என் மலர்
தேனி
- மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டுவிழா கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- 15 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டுவிழா கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒன்றிணைந்து 2018-ஆம் ஆண்டு முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1.40 கோடி குடும்பங்கள் இணைந்துள்ளனர். ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லாமல் தரமான சிகிச்சைகள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது .
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த 5 பயனாளிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும், 15 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கியும், இத்திட்டத்தினை செயல்படுத்திய 2 அரசு ஆஸ்பத்திரி மற்றும் 2 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் பணியாற்றிய திட்ட ஒருங்கிணைப் பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு, மருத்துவ கல்லூரி மருத்துவமனை காப்பீடு திட்ட பொறுப்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், பெரியகுளம் தலைமை ஆஸ்பத்திரி டாக்டர் குமார், மாவட்ட திட்ட அலுவலர் ராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், செல்லமணி மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 2900 மீட்டர் நீள குழாய் அமைக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு 220 மீட்டர் குழாய் அழுத்தம் தாங்காமல் வெடித்தது.
- சுருளியாறு நீர்மின்நிலையத்தில் குழாய் உடைந்ததால் அதனை சரிசெய்யும் பணி, பெயிண்டிங் பணிகள் நடைபெற்றது. ஆனால் 2 ஆண்டுகளாக செயல்படாத எந்திரங்களை முறையாக கவனிக்காததால் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது.
சின்னமனூர்:
சுருளியாறு மின்நிலையத்திற்கு இரவங்கலாறு அணையில் இருந்து குழாய் மூலம் நீர் கொண்டுவரப்படுகிறது. இதில் பெரும்பாலான பகுதி வனப்பகுதியில் வருகிறது. இதற்காக 2900 மீட்டர் நீள குழாய் அமைக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு 220 மீட்டர் குழாய் அழுத்தம் தாங்காமல் வெடித்தது.
இதனைதொடர்ந்து சீரமைக்கும் பணி 2023 ஜனவரியில் தொடங்கியது. 8 மாதங்களாக நடைபெற்ற பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. மின்உற்பத்தியின் போது எந்திரத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்சினைகளை சரிசெய்து இயக்கி பார்த்தனர்.
டர்பைனில் ஏற்பட்ட கோளாறு ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவால் சீரமைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி இரவங்கலாறு அணையில் இருந்து 81 கனஅடிநீர் கொண்டுவரப்பட்டு 20 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் 2 நாட்கள் மட்டுமே மின்உற்பத்தி நடைபெற்றது. அதனைதொடர்ந்து 29-ந்தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
சுருளியாறு நீர்மின்நிலையத்தில் குழாய் உடைந்ததால் அதனை சரிசெய்யும் பணி, பெயிண்டிங் பணிகள் நடைபெற்றது. ஆனால் 2 ஆண்டுகளாக செயல்படாத எந்திரங்களை முறையாக கவனிக்காததால் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சுருளி அருவி, மகாராஜா மெட்டு, சின்னசுருளி ஆகிய 3 பகுதிகளையும் இணைத்து சுழல் சுற்றுலா தொழில்நுட்ப வனச்சரகம் அமைக்கப்பட்டுள்ளது.
- சின்ன சுருளி அருவியில் தண்ணீர் அதிக அளவு வருவதால் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக சுருளி அருவி உள்ளது. இங்கு வருடத்தில் பெரும்பாலான நாட்கள் தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் அருவியில் நீராடி செல்வது வழக்கம்.
இதேபோல் மேகமலை, மகாராஜாமெட்டு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. மேலும் மேகமலை அடிவாரத்தில் உள்ள சின்ன சுருளியில் மழைக்கால ங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது சுருளி அருவி, மகாராஜா மெட்டு, சின்னசுருளி ஆகிய 3 பகுதிகளையும் இணைத்து சுழல் சுற்றுலா தொழில்நுட்ப வனச்சரகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்சராக அஜய் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் வனக்காவலர்கள் இங்கு தொடர்ந்து பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நுழைவு கட்டணம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
சுருளி அருவி இதுவரை கம்பம் வனச்சரக அலுவலகத்தின் கட்டுப்பா ட்டில் இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சின்ன சுருளி அருவியில் தண்ணீர் அதிக அளவு வருவதால் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
- 53 அடியை எட்டுவதால் 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் என தெரிவித்தனர்.
- முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இதன்மூலம் தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 51 அடியை எட்டியதும் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வத்தலக்குண்டு குன்னுவாரன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சளாறு கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.20 அடியாக உள்ளது. அணைக்கு 88 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. விரைவில் 53 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் என தெரிவித்தனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. 719 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.52 அடியாக உள்ளது. 333 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.60 அடியாக உள்ளது. 22 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 5.4, தேக்கடி 2.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- தேயிலை தோட்டங்களில் நின்று புகைப்படம் எடுப்பதும், குழுவாக நின்று வீடியோக்களை எடுத்து பதிவு செய்வதும் தொடர்ந்து வருகிறது.
- சுற்றுசூழல் பாதிக்கப்படுவதால் வெளியாட்கள் தேயிலை தோட்டங்களுக்குள் நுழையகூடாது என எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர்.
சின்னமனூர் :
தேனிமாவட்டம் சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது மேகமலை கிராமம். 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இப்பகுதியில் அதிகளவில் தேயிலை விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு ஹைவேவிஸ், மணலாறு, மேகமலை, மகாராஜாமெட்டு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.
திரும்பிய திசையெல்லாம் பசும்போர்வை போர்த்தியது போல பச்சை பசேலென தேயிலை தோட்டங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி என்பதால் இங்கு பெரும்பாலும் குளிர்ச்சியான சீதோசன நிலையே காணப்படும். இங்கு யானை, காட்டுமாடு, பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
மேலும் புலிகள் சரணாலய பகுதிகள் இருப்பதால் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இரவு நேரங்களில் மலைச்சாலை போக்குவரத்துக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இருந்தபோதும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மேகமலைக்கு வராமல் செல்வதில்லை. தேயிலை தோட்டங்களில் நின்று புகைப்படம் எடுப்பதும், குழுவாக நின்று வீடியோக்களை எடுத்து பதிவு செய்வதும் தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமக்களை அழைத்து வந்து போட்டோஷூட் எடுப்பதற்கு சிறந்த இடமாக இது உள்ளது. தோட்டங்களின் மையப்பகுதிகளுக்கு சென்று பலமணி நேரம் செலவிட்டு விதவிதமான புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். இதற்காக குடை, பிளாஷ், பலூன், பந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு வந்து போட்டோஷூட் நடத்துகின்றனர்.
அவை முடிந்ததும் தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக்பை உள்ளிட்ட கழிவுகளை அங்கேயே விட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதால் வெளியாட்கள் தேயிலை தோட்டங்களுக்குள் நுழையகூடாது என எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர்.
தேயிலை தோட்டங்கள் பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் இங்கு அட்டை புழுக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் தோட்டங்களுக்கு வரும் வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் ஏற்படும் பாதிப்பை தடுக்க இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளதாக தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் ரூ.3000 திருடப்பட்டது.
- புகாரின்பேரில் போலீசார் கும்பலை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(63). இவர் தெற்குரதவீதியில் உள்ள ஆறுமுகவிநாயகர் கோவிலில் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று பூஜை முடித்தபின்னர் கோவிலை பூட்டி சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இரும்பு கேட் திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் ரூ.3000 திருடப்பட்டது தெரியவந்தது.
இரவு நேரத்தில் கோவிலில் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்து உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- காலையில் மாணவர்கள் வகுப்பறையில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவற்றை சரி செய்து கொண்டிருந்தனர்.
- அலமாரியில் இருந்த 4 அடி நீள நல்ல பாம்பு பிச்சம்பட்டியை மாணவனின் கையில் சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிபட்டி;
தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அருகே கன்னியப்ப பிள்ளை பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் காலையில் மாணவர்கள் வகுப்பறையில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவற்றை சரி செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அலமாரியில் இருந்த 4 அடி நீள நல்ல பாம்பு பிச்சம்பட்டியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் விக்னேஷ் (வயது 14) கையில் சுற்றி கொண்டது.
