என் மலர்
தேனி
- தேர்வு எழுத சென்ற மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் :
பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகள் ஹரினி (வயது 17). இவர் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று காலாண்டுத்தேர்வு எழுத பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றார்.
ஆனால் அவர் அங்கு வரவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அதிர்ச்சியடைந்த பரமசிவம் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி ப்பார்த்தும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல்நலக்குறைவு மற்றும் குடும்ப பிரச்சினைகாரணமாக 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பொம்மைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி வேணி (வயது 25). இவர்களது மகள் பூஜா (5). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாகராஜிடம் கோபித்துக் கொண்டு பூஜா தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் வேணிதிடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 36). இவருக்கு துர்கா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் வயிற்று வலி ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நாகேந்திரன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை வெள்ளத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுப்பதற்காகவும், போடியை சுற்றியுள்ள கண்மாய்களின் முக்கிய நீர்பிடிப்பு ஆதாரமாகவும் உருவாக்கப்பட்டது அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சி. சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நீர்வீழ்ச்சி போடியின் திற்பரப்பு என்று அழைக்கப்பட்டு வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு குரங்கணி, கொம்பு தூக்கி, கொட்டகுடி, பிச்சங்கரை ஆகிய பகுதிகளில் பெய்த பரவலான மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் போடி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த ஓரிரு மாதங்களாக மழையின்மை காரணமாக முற்றிலும் வறண்டு காணப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் போடியை சுற்றியுள்ள மீனாட்சி அம்மன் கண்மாய், பங்காரு சாமி குளம் போன்ற குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
- தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில், இந்திய உணவுக் கழகத்திலிருந்து வரப்பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் தரம் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- அங்கன்வாடி மையத்தில் பராமரிக்கப்படும் 11 வகையான பதிவேடுகள் ஆகியன குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி:
தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில், இந்திய உணவுக் கழகத்திலிருந்து வரப்பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், ரேசன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்கள் முறையாக நகர்வு செய்யப்படுகிறதா, சரியான எடை அளவில் கொண்டு செல்லப்படுகிறதா என்று கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் இருப்பு பதிவேடு, காலி சாக்குகள் பதிவேடு, உள்வரும் வாகனங்கள் மற்றும் வெளி செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்கான பதிவேடு, தரக்கட்டுப்பாட்டு பதிவேடு, எடை அளவு பதி வேடு, விற்பனை பதிவேடு, அரிசி மற்றும் கோதுமை நகர்வு பதிவேடு, பட்டியல் அட்டைகள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
பின்னர், பழனி செட்டி பட்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணி யாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள்நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, மருந்து மாத்திரை களில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியாவதற்கான காலம், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, பழனிசெட்டிபட்டி பேரூ ராட்சி பகுதியில் ரேசன் கடைகளின் விற்பனை முனைய இயந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் எடை அளவிடும் இயந்திர த்தில் முத்திரை பதிக்கப்பட்டு ள்ள காலம், இயந்திரத்தின் செயல்பாடு கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் முறைசாரா முன்பருவ கல்வி, எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டு முறையாக பதிவேற்றம் செய்யப்படு கிறதா, ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனவும், அங்கன்வாடி மையத்திற்கு வழங்க ப்பட்டு ள்ள முன்பருவ கல்வி உபகரண கருவி நல்ல முறை யில் உள்ளதா, குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவை மற்றும் அங்கன்வாடி மையத்தில் பராமரிக்கப்படும் 11 வகையான பதிவேடுகள் ஆகியன குறித்தும் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஆறு முகம் உள்ளிட்ட அலுவ லர்கள் பலர் உடன் இருந்த னர்.
- சம்பவத்தன்று கடைக்கு பொருட்கள் வாங்க சென்றவர் வீடு திரும்ப வில்லை.
- இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் உறவினர்கள் வீடுகள் மற்றும் கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் மனைவி வெண்ணிலா (வயது20). சம்பவத்தன்று கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அதன்பி ன்னர் அவர் வீடு திரும்ப வில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் உறவினர்கள் வீடுகள் மற்றும் கடைகளில் தேடியும் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெண்ணிலாவை தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் தர்ஷினி (17). பிளஸ்-2 முடித்து விட்டு தையல் பயிற்சிக்கு சென்று வரு கிறார். சம்பவத்தன்று தையல் வகுப்புக்கு சென்ற அவர் திடீரென மாயமா னார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து இளம்பெ ண்ணை தேடி வருகின்றனர்.
- தமிழகத்தின் சுவையான நீர் என பெயர் பெற்ற இந்த கொட்டக்குடி நீரானது மீனாட்சிபுரம் கண்மாய்க்கு செல்லும்போது போடி பகுதியில் உள்ள கழிவு நீர் அனைத்தும் கலந்து செல்வதால் மாசடைந்து செல்கிறது.
