search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்தமபாளையத்தில் காரில் வாைழத்தார் திருடிய 2 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    உத்தமபாளையத்தில் காரில் வாைழத்தார் திருடிய 2 பேர் கைது

    • வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்ததை நோட்டமிட்ட மற்ற விவசாயிகள் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மற்றவர்களை ஒருங்கிணைத்தனர்.
    • அவர்கள் அந்த கும்பலை நெருங்கியபோது அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வாழைத்தார் திருடிச்செல்லும் சம்பவம் அதிகரித்தது. இந்த நிலையில் உத்தமபாளையம்-கோம்பை சாலையில் வாழைத்ேதாட்டம் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு கார் நின்றது.

    அதிலிருந்த சிலர் பாதர்கான்பாளையத்தை சேர்ந்த விவசாயி தோட்டத்தில் புகுந்தனர். அங்கு வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்தனர். இதனைநோட்டமிட்ட மற்ற விவசாயிகள் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மற்றவர்களை ஒருங்கிணைத்தனர்.

    அவர்கள் அந்த கும்பலை நெருங்கியபோது அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து காரை மடக்கி பிடிக்க முயன்றபோது 2 பேர் சிக்கினர். அவர்களை உத்தமபாளையம் போலீசில் விவசாயிகள் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் வாழைத்தார் திருடியது யோகேஸ்வரன் மற்றும் சூர்யா என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய புதியவன், அசோக், மாரி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×