இதனால் அலறியடித்த மாணவன் பதட்டத்தில் கையை உதறினார். இதனால் பாம்பு கையில் இருந்து கீழே விழுந்து ஓடிவிட்டது. இதனை அக்கம் பக்கத்தில் இருந்த மாணவர்கள் பார்த்து கூச்சலிட்டனர். இதனால் விக்னேஷ் மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கு வந்த ஆசிரியர்கள் மாணவனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பாம்பு கடித்ததற்கான எந்தவித தடயங்களும் இல்லாத நிலையில் மாணவனுக்கு ரத்த பரிசோதனை செய்து தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறிய தாவது:-
மாணவர் விக்னேஷ் பாம்பு கடித்து விட்டதாக பதட்டத்தில் அலறியதால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். ஆனால் பாம்பு கடித்ததற்கான எந்தவித தடயங்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் 24 மணி நேர பாதுகாப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார் என்றனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. பல அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், சுகாதாரமற்ற காரணங்களால் இது போன்ற விஷ சந்துக்கள் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து விடுகின்றன. எனவே பள்ளி வளாகங்கள் தூய்மையாக இருப்பதை கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி, இந்திராநகர், நொச்சிஓடை ,பொம்ம ராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
- மலைக்கிராமங்களில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். அந்தப்பள்ளி கட்டிடமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி, இந்திராநகர், நொச்சிஓடை ,பொம்ம ராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிரா மங்களுக்கு மின்சார வசதி கிடையாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலைக்கிராமங்களில் மின்சார வசதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளதால் மின்சார வசதி செய்ய வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.
அதனைத்தொடர்ந்து கிராமங்களில் அரசு சார்பில் சோலார் விளக்கு கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்ட பின்பு 10 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்ப டவில்லை. இதனால் மலைக்கிராமங்களில் அமைக்கப்பட்ட சோலார் விளக்குகள் பழுதடைய தொடங்கியது. இதனால் மலைக்கிராம மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திராகாலனி பகுதியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது. அதன்பிறகு முற்றிலும் மின் இணைப்பு நிறுத்தப்பட்டது.இதேபோல மலைக்கிரா மங்களில் ஏராளமான மாணவ -மாணவிகள் உள்ளனர். இரவு நேரங்க ளில் போதிய வெளிச்சம் இல்லாததால் இவர்களால் படிக்க முடியவில்லை. எனவே பொதுமக்கள், தங்கள் குழந்தைகளை வெளியூர்களுக்கு அனுப்பி விடுதிகளில் தங்கி படிக்க வைத்து வருகின்றனர். மலைக்கிராமங்களில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். அந்தப்பள்ளி கட்டிடமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
தற்போது வனப்பகுதியில் மழை அளவு குறைந்துள்ள தால் யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் நீர் தேடி கிராமங்களுக்குள் வர தொடங்கியுள்ளது.தெருவிளக்குகள் இல்லாமல் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளதால் வன விலங்குகளுக்கு அச்சப்பட்டு பொதுமக்கள் இரவு நேரங்களில் வீடுகளு க்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் ,நொச்சிஓடை உள்ளிட்ட மலைக்கிரா மங்களில் பழுதடைந்துள்ள சோலார் விளக்குகளை உரிய முறையில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக மின் வசதி இல்லாததால் டிஜிட்டல் உலகில் செல்போன் , டி.வி., இண்டர்நெட் போன்ற எந்தவித வசதியும் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். குறைந்த பட்சம் வீடுகளில் மின்விளக்கு, தெருக்களில் விளக்கு வசதியாவது செய்து தரவேன்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சின்ன ஓவுலாபுரம் கிராமத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடைபெற்ற மலை மாடுகள் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.
- அப்பகுதியில் ஆக்கிரமிப்பு களை அகற்றி மறு அளவீடு செய்து கால்வாய், சாக்கடை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டர் உத்தரவிட்டார்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரம் கிராமத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடைபெற்ற மலை மாடுகள் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.
தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி கிராமங்களில் அதிகமாக வளர்க்கப்படும் பாரம்பரியமான நாட்டின மலைமாடுகளை பாதுகாப்பதற்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் பதிவு செய்ய ப்பட்ட இனமாக மலைமாடு களை அங்கீகரிப்பதற்காக வும் இந்த முயற்சி மேற்கொள்ளப்ப ட்டுள்ளது.
மலைமாடுகளை அறிவி யல் அடிப்படையிலான பராமரிப்பு மற்றும் இனவிருத்தி முறைகளை கால்நடை வளர்ப்ப வர்களிடம் கற்பிக்கவும் மற்றும் மக்களிடையே மலை மாடுகளின் மகத்துவம் குறித்த விளக்கம் அளித்தல், அழிந்து வரும் மலைமாடு களை பாதுகாப்பதற்காகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காகவும் இக்கண்காட்சி நடத்தப்பட்டு ள்ளது.
