என் மலர்
தேனி
- இலவச பேருந்து பயண திட்டம், பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
- இதன்மூலம் பெண்கள் மற்றவர் உதவியை எதிர்பார்க்காமல் சுயமரியாதையாகவும், தன்னம்பிகையாகவும் வாழ வழிவகை செய்துள்ளார்.
தேனி:
தமிழக முதல்-அமைச்ச ரின் சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைச்சர் இ.பெரியசாமி, கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி பேசிய தாவது,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறு ப்பேற்றவுடன், பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை கருத்தில் கொண்டு பெண்கள் சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல்படும் வகையிலும், அவர்களின் வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு, ஆகியவற்றினை உறுதி செய்யும் வகையில் இலவச பேருந்து பயண திட்டம், பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதே போல் அனைத்து குழந்தைகளையும் தன் குழந்தைகளாக கருதி இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இல்லாத வகையில், காலையில் மாண வர்கள் உணவரு ந்தாமல் பள்ளி செல்ல கூடாது என்றும் காலை உணவை தவிர்ப்பதனால் ஏற்படும் சத்து குறை பாட்டினை கருத்தில் கொண்டு வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வரலாற்று சிறப்புமிக்க காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.
மேலும், குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெ ண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக ரூ.1.6 கோடி மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை இன்று தொடங்கி வைத்து மக்களின் முதல்வர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். இதன்மூலம் பெண்கள் மற்றவர் உதவியை எதிர்பார்க்காமல் சுயமரியாதையாகவும், தன்னம்பிகையாகவும் வாழ வழிவகை செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
- வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்ததை நோட்டமிட்ட மற்ற விவசாயிகள் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மற்றவர்களை ஒருங்கிணைத்தனர்.
- அவர்கள் அந்த கும்பலை நெருங்கியபோது அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வாழைத்தார் திருடிச்செல்லும் சம்பவம் அதிகரித்தது. இந்த நிலையில் உத்தமபாளையம்-கோம்பை சாலையில் வாழைத்ேதாட்டம் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு கார் நின்றது.
அதிலிருந்த சிலர் பாதர்கான்பாளையத்தை சேர்ந்த விவசாயி தோட்டத்தில் புகுந்தனர். அங்கு வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்தனர். இதனைநோட்டமிட்ட மற்ற விவசாயிகள் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மற்றவர்களை ஒருங்கிணைத்தனர்.
அவர்கள் அந்த கும்பலை நெருங்கியபோது அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து காரை மடக்கி பிடிக்க முயன்றபோது 2 பேர் சிக்கினர். அவர்களை உத்தமபாளையம் போலீசில் விவசாயிகள் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் வாழைத்தார் திருடியது யோகேஸ்வரன் மற்றும் சூர்யா என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய புதியவன், அசோக், மாரி ஆகியோரை தேடி வருகின்றனர்.
- கடமலை க்குண்டு பஞ்சாயத்து அலுவலக தெருவை சேர்ந்தவர் சிறுவனை தூக்கி சென்று அவர் கழுத்தில் அணிந்திந்த தங்க தாயத்தை திருடி சென்றார்.
- அதன்பின் அவரை தேடி சென்ற போது அவர் மாயமானார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகில் உள்ள கரட்டுப்பட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (45). இவரது மகன் பவேஷ் (5) என்பவர் தனது வீட்டு அருகே சிறுவர்களுடன் விளையாடி க்கொண்டி ருந்தார்.
அப்போது கடமலை க்குண்டு பஞ்சாயத்து அலுவலக தெருவை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் சிறுவனை தூக்கி சென்று அவர் கழுத்தில் அணிந்திந்த தங்க தாயத்தை திருடி சென்றார். இதுகுறித்து சிறுவன் தனது தாய் கலையரசியிடம் கூறினான். அதன்பின் பாஸ்கரனை தேடி சென்ற போது அவர் மாயமானார்.
சம்பவத்தன்று கருப்பசாமி கோவில் அருகே நின்று கொண்டிருந்த பாஸ்கரன் குறித்து கடமலை க்குண்டு போலீஸ் நிலை யத்தில் கலையரசி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி சம்பவ இடத்திற்கு சென்று பாஸ்கரனை கைது செய்து விசாரித்து வருகிறார்.
- நேற்று காலை குளிக்கச்சென்றவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
- வடக்கு கரையோரம் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கினார்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பக்ருதீன்(44). டெய்லராக பணிபுரிந்து வந்தார். வழக்கமாக முல்லைபெரியாற்றில் குளித்து வந்தார். அதன்படி நேற்று காலை அங்கு குளிக்கச்சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
வடக்கு கரையோரம் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் பக்ருதீன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 5ம் நம்பர் தேயிலை தோட்டம் அருகிலும் சிறுத்ைத நடமாடியதால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் வண்டிபெரியார் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
- கடந்த ஒரு வாரத்தில் தேயிலை தோட்டத்தில் ஆடு, நாய்கள் கொல்லப்பட்டு இறந்து கிடந்தன.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே மூங்கிலாறு பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பணி முடிந்து திரும்பியபோது தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டத்தை பார்த்தனர்.