- இந்த மீனாட்சிபுரம் கண்மாய்க்கு பல ஆயிரம் மைல்கள் கடந்து வெளிநாட்டு பறவைகள் இரை தேடி வருவது வழக்கம்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கண்மாய் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை கொட்டக்குடி ஆறு, அணை பிள்ளையார் அணைக்கட்டு ராஜ வாய்க்கால் மூலம் இந்த கண்மாய்க்கு நீர்வரத்து வருகிறது. இந்த கண்மாயை நம்பி 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் குறைந்த அளவிலான மழை பெய்ததால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து குறைந்து கண்மாய் வறண்டு போகும் நிலையில் உள்ளது.
தமிழகத்தின் சுவையான நீர் என பெயர் பெற்ற இந்த கொட்டக்குடி நீரானது மீனாட்சிபுரம் கண்மாய்க்கு செல்லும்போது போடி பகுதியில் உள்ள கழிவு நீர் அனைத்தும் கலந்து செல்வதால் மாசடைந்து செல்கிறது. இதன் காரணமாக கண்மாயில் மீன்கள் அனைத்தும் டன் கணக்கில் செத்து கரை ஒதுங்கி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நீர் அனைத்தும் மாசடைந்து காணப்படுகிறது.
இந்த மீனாட்சிபுரம் கண்மாய்க்கு பல ஆயிரம் மைல்கள் கடந்து வெளிநாட்டு பறவைகள் இரை தேடி வருவது வழக்கம். தற்போது மீன்கள் அனைத்தும் செத்து கரை ஒதுங்கியதால் ஏமாற்ற த்துடன் திரும்பிச் செல்கி ன்றது.
இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் இந்த கண்மாயில் மீன்களே கிடைக்காத நிலை உருவாகும். மாவட்ட நிர்வாகம் கழிவுநீர் ராஜ வாய்க்காலில் கலக்காதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய நிழற்குடை கட்டப்பட்டது.
- காலை நேரங்களில் மது பாட்டில்களை வாங்கும் மது பிரியர்கள் சிலர் நிழற்குடையில் அமர்ந்து மது குடிக்க தொடங்கினர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சியில் கருப்பையாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. எனவே இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 1 கி.மீ. தொலைவு நடந்து சென்று கருப்பையாபுரம் விலக்கில் வெயிலில் காத்திருந்து பஸ் ஏறி சென்று வந்தனர். வெயிலில் காத்திருப்பதால் கருப்பையாபுரம் விலக்கில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய நிழற்குடை கட்டப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் நிழற்குடையில் காத்திருந்து பஸ் ஏறி சென்று வந்தனர். இந்நிலையில் மூலக்கடை பகுதியில் அதிகாலை முதல் மது பாட்டில்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
எனவே காலை நேரங்களில் மது பாட்டில்களை வாங்கும் மது பிரியர்கள் சிலர் நிழற்குடையில் அமர்ந்து மது குடிக்க தொடங்கினர். இது தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போலீஸ் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நிழற்குடையை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர். தற்போது நிழற்குடை முற்றிலுமாக மது அருந்தும் பார் ஆக மாறிவிட்டது.
இதனால் தற்போது நிழற்குடை முழுவதும் காலி மது பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் குவிந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காலை நேரங்களில் கருப்பையாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு நிழற்குடையில் மது அருந்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மல்லிகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
- மல்லிகிருஷ்ணன் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஈஸ்வரியை அழைத்துள்ளார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோம்பைத்தொழுவை சேர்ந்தவர் மல்லிகிருஷ்ணன் (வயது32). இவருக்கும் உத்தமபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சின்னமனூர் காந்திநகர் காலனி பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். மல்லிகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஈஸ்வரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் அங்கு சென்று மல்லிகிருஷ்ணன் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஈஸ்வரியை அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்து தனக்குத்தானே மார்பில் குத்திக்கொண்டு மயக்கம் அடைந்தார். அவரது உறவினர்கள் எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. இதனால் அச்சமடைந்த அவர்கள் மல்லி கிருஷ்ணனை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நகரின் அனைத்து வார்டு பகுதிகளிலும் மொத்தம் 32 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.
- டிராக்டர் வண்டிகள் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூரில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. நகரின் அனைத்து வார்டு பகுதிகளிலும் மொத்தம் 32 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.
