என் மலர்
தேனி
- இந்த யானை வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்வதுடன் தோட்டக் காவலாளிகளையும் தாக்கியுள்ளது.
- சுமார் 1 வாரம் வரை தேனி மாவட்டத்தில் கும்கி யானைகள் நிறுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் மக்னா யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் தேவாரம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மக்னா யானை நடமாட்டம் இருப்பது வழக்கமாக உள்ளது. இந்த யானை வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்வதுடன் தோட்டக் காவலாளிகளையும் தாக்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் மக்னா யானை தாக்கி இதுவரை ஏராளமான விவசாய கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
எனவே இந்த யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் கடந்த வருடம் டாப்சிலிப் பகுதியில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மக்னா யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 வாரம் வரை தேனி மாவட்டத்தில் கும்கி யானைகள் நிறுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் மக்னா யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் மக்னா யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி பிடிபடாமல் சென்றது. இந்நிலையில் தற்போது தேவாரம் அருகே உள்ள வட்ட ஓடைப்பகுதியில் மக்னா யானை புகுந்து வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.
இதனால் விவசாயிகள் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அறிவித்தாலும் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.
- இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் மூலம் 5மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாராமாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. ஆனால் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி மழை ஏமாற்றி வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 47.47 அடியாக சரிந்துள்ளது. 239 கன அடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.95 அடியாக உள்ளது. 416 கன அடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 511 கன அடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.40 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3கன அடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 1.6, தேக்கடி 2.2 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
- குமுளி மலைப்பாதையில் லோயர்கேம்ப் பகுதியில் கொரோனா பரவலின்போது நிரந்த ரமாக சோதனைச்சாவடி அமைத்து சுகாதாரத்துறையி னர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- பகலில் மட்டும் சோதனை மேற்கொள்ளும் சுகாதார துறையினர் இரவில் பணி மேற்கொள்வதில்லை.
கூடலூர்:
கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேருக்கு வைரஸ் உறுதி ெசய்யப்பட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரளா முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையில் தேனி மாவட்டத்தில் 3 சோதனைச் சாவடிகள் உள்ளன. கம்பம் மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய இடங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
அதன்படி சோதனைச்சாவடிகளில் டாக்டர், சுகாதார ஆய்வாளர் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாகனங்களில் வருபவர்களை காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னர் தமிழகத்துக்குள் அனுமதித்து வருகின்றனர். ஆனால் தற்போது இந்த பணிகளை தொடர்ந்து செய்ய முடியாமல் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக குமுளி மலைப்பாதையில் லோயர்கேம்ப் பகுதியில் கொரோனா பரவலின்போது நிரந்த ரமாக சோதனைச்சாவடி அமைத்து சுகாதாரத்துறையி னர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த சோதனைச் சாவடியில் மின் வசதி, கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பகலில் மட்டும் சோதனை மேற்கொள்ளும் சுகாதார துறையினர் இரவில் பணி மேற்கொள்வதில்லை.
இதேபோல் போடி மெட்டு, கம்பம் மெட்டு பகுதியில் தொக்கத்தில் அனைத்து வாகனங்களிலும் வருபவர்களை காய்ச்சல் பரிசோதனை செய்தனர். ஆனால் நாளடைவில் சில வாகனங்களை மட்டும் சோதனை செய்து விட்டு மற்ற வாகனங்களை கண்டுகொள்வதிலை. எனவே எல்லைப்பகுதிகளில் நிரந்தர சோதனைச்சாவடி அமைத்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
- கேரளாவில் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
- அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் முன்புறமாக தூக்கி கவிழ்ந்தது.
வருசநாடு:
வருசநாடு அருகே கீழபூசனூத்து பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 35). இவர் கேரளாவில் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் வீடு கட்டி வருகிறார்.
அதற்கு ஹாலோபிளாக் கற்கள் எடுத்துக் கொண்டு டிராக்டரில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் முன்புறமாக தூக்கி கவிழ்ந்தது. இதில் தலை மற்றும் உடம்பில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வருசநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- டந்த சில நாட்களாக சரிவர தொழில் நடக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
- இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.
பெரியகுளம்:
ெபரியகுளத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 48). இவர் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக சரிவர தொழில் நடக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மனைவியிடம் தனக்கு வாழ பிடிக்க வில்லை என புலம்பியுள்ளார்.
அவர் பாண்டியனுக்கு ஆறுதல் கூறி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாண்டியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கோம்பையைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மன உளைச்சலால் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ரூ.21 லட்சம் மதிப்பில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இந்த பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் பழைய சுற்றுச்சுவர் மீதே புதிய கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திரு காளாத்தீஸ்வரர் - ஞானாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலின் தெப்பக்குளம் சிதிலமடைந்து காணப்பட்டது. கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தெப்பக்குளத்தையும் சீரமைக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு பா.ஜ.க.வினர் கோரிக்ைக விடுத்தனர்.
ரூ.21 லட்சம் மதிப்பில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெப்பக்குளத்தின் கிழக்குப்பகுதியில் நடைபாதை சுவர் திடீரென சரிந்து விழுந்து சேதமானது. இந்த பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் பழைய சுற்றுச்சுவர் மீதே புதிய கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தது.
அதனால்தான் சுவர் சரிந்து விழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் தெப்பக்குளத்தின் கட்டுமானப்பணி உறுதித்தன்மையை முழுமையாக ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 2 நாட்கள் யாக பூஜையை தொடர்ந்து இன்று காலை கோவில் கலசத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பட்டாளம்மன், கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2 நாட்கள் யாக பூஜையை தொடர்ந்து இன்று காலை கோவில் கலசத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் தி.மு.க தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் சேது ராஜா, கடமலை-மயிலை ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா சுரேஷ், மாடசாமி, ராஜபட்டர் எஜமான் பாண்டி முனீஸ்வர், கடமலைக்குண்டு ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி வேல்முருகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கபாண்டியன், கடமலைக்குண்டு கிராம கமிட்டி தலைவர் கணேசன் உள்பட கலந்து கொண்டனர்.
