என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குமுளி அருகே ரூ.45 லட்சம் கள்ளநோட்டு, அச்சடிக்கும் எந்திரம் பறிமுதல்: 8 பேர் கைது
    X

    குமுளி அருகே ரூ.45 லட்சம் கள்ளநோட்டு, அச்சடிக்கும் எந்திரம் பறிமுதல்: 8 பேர் கைது

    • செல்போன் கவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.22 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 44 பறிமுதல் செய்யப்பட்டது.
    • கள்ளநோட்டுகள் சப்ளை செய்த சுப்பிரமணியனை சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே வண்டிபெரியாறில் உள்ள தனியார் வங்கியில் 500 ரூபாய் கள்ளநோட்டு 2 செலுத்தப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பீர்மேடு டி.எஸ்.பி. குரியகோஸ் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் வண்டிபெரியாறு டைமுக் ஆத்தோரம் பகுதியை சேர்ந்த சபின்ஜேக்கப் கள்ளநோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வண்டி பெரியாறு போலீசார் அவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது செல்போன் கவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.22 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 44 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அணைக்கரையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் சென்னையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.

    அவரிடம் ரூபாய் 20 ஆயிரம் கொடுத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து சபின்ஜேக்கப், ராஜேஷ், தனியார் பஸ் கண்டக்டர் சிஜூபிலிப் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு கள்ளநோட்டுகள் சப்ளை செய்த சுப்பிரமணியனை சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.45 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் நோட்டு அடிக்கும் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சுப்பிரமணியனை வண்டிபெரியாறு போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×