என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayakar Chaturthi festival"

    • பிளாஸ்டிக்கால் ஆன குடை, மலர், மாலைகள் போன்ற அலங்கார பொருட்கள் பயன்படுத்து வதை தவிர்ப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, சென்னை தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை தேசிய பசுமை படை மற்றும் உத்தமபாளையம் கல்வி மாவட்டம் சார்பில் மாசில்லா பசுைம வழி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் களிமண், மஞ்சள், அரிசி மாவு போன்ற இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை கொண்டு சிலைகளை வடிவமைத்தல், பிளாஸ்டிக்கால் ஆன குடை, மலர், மாலைகள் போன்ற அலங்கார பொருட்கள் பயன்படுத்து வதை தவிர்ப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியை சித்ரா தொடங்கி வைத்தார். பசுமை படை ஒருங்கிணை ப்பாளர் வெங்கடேசன், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
    • அந்தந்த கிராமங்களில் உள்ள ஆற்றில் கரைக்கப்பட்டன.

    பெரும்பாறை:

    பெரும்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, வெள்ளக்கரை, கொங்கப்பட்டி, புதூர், எம்.ஜி.ஆர்.நகர், குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், கவியக்காடு உள்ளிட்ட கிராமத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கணபதி ஹோமம், மகா அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அந்தந்த கிராமங்களில் உள்ள ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் வழி நெடுகிலும் வாணவேடிக்கை, மேளதாளம் மற்றும் ஆண்கள், பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×