த பிரியங்கா மற்றும் சக ஆசிரியை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர். ரமேஷ் மனை வியின் தாய் வீட்டிற்கு சென்று பிரியங்காவின் தாயை தாக்க முற்பட்டபோது தடுக்க வந்த நபரையும் தாக்கியதாக தென்கரை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் அங்கு செல்லவில்லை.
    • பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் மகாலட்சுமி (16). அப்பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அங்கு செல்லவில்லை.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மன உளைச்சல், கல்லூரி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பள்ளபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி பாக்கியம் (42). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் வெறுத்த பாக்கியம் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனி செட்டிபட்டி போலீசாா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள் புரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் மேகலா (20). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே அய்யம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டி மனைவி ரத்தினம் (72). இவரது கணவர் கடந்த 2 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் இவரை நாய் கடித்து விட்டதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனம் வெறுத்த ரத்தினம் உத்தமபாளையம் முல்லை பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பல மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித பணியும் நடைபெறவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
    • பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் இரவு நேரங்களில் பொதுமக்கள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி ஊராட்சி சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் பாலம் கட்டுவதற்கு நடு ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித பணியும் நடைபெறவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பாலம் கட்டுவதற்கு ரூ.7.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை இந்த பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் இரவு நேரங்களில் பொதுமக்கள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டுமென சென்னமநாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணலாறு பகுதியில் ஹைவேவிஸ் அணை, தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் உலாவந்து செல்கிறது.
    • இதனால் கூலித்தொழிலாளர்கள் அச்சமடைந்து வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்லாறு, மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ் ஆகிய 7 மலைகிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

    வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, புலி போன்ற பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக இவை அடிக்கடி தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவது வாடிக்கையாக உள்ளது.

    தற்போது மணலாறு பகுதியில் ஹைவேவிஸ் அணை, தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் உலாவந்து செல்கிறது. இதனால் கூலித்தொழிலாளர்கள் அச்சமடைந்து வீடுகளில் முடங்கி உள்ளனர். சின்னமனூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனத்துறையினர் இந்த யானைகளை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபகுதியில் அரிசிகொம்பன் யானை நடமாடி பொதுமக்களை பீதியடைய வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×