என் மலர்
தேனி
- தனது மனைவியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்று பூண்டு வியாபாரம் பார்த்து வந்துள்ளார்.
- இதனிடையே பூட்டி இருந்த அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்துள்ளதாக அவரது மாமனார் தெரிவித்துள்ளார்.
பெரியகுளம்:
திருவண்ணாமலையை சேர்ந்தவர் உதயகுமார் (30). வெள்ளை பூண்டு வியா பாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி தெலுங்கர் தெருவில் உள்ள சுப்புராஜ் கணேசன் என்பவரது வீட்டில் வசித்து வருகிறார். அவ்வப்போது வியாபாரத்திற்காக வெளியூர் சென்று விடுவது வழக்கம்.
இதனிடையே சுப்புராஜ் கணேசனின் மகள் ஹரிதா என்பவரை திருமணம் செய்து அதே வீட்டில் வாடகைக்கு இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரிதாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் தனது மனைவியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றார். அங்கேயே பூண்டு வியாபாரமும் பார்த்து வந்துள்ளார். இதனிடையே பூட்டி இருந்த அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்துள்ளதாக அவரது மாமனார் தெரிவித்து ள்ளார்.
இதனால் அதிர்ச்சி யடைந்த உதயகுமார் வடுகபட்டிக்கு வந்து தனது வீட்டை பார்த்துள்ளார். பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடி க்கப்பட்டது தெரியவந்தது. இதனால் தென்கரை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இந்த கொள்ளை யில் தனது மாமியார், மாமனாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தனது புகாரில் தெரிவித்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா கொள்ளை வழக்கு தொடர்பாக மாமனார் சுப்புராஜ் கணேசன், மாமியார் ஜமுனாராணி, ராஜாராம், சாந்தகுமாரி, முருகன், கருப்பையா, தாடி பாண்டி ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த ஆண்டு இலவம் பஞ்சு விளைச்சல் எதிர்பார்ப்புக்கு மேல் அதிகம் உள்ளதால் கடந்த மே மாதம் இலவம் பஞ்சு விலை மிகுந்த சரிவை அடையத் தொடங்கியது.
- கல்கத்தா, கேரள மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வேறு பகுதிகளுக்கு சென்று விட்டதால் இங்கு விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதி களான கொட்டகுடி குரங்கணி உத்தம்பாறை, சோலையூர், சிறக்காடு, போன்ற பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கருக்கும் மேல் இலவம் பஞ்சு விவசாயம் நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்தில் போடி மற்றும் வருசநாடு சுற்றுப்பகுதிகளில் இலவம் பஞ்சு மிகுந்த தரம் உள்ள தாகவும் பயன்படுத்துவதற்கு மருத்துவ குணம் உள்ளதால் மெத்தைகள், தலைய ணைகள், இருக்கைகள் போன்றவை தயார் செய்யப்படுகிறது. இவ்வகை தலையணைகள் உடலின் தட்பவெப்பத்தை சீராக வைக்கும் என்று நம்ப ப்படுகிறது. இதில் தயாரிக்க ப்படும் மெத்தைகள் மற்றும் தலையணைகளுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. இதனால் பஞ்சு மெத்தை, தலையணைகள் அதிக அளவில் பல்வேறு மாநில ங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகிறது
பெரும்பாலும் கல்கத்தா மற்றும் கேரள மாநிலங்க ளுக்கு அதிக அளவில் இலவம் பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இலவம் பஞ்சு உற்பத்தி விவசாயத்தை நம்பி சுமார் 50க்கும் மேற்பட்ட பஞ்சுப்பேட்டையில் இயங்கி வருகின்றன.
250 க்கும் மேற்பட்ட மெத்தை தலையணை உற்பத்தியாளர்கள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட பஞ்சு பேட்டை தொழிலாளிகள் இலவம் பஞ்சு தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இலவம்பஞ்சு விலை அதிகரிப்பதும், குறைவதும் இதன் உற்பத்தி, விளைச்சல் மற்றும் ஏற்றுமதியைப் பொறுத்தே அமையும்.
இந்த ஆண்டு இலவம் பஞ்சு விளைச்சல் எதிர்பார்ப்புக்கு மேல் அதிகம் உள்ளதால் கடந்த மே மாதம் இலவம் பஞ்சு விலை மிகுந்த சரிவை அடையத் தொடங்கியது.