டிராக்டர் வண்டிகள் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஊர்வலத்தை கூடலூர் நகர இந்து முன்னணி பொதுச்செயலாளர் ஜெகன் தலைமையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
கூடலூர் அருகே காஞ்சிமரத்துறை முல்லை பெரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள்ளது.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது மழை பெய்வதும், சில நேரங்களில் ஏமாற்றி செல்வதுமாக உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் விவசாயத்திற்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கனஅடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 118.85 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 378 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளது. 84 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கொடைக்கானல் வட்டக்கானல், வெள்ளக்கவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க, சுற்றி பார்க்க தடை விதிக்கப்படுவதாகவும், நீர்வரத்து சீரான பின்னர் அனுமதிக்கப்படும் என வனச்சரக அலுவலர் டேவி ட்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் காரணமாக கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருந்தபோதும் யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளதால் மறுஉத்தரவு வரும் வரை தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரியாறு 2.8, தேக்கடி 1.4, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.2, சண்முகநாதி அணை 2, போடி 0.6, வைகை அணை 0.6, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 1.2, வீரபாண்டி 1.2, ஆண்டிபட்டி 6.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்த மாவட்ட திட்டக்குழு கூட்டம் கலெக்டர் ஷஜீவனா, திட்டக்குழு தலைவர் ப்ரிதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
- சிறப்பான நிர்வாகம் நடைபெறும் கிராம ஊராட்சி, வளர்ச்சியில் பாலின சமத்துவ ஊராட்சி உள்பட 9 தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்த மாவட்ட திட்டக்குழு கூட்டம் கலெக்டர் ஷஜீவனா, திட்டக்குழு தலைவர் ப்ரிதா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் ராஜபாண்டியன், நாராயண பாண்டியன், பாண்டியன், வளர்மதி, தமயந்தி, தங்கராஜ், தினகரன், நயினார் முகமது, பவானி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உலகில் வாழும் ஒட்டு மொத்த மனித குலமும் செழிப்பு, அமைதி, மற்றும் நட்புறவுடன் வாழ்ந்து, நாம் வாழும் பூமியை பாதுகாத்து நம்முடைய சந்ததியினர் சீரும் சிறப்பாக வாழும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டி, நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளை உள்ளடக்கிய 9 கருப்பொருட்களை 2030-ஆம் ஆண்டுக்குள் இலக்கினை அடைவதற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நடைபெற்ற கூட்டத்தில், கருப்பொருட்களாக வறுமை இல்லாத வாழ்வாதாரம் நிறைந்த கிராம ஊராட்சி, நல வாழ்வு கிராம ஊராட்சி, குழந்தைகளின் நலன் கொண்ட கிராம ஊராட்சி, குடிநீரில் தன்னிறைவு அடைவது, சுத்தமான, பசுமையான கிராம ஊராட்சி, உட்கட்டமைப்பு வசதிகள் தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சி, சமூக நீதி மற்றும் சமூக பாதுகாப்பு நிறைந்த கிராம ஊராட்சி, சிறப்பான நிர்வாகம் நடைபெறும் கிராம ஊராட்சி, வளர்ச்சியில் பாலின சமத்துவ ஊராட்சி ஆகிய 9 தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, சுகாதாரம், தொற்றுநோய், ரத்த சோகை, தடுப்பூசி, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பெண் குழந்தைகள் கல்வி, மகளிர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பணிகளை மேற்கொள்ளவும், நீர் பாதுகாப்பு மேலாண்மை, தரிசு நில மேம்பாடு, சாலை வசதி, சமூக நீதி, தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி பணிகளை விரைந்து முடிப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரகாஷ், மாவட்ட ஊராட்சி செயலாளர் / திட்ட அலுவலர் சிவகுமார், உதவி இயக்குநர் அண்ணாதுரை மற்றும் நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அனுமந்தன்பட்டியில் இருந்து சின்னமனூர் செல்லும் பைபாஸ் சாலையில் பெரியாறுப்பாலத்துக்கு அருகில் உள்ள பாலத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதி அதில் வந்த 6 பேர்களும் படுகாயமடைந்தனர்.
- இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தமபாளையம்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சவடப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 40). இவர் தனது அண்ணன் லோகநாதரெட்டி (42) மற்றும் அவரது மகன்களான சுஜித் ரெட்டி (14), ரோகித் (11) மற்றும் கல்யாண்குமார் (44), பிரகாஷ் (44) ஆகியோருடன் ஒரு காரில் சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.
சபரிமலை, குருவாயூர் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று விட்டு மீண்டும் தேனி வழியாக சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அனுமந்தன்பட்டியில் இருந்து சின்னமனூர் செல்லும் பைபாஸ் சாலையில் பெரியாறுப்பாலத்துக்கு அருகில் உள்ள பாலத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதி அதில் வந்த 6 பேர்களும் படுகாயமடைந்தனர். இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