மேலும் 5ம் நம்பர் தேயிலை தோட்டம் அருகிலும் சிறுத்ைத நடமாடியதால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் வண்டிபெரியார் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் தேயிலை தோட்டத்தில் ஆடு, நாய்கள் கொல்லப்பட்டு இறந்து கிடந்தன. சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் கூறிய இடங்களில் செல்லார் கோவில் வனத்துறை அதிகாரிகள் வினோத், விஜயகுமார் தலைமையில் வனத்துறை யினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
காமிராக்கள் பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். இதில் மூங்கிலார் 40 ஏக்கர் பகுதியில் வனத்துறை பொருத்திய கண்காணிப்பு காமிராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி உள்ளது.
இதனால் சிறுத்ைதயை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுத்தையை பிடிக்கும் வரை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
- செல்போன் கவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.22 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 44 பறிமுதல் செய்யப்பட்டது.
- கள்ளநோட்டுகள் சப்ளை செய்த சுப்பிரமணியனை சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர்.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே வண்டிபெரியாறில் உள்ள தனியார் வங்கியில் 500 ரூபாய் கள்ளநோட்டு 2 செலுத்தப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பீர்மேடு டி.எஸ்.பி. குரியகோஸ் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வண்டிபெரியாறு டைமுக் ஆத்தோரம் பகுதியை சேர்ந்த சபின்ஜேக்கப் கள்ளநோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வண்டி பெரியாறு போலீசார் அவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது செல்போன் கவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.22 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 44 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அணைக்கரையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் சென்னையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.
அவரிடம் ரூபாய் 20 ஆயிரம் கொடுத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து சபின்ஜேக்கப், ராஜேஷ், தனியார் பஸ் கண்டக்டர் சிஜூபிலிப் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு கள்ளநோட்டுகள் சப்ளை செய்த சுப்பிரமணியனை சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.45 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் நோட்டு அடிக்கும் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சுப்பிரமணியனை வண்டிபெரியாறு போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருத்துவ உதவி கேட்டு தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
- மாணவியின் மருத்துவ உதவிக்கு மாவட்ட கலெக்டர் பொறுப்பு நிதியில் இருந்து நிதி வழங்க உத்தரவிட்டார்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே முத்துசங்கிலிபட்டியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விளம்பர சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ரூபிகா 2 கால்களிலும் படுகாயம் ஏற்பட்டது. அவரது தாயார் மருத்துவ உதவி கேட்டு தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
மாணவியின் மருத்துவ உதவிக்கு மாவட்ட கலெக்டர் பொறுப்பு நிதியில் இருந்து நிதி வழங்க உத்தரவிட்டார். அதன்படி ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாணவியின் தாயிடம் ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் மொட்டனூத்து ஊராட்சி தலைவர் நிசாந்தி தனது சொந்த நிதியில் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினர்.
அப்போது ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ. அய்யப்பன், ஊராட்சி செயலாளர் விஜயன், இந்துமுன்னணி மனோஜ்குமார், ஆச்சி, கார்த்திக், பகவதிராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
- 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மழலையர் கல்வி முறை வகுப்புகள் கருவேல்நாயக்கன்பட்டி சமுதாயக்கூடத்தில் நவீன முறையில் தொடங்கப்பட்டது.
- முன்னதாக பள்ளிக்கு வந்த மழலையர் மாணவ, மாணவிகளுக்கு பேண்டு, மேளதாளத்துடன், பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேனி:
தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் நடுநிலை பள்ளியின் சார்பில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மழலையர் கல்வி முறை வகுப்புகள் கருவேல்நாயக்கன்பட்டி சமுதாயக்கூடத்தில் நவீன முறையில் தொடங்கப்பட்டது.
இந்த தொடக்க நிகழ்ச்சிக்கு தேனி அல்லிநகரம் நகராட்சி 33-வது வார்டு நகர் மன்ற உறுப்பினரும், பள்ளி மேலாண்மை குழு தலைவருமான கடவுள் தலைமை தாங்கி வகுப்பினை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு மழலையர் அமரும் நாற்காலி மற்றும் கல்வி உபகரணங்கள், இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டிலட்சுமி, ஆசிரியர்கள் அறிவுடைநம்பி, சரண்யா, அஜீத்தா மற்றும் பொது பள்ளி பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிக்கு வந்த மழலையர் மாணவ, மாணவிகளுக்கு பேண்டு, மேளதாளத்துடன், பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
- மின்சாரம் பெறப்படும் முறை குறித்து மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்று போன்ற பல்வேறு தடையின்மை சான்றுகளை பெற வேண்டும்
- சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காலையில் 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்தப்பட வேண்டும்.