கடந்த மார்ச் மாதம் வரை கிலோ ரூ.320 வரை விற்ற முதல் தர இலவம்பஞ்சு கிலோ ரூ.200 முதல் ரூ.230 வரை வீழ்ச்சி அடைந்தது. ரூ. 140 வரை விற்கப்பட்ட விதையுடன் கூடிய சுத்தம் செய்யப்படாத இலவம் பஞ்சு கிலோ ரூ.75 முதல் ரூ.95 வரை விலை போனது.
இதனால் ஏராளமான விவசாயிகள் காய்களை மரத்திலேயே விட்டு விட்டனர். மரத்திலேயே இலவம் காய் வெடித்து சிதறி பஞ்சு வீணாகிப் போனது.
பெரும்பாலான விவசாயி கள் ஆடி மாதம் முடிந்து ஆவணி தொடங்கினால் திருமண முகூர்த்தங்கள் மற்றும் விசேஷ தினங்கள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் காய்களையும் பஞ்சு மூடைகளையும் இருப்பு வைத்துக் காத்திரு ந்தனர்.
இந்நிலையில் போடியில் இருந்து அதிகளவில் இலவம்பஞ்சு கொள்முதல் செய்யும் கல்கத்தா, கேரள மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வேறு பகுதிகளுக்கு சென்று விட்டதால் இங்கு விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. மேலும் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் தேவை குறைவின் காரணமாக தலையணை, மெத்தைகள், இருக்கைகள் தயாரிப்பு குறைந்து வியா பாரிகளும் பாதிக்கப்பட்டு ள்ளனர்.
- பேரிடர் மீட்பு பணிகளுக்கான சாத்திய கூறுகளை ஆராயும் ஒரு பகுதியாக விமான படையின் ஹெகாப்டர் சத்திரம் விமான ஓடுதளத்தில் தரை இறக்கி சோதனை செய்யப்பட்டது,
- திருவனந்தபுரம் வந்த ஹெலிகாப்டர் அங்கிருந்து சத்திரம் விமான ஓடுதளத்தை 3 முறை சுற்றியபின்னர் வெற்றிகர மாக தரை இறக்கப்பட்டது.
கூடலூர்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே வண்டிப்பெரியாறு சத்திரம் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு என்.சி.சி. விமானம் ஓடுதள கட்டுமானப்பணிகள் தொடங்கியது. இந்த தளத்தில் ஏர்ஸ்டிரிப் மூலம் ஆண்டு தோறும் 1000 என்.சி.சி.ஏர்விங் கேட்டர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறிய விமானம் இங்கு வெற்றிகரமாக தரையிறங்கியது. பருவமழை காலத்தின்போது இடுக்கி மாவட்டத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் மீட்பு பணிகளுக்கு சத்திரம் விமான ஓடு பாதையை பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராயுமாறு மாவட்ட நிர்வாகம் என்.சி.சி. மற்றும் கேரள அரசுக்கு கடிதம் எழுதியது.
இதன் அடிப்படையில் பேரிடர் மீட்பு பணிகளுக்கான சாத்திய கூறுகளை ஆராயும் ஒரு பகுதியாக விமான படையின் ஹெகாப்டர் சத்திரம் விமான ஓடுதளத்தில் தரை இறக்கி சோதனை செய்யப்பட்டது.
இதற்காக கோவை சூளூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டது. திருவனந்த புரம் வந்த ஹெலிகாப்டர் அங்கிருந்து சத்திரம் விமான ஓடுதளத்தை 3 முறை சுற்றியபின்னர் வெற்றிகர மாக தரை இறக்கப்பட்டது. இயற்கை பேரிடர் ஏற்படும் போது விமானப்படை உதவியுடன் பொதுமக்களை மீட்கவும், மீட்பு படைகளை விரைவாக கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதே இதன் நோக்கமாகும். சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
ஆய்வு குழுவால் சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை உயர் அதிகாரி களிடம் ஒப்படைக்கப்படும் என குரூப் கேப்டன் சீனிவாசன் தெரிவித்தார்.
- வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடை பெற்றது.
- வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும் என தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்ஷஜீ வனா தலைமையில் நடை பெற்றது
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:
வடகிழக்கு பருவமழைக் காலத்திற்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவ லர்களுக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
பேரிடரின் போது பொது கட்டிடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் போதுமான தாகவும் தகுதியானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை கட்டிடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களில் பழுதுகள் இருப்பின் அதனை சரிசெய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நீர்நிலைப் புறம்போக்கு களான ஆறு, ஏரி, ஓடை, வாரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலை களில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றிடவும், மேற்படி நீர்நிலைகளின் கரைகளின் உறுதித் தன்மையினை ஆராய்ந்து, பலவீனமாக உள்ள கரைகளை பலப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் உரிய நட வடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
அவசர காலங்களில் கிராமங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேறும் வழிகளுடன் கூடிய செயல் திட்டத்தினை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலமாக தயார் செய்து வைத்திருத்தல் வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள த்தால் பாதிக்கப்படும் கிராமங்களிலிருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைப்பதற்கு ஏதுவாக பள்ளிக் கட்டிட ங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களின் தொடர்பு எண்களுடன் கூடிய பட்டியலை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். வட்ட அளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித் துறையினரின் செயல்முறை விளக்கம் நடத்தி பொது மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நீர்நிலைகளில் பொது மக்கள், சிறுவர் - சிறுமிகள் இறங்குவதால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்க நீர்நிலைகளின் ஆழமான பகுதிகள் குறித்த முன்னெ ச்சரிக்கை அறிவிப்பு பலகையினை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நீர்நிலைகளின் கரைகளில் வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும் என தெரிவித்தார்.
- வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக அடிமாலி போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் வாலிபரை கைது செய்து கஞ்சா செடிகளை வெட்டி அழித்தனர்.
கூடலூர்:
மூணாறு அருகே உள்ள ராஜா காடு பழைய விடுதி காலனியைச் சேர்ந்தவர் ஜோய் மகன் சனீஸ் (வயது 27). இவரது வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக அடிமாலி போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடி ப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அதிடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் தோட்டத்தில் 246 ெ ச.மீ நீீளமுள்ள ஒரு கஞ்சாசெடியும், 66 செ.மீ நீளமுள்ள மற்றொரு கஞ்சா செடியையும் கண்டு பிடித்தனர்.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சா செடிகளை வெட்டி அழித்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- லோயர்கேம்பில் இருந்து வைகை அணை வரை முல்லை ப்பெரியாறு ஆற்றின் கரையினை தனிநபர்கள் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபரை எச்சரித்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
மேலும் மறைமுக பாசனம் மூலம் தென்னை, வாழை, திராட்சை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லோயர்கே ம்பில் இருந்து வைகை அணை வரை முல்லை ப்பெரியாறு ஆற்றின் கரையினை தனிநபர்கள் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு செய்து வருவதால், ஆற்றின் அகலம் சுருங்கிக் கொண்டே செல்கின்றது.
இதனை தடுக்கும் விதமாக பொதுப்பணித்துறையினர் முல்லைப்பெரியாறு ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கம்பம் காமயகவுண்டன் பட்டி செல்லும் சாலையில் முல்லைப்பெரியாறு பாலம் உள்ளது.
இந்த பாலத்தின் வடக்குப் பகுதியில் மயானம் அருகே தனிநபர் ஆற்றின் கரையோரப்பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் கரையை சமன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து வருவதாக காமயகவுண்டன் பட்டி வி.ஏ.ஓ. நஜீம்கானிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வி.ஏ.ஓ. ஆய்வு நடத்தினார். அதில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கரையை சமன்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தி னார். பின்னர் பொதுப்பணி த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதை யடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபரை எச்சரித்த னர். இது குறித்து பொது ப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,
முல்லைப்பெரி யாற்றின் கரையோரங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தினை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளது கண்டு பிடிக்கபட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.
- 53 அடியை எட்டியதும் 2 வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படும்.
- கும்பக்கரை அருவியில் 3-வது நாளாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தடைதொடரும் என அறிவித்துள்ளனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் உயரம் 57 அடியாகும். இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் பாதுகாப்பு கருதி 55 அடி வரை தண்ணீர் தேக்கப்படு கிறது.
கொடைக்கானல் பகுதியில் பெய்யும் மழை யால் அணைக்கு நீர்வரத்து உள்ளது. அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக அக்டோபர் 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கி யுள்ளது.
இன்று காலை நிலவர ப்படி 51.20 அடி நீர்மட்டம் உள்ளது. இதனைதொடர்ந்து தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, குன்னுவாரான்கோட்டை மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 53 அடியை எட்டியதும் 2 வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படும்.
தற்போது அணைக்கு 86 கனஅடிநீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.
நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 300 கனஅடியில் இருந்து 928 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்மட்டமும் 118.80 அடியிலிருந்து 119.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 48.13 அடியாக உள்ளது. 333 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.61 அடியாக உள்ளது. 19 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழை யால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பக்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணி களின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் 3-வது நாளாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தடைதொடரும் என அறிவித்துள்ளனர். நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.