கண்காட்சியில் கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடை வளர்ப்பில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மற்றும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் தொழில்நுட்ப மாதிரிகள் தொடர்பாக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயி களுக்கு மலைமாடு களைப் பாதுகாத்தல், மரபுசாரா தீவன மேலாண்மை, நோய் பராமரிப்பு, மதிப்புக் கூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு ஆகிய தலைப்புக ளில் பயிற்சி அளிக்க ப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சின்ன மனூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் நிவேதா அண்ணாதுரை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டென்சிங் ஞானராஜ், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ரிச்சர்டு ஜெகதீசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அன்பழ கன், சின்ன ஓவுலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சிக்கு சென்ற போது கலெக்டரிடம் அப்பகுதி மக்கள்புகார் மனு அளித்தனர். அதில் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி இல்லை என்றும், இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்ைல எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்பு களை அகற்றி மறு அளவீடு செய்து கால்வாய், சாக்கடை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டர் உத்தரவிட்டார்.
- அதிகாலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம், பால், பன்னீர், தேன் உள்பட 16 அபிஷேகங்கள் நடைபெற்றது.
- பின்பு பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, 12அடி உயரமுள்ள ஏலக்காய் மாலை, தாமரை மாலை ஆகியவை சாத்தப்பட்டது
போடி:
போடி சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதிகாலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம், பால், பன்னீர், தேன் உள்பட 16 அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, 12அடி உயரமுள்ள ஏலக்காய் மாலை, தாமரை மாலை ஆகியவை சாத்தப்பட்டது. பின்பு பல்வேறு தீபாராதனைகள் நடைபெற்றது.
அது சமயம் பக்தர்கள் கோவிந்தா, நாராயணா என்று கோஷமிட்டனர். பக்தர்களால் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி பெயரில் பாடல் பாடப்பட்டது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு இனிப்பு பொங்கல், புளியோதரை, எலுமிச்ச சாதம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர், பட்டாச்சாரியார் கார்த்திக், குமரேசன், பெருமாள் பக்தர்கள் ஆகியோர் செய்தனர்.
- கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை உட்பகுதிகளில் மழைபெய்து வருகிறது.
- இந்த தண்ணீரை தடுப்பணை கட்டி இடுக்கி அணைக்கு கேரள அரசு கொண்டு செல்கிறது.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. வடமாநிலங்களில் பெய்த அளவுக்கு தென்னிந்தியாவில் 50 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. கடந்த 20 நாட்களில் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பெரியாறில் 238 மி.மீ., தேக்கடியில் 104 மி.மீ. மழை பெய்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாத மழையை காட்டிலும் அதிகமாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் இம்மாத ெதாடக்கத்தில் நீர்வரத்து குறைவாகவே இருந்தது.
தற்போதுவரை அணைக்கு 11221 கன அடி நீர் வந்துள்ளது. இதில் தமிழக பகுதிக்கு 9274 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 118.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 119.05 அடியாக அதாவது 0.95 அடி மட்டுமே உயர்ந்துள்ளது.
இந்த நீர்மட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் 15.90 அடி குறைவாகும். கடந்த ஆண்டு இதே நாளில் பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.95 அடியாக இருந்தது. அணைக்கு 510.04 கன அடி நீர் வந்தது. எனவே பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை கேரளா அரசு இடுக்கி அணைக்கு மடைமா ற்றுவதாக பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறுகையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை உட்பகுதிகளில் மழைபெய்து வருகிறது. ஆனால் முல்லைப்பெரியாறு அணைக்கு இயல்பை விட குறைவாகவே தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த தண்ணீரை தடுப்பணை கட்டி இடுக்கி அணைக்கு கேரள அரசு கொண்டு செல்கிறது. சராசரியா 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்தபோதும் அணைக்கு 510 கனஅடி நீைர தாண்டி தண்ணீர் வரவில்ைல.
எனவே கேரள அரசு பல ஆண்டுகளாக பெரியாறு அணை தண்ணீரை மடைமாற்றுகிறது என குற்றம் சாட்டி வருகிறோம். எனவே தமிழக அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கண்காணிப்பு குழுவின் முன்னிலையில் டிரோன் மூலம் அணை ப்பகுதியை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- பெரியகுளம், வடுகபட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
- காலையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி தொடங்கி மாலை வரை திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே காந்தி மைதானம் வீதியில் அமைந்துள்ள பிள்ளை செல்வ முத்து மாரியம்மன் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலமர விழுது குழு சார்பாக 231 நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரியகுளம், வடுகபட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். காலையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி தொடங