தேனி:
தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
விநாயகர் சிலை அமைப்பதற்கு வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி சான்று, சிலை வைக்கப்படும் இடம் குறித்து தனியார்,அரசு,உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் தடையில்லா சான்று, ஒலிபெருக்கி அமைப்பது தொடர்பாக தடையில்லாச் சான்று, தற்காலிக அமைப்புகள் தீயணைப்புத்துறையின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ளதற்கான தடையில்லாச் சான்று, சட்ட விரோத மின் இணைப்பு இருக்க கூடாது என்பதற்காக மின்சாரம் பெறப்படும் முறை குறித்து மின்சார வாரியத்திடம் தடையில்லாச் சான்று போன்ற பல்வேறு தடையின்மை சான்றுகளை பெற வேண்டும்
பீடம் மற்றும் சிலையுடன் மொத்த உயரம் 10 அடிக்கு மேலாக இருக்க கூடாது. பிற வழிபாட்டுத் தலங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் அமைக்கக் கூடாது. களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட வேண்டும். சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காலையில் 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்தப்பட வேண்டும்.
விநாயகர் சிலைகள் வைத்து வழிபடும் இடங்களில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். சிலை அமையும் இடத்தில் அரசியல் கட்சியினரின் பெயர் பலகைகள் வைக்க கூடாது. சிலை வைத்திருக்கும் பொழுது எந்த அமைப்பின் மூலம் வைக்கப்படுகிறதோ அந்த அமைப்பினைச் சேர்ந்த 2 நபர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். பிற மத வழிபாட்டுத் தலங்களின் வழியே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல கூடாது.
ரசாயன கலவையற்ற சிலைகளை பயன்படுத்தவேண்டும். சிலைகளை கரைப்பதற்கு முன்பாக மாலைகள், வஸ்திரங்கள் அலங்கார பொருட்களை அப்புறப்படுத்தி, கரைக்கப்படும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட வேண்டும். விதிகளை மீறுவோர்மீது அபராதம் விதிக்கப்படும்.
விநாயகர் சிலைகளை பெரியகுளத்தில் பாலசுப்பிரமணியன் கோவில் அருகில் உள்ள வராகநதி, உத்தமபாளையத்தில் ஞானம்மாள் கோவில் அருகில் உள்ள முல்லைப்பெரியாறு, கம்பம் சுருளிப்பட்டி ரோடு அருகில் உள்ள முல்லைப்பெரியாறு, சின்னமனுார்-மார்கையன்கோட்டை பாலம் அருகில் உள்ள முல்லைபெரியாறு, தேனி அரண்மனைப்புதுார் பாலம் அருகில் உள்ள முல்லைபெரியாறு, ஆண்டிபட்டி-பெரியகுளம் சாலையில் உள்ள வைகை ஆறு, வருசநாடு அருகில் உள்ள மொட்டப்பாறை செக்டேம், போடி பகுதியில் உள்ள கொட்டக்குடி (புதூர்) ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- பலியான ஜெகன்குமார் உடல் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் ஜெகன்குமார்(29). இவர் தனியார் செல்போன் கடையில் வேலைபார்த்து வந்தார். இவருடன் கோம்பையை சேர்ந்த அன்னபூரணி(18) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தினமும் பணிமுடிந்ததும் அன்னபூரணியை அவரது வீட்டில் இறக்கிவிட்டு மீண்டும் காலையில் வேலைக்கு அழைத்து வருவது ஜெகன்குமாருக்கு வழக்கம். அதன்படி நேற்று இரவு பணிமுடிந்து கடையில் இருந்து அன்னபூரணியை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
உத்தமபாளையம் சாலையில் துர்க்கையம்மன் கோவில் அருகே குமுளியில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜெகன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அன்னபூரணி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான ஜெகன்குமார் உடல் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
- கம்பம்-குமுளி சாலையில் அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- சோதனையில் யானை தந்தம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் வனப்பகுதியில் யானை தந்தம் கடத்தப்படுவதாக மத்திய வ னவிலங்கு குற்றகா ட்டுப்பாட்டு பணியக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வனவிலங்கு குற்றகட்டுப்பாட்டு பணியக இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் கம்பம் மேற்கு ரேஞ்சர் ஸ்டாலின் மற்றும் வனத்துறையினர் கம்பம்-குமுளி சாலையில் அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அவர்கள் யானை தந்தம் கடத்தியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து யானை தந்தத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கூடலூர் கன்னிகாளி புரத்தை சேர்ந்த சுரேஷ்கண்ணன்(32), கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கடைசிகடவு பகுதியை சேர்ந்த முகேஷ்கண்ணன் (28) என்பதும், யானை தந்தத்தை பைக்கில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து எங்கிருந்து யானை தந்தம் கடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் ேவறு யாருக்கும் தொடர்புள்ளதா என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப தகராறில் வேதனையடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி விஸ்வதாஸ்காலனியை சேர்ந்த ஜெயக்குமார் மகள் காஞ்சனா(17). இவர் பெரியகுளத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம்ஆண்டு படித்து வந்தார். இவரை அதேபகுதியை சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவர் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் இருகுடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த மாணவி காஞ்சனா சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை ஜெயக்குமார் கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