பெரியாறு 13.2, தேக்கடி 2.4, சண்முகாநதி 1.8, போடி 3, மஞ்சளாறு 7, சோத்து ப்பாறை 3, வீரபாண்டி 4.2, அரண்மனைப்புதூர் 13 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- 10-ம் வகுப்பு வரை தன்னுடன் படித்த சக மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
- தற்போது 2 பேருமே தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொத்தப்பட்டியைச் சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது பள்ளியில் 3-வது மாடிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்தார். அப்போது மரக்கிளையில் சிக்கி கீழே விழுந்ததில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்த மாணவிகள் இதுகுறித்து ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மாணவி 10-ம் வகுப்பு வரை வேறொரு பள்ளியில் படித்துவிட்டு தற்போது மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
10-ம் வகுப்பு வரை தன்னுடன் படித்த சக மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தற்போது அவரும் வேறொரு பள்ளியில் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்த அந்த மாணவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் மனமுடைந்த மாணவி தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து 3-வது மாடியில் இருந்து குதித்துள்ளார். தற்போது 2 பேருமே தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றனர்.
காதலனுக்காக மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அப்பிபட்டியில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
- ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சின்னமனூர்-அப்பிபட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே அழகாபுரி என்ற அப்பிபட்டியில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை யொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரி வித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விநாயகர் சிலை ஊர்வல த்தினர் சின்னமனூர் - அப்பிபட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் கடந்த 40 ஆண்டுகளாக விநாயகர் சிலையை முக்கிய தெருக்கள் வழியாக கொண்டு சென்று வருகி றோம்.
ஆனால் கடந்த ஆண்டு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஊர்வலத்து க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆண்டும் மீண்டும் பிரச்சினை ஏற்படுத்து கின்றனர். ஆனால் நாங்கள் வழக்கமாக செல்லும் தெருக்கள் வழியாகவே செல்வோம் என்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே இரு தரப்பின ரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- வைகை அணை பஸ் நிலையம் பல ஆண்டுகளாக பராமரிப்பி ன்றி காணப்படுகிறது.
- தேனி மார்க்கமாக செல்லும் ரவுண்டானா பகுதிகளில் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே வைகை அணை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கு கிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணி கள் வருகின்றனர். வைகை அணை பஸ் நிலையம் பல ஆண்டுகளாக பராமரிப்பி ன்றி காணப்படு கிறது.
இதனால் புதர் மண்டி விஷ ஜந்துக்களின் கூடாரமாக உள்ளது. பயணிகள் பெரும்பாலும் ரவுண்டானா பகுதியிலேயே பஸ்சுக்காக காத்திருக்கி ன்றனர். மேலும் இதன் அருகேயே போலீஸ் நிலையம் உள்ளது. இந்த சாலை மற்றும் வருசநாடு, தேனி மார்க்கமாக செல்லும் ரவுண்டானா பகுதிகளில் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படு கிறது.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாட்க ளில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருள் சூழ்ந்து காணப்படும் வைகை அணைப்பகுதியில் காத்திருக்க அவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டும் வாய்ப்பும் உள்ளது.
எனவே மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியில் இருந்து 300 கன அடியாக சரிந்து உள்ளது.
- வைகை அணையின் நீர்மட்டம் 47.97 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் முல்லைப்பெ ரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியில் இருந்து 300 கன அடியாக சரிந்து உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 400 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.97 அடியாக உள்ளது. அணைக்கு 286 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.80 அடியாக உள்ளது. 64 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. ேசாத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.19 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 1.4, மஞ்சளாறு 11, சோத்து ப்பாறை 2, பெரியகுளம் 2.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- குடும்ப பிரச்சினையில் ஆத்திரமடைந்த மனைவி அரிவாளால் கணவனை சரமாரியாக வெட்டினார்.
- படுகாயமடைந்த கணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் கோம்பை துரைசாமிபுரம் 2-வது வார்டை சேர்ந்தவர் ஈஸ்வரன்(36). கூலித்தொழிலாளி. இவருக்கும் ஈஸ்வரி (29) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று ஈஸ்வரனின் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு சாப்பாடு தயார் செய்து கொடுக்குமாறு தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் சாப்பாடு தயாரிக்காமல் இருந்து ள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரி தனது கணவன் என்றும் பாராமல் அவரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடு த்தார். படுகாயமடைந்த ஈஸ்வரன் அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோம்பை சப்-இன்ஸ்பெ க்டர் முத்துச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