- குட்காவை பெங்களூரிலிருந்து தேனி பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
- வாகனத்தில் வந்த 7 பேர்களையும் போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க போலீசார் தொடர்ந்து ரோந்து பணியிலும், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேனி எஸ்.பி. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் தேனி அல்லிநகரம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் தனியாக ஒரு அறை அமைத்து அதில் 800 கிலோ குட்கா பொருட்கள் 40 மூடைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குட்காவை பெங்களூரிலிருந்து தேனி பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த விஜயராகவன் (32) என்பவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
வாகனத்தில் வந்த கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த கெம்புராஜ் (23), கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முகமுது யூசுப் (33), கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா பகுதியை சேர்ந்த தீபக் (23), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த உதயகுமார் (31), கார்த்திகேயன் (31), ஆனந்தகுமார் (32) ஆகிய 7 பேர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவை சேர்ந்த குட்கா வியாபாரிகள் தேனி வியாபாரியிடம் விற்பதற்காக முதன்முறையாக இங்கு வந்ததாகவும், வழி தெரியாமல் அங்கும் இங்கும் வாகனத்தில் சென்றதால் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் சிக்கிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. 7 பேர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 40 மூடை குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மதுவிற்றவர்களை கைது செய்தனர்.
- அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தேனி:
தேனி போலீசார் பழைய பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற ஆண்டிபட்டி அருகே சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த ஆசை (வயது 46) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தேனி மது விலக்கு போலீசார் பழனிசெட்டிபட்டி பகுதியில் மது விற்ற கோபி (43), காமராஜபுரம் பகுதியில் மது விற்ற அமராவதி (60), ஆகியோரை கைது செய்து 7 மற்றும் 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
போடி தாலுகா போலீசார் சங்கராபுரம் டாஸ்மாக் கடை பகுதியில் ரோந்து சென்ற போது மது விற்ற பால்சாமி (75) என்பவரை கைது செய்து 18 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். உத்தமபாளையம் மது விலக்கு போலீசார் ரோந்து சென்ற போது உழவர் சந்தை அருகே மது விற்ற ராஜா (56), சின்னமனூர் பகுதியில் மது விற்ற சங்கிலி ராஜன் (40) என்பவரை கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
உத்தமபாளையம் போலீசார் உ.அம்மாபட்டி பகுதியில் ரோந்து சென்ற போது மது விற்ற ஜெயராஜ் (61) என்பவரை கைது செய்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து பசுமாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை அடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
- கண்காணிப்பு காமிரா மூலம் சிறுத்தை உலா வரும் நேரம், அதன் வழித்தடங்களை கண்டறிந்தனர்.
கூடலூர்:
கேரள மாநிலம் குமுளி அருகே வண்டிபெரியாறு மூங்கிலாறு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து பசுமாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை அடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் கண்காணிப்பு காமிரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் சிறுத்தை உலா வரும் நேரம், அதன் வழித்தடங்களை கண்டறிந்தனர்.
குமுளி ரேஞ்சர் அணில்குமார் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு கால்நடைகளை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.
மீண்டும் அதே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியை யொட்டியுள்ள எஸ்டேட் மற்றும் குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பிற சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- மேலும், மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கான 201 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
தேனி:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து தெரிவித்ததாவது,
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவச் சான்று, தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான உதவி மையம் போன்ற பல்வேறு விதமான சேவைகள் வழங்கப்பட்டது.
மேலும் இச்சிறப்பு முகாமிற்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பிற சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இம்முகாமில் 66 நபர்களுக்கு அடையாள அட்டை பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது, 42 நபர்களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டைகளும், 132 நபர்களுக்கு ரயில் மற்றும் பஸ் பயண அட்டைகளையும், 89 நபர்களுக்கு தேசிய தரவுத்தள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு புதிய ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கான 201 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. முகாமில் 214 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, டாக்டர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர் உள்பட பலர் பங்கேற்றனர்.
- தங்களின் விண்ணப்பங்கள் என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகளை இ-சேவை மையம் வழியாக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
- தகுதியிருப்பின் உடனடியாக அவர்களின் விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்
தேனி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் உரிமை தொகையாக ரூ.1000 வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறுவதற்காக நடைபெற்ற முதற்கட்ட, இரண்டாம் கட்ட மற்றும் சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு நாளை முதல் அனுப்பி வைக்கப்படும்.
தங்களின் விண்ணப்பங்கள் என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகளை இ-சேவை மையம் வழியாக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு செய்யும் கோரிக்கைகள் குறித்து கோட்டாட்சியர் அளவில் விசாரணை செய்யப்பட்டு, தகுதியிருப்பின் உடனடியாக அவர்களின் விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்
மேலும் முக்கியமாக பயனாளிகளின் கைப்பேசி எண்ணிற்கு வங்கியிலிருந்தோ அல்லது ஏதேனும் வங்கி சார்ந்த நிறுவனத்திலிருந்தோ அழைக்கிறோம் என போலியான அழைப்பு வந்து ஏதேனும் கடவுச்சொல் அல்லது ஏ.டி.எம். அட்டையின் பின்பக்கத்தில் உள்ள 3 இலக்க எண்களையோ தெரிவிக்கக்கோரி யாரேனும் கேட்டால் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறான விவரங்களை தெரிவித்தால் உங்களுடைய வங்கி கணக்கில் இருக்கும் தொகையை இழக்க நேரிடும் வாய்ப்புள்ளது. எனவே கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகள் விழிப்புணர்வுடன் இருந்திட வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.






