search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருசநாடு அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி
    X

    கோப்பு படம்.

    வருசநாடு அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

    • கேரளாவில் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் முன்புறமாக தூக்கி கவிழ்ந்தது.

    வருசநாடு:

    வருசநாடு அருகே கீழபூசனூத்து பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 35). இவர் கேரளாவில் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் வீடு கட்டி வருகிறார்.

    அதற்கு ஹாலோபிளாக் கற்கள் எடுத்துக் கொண்டு டிராக்டரில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் முன்புறமாக தூக்கி கவிழ்ந்தது. இதில் தலை மற்றும் உடம்பில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வருசநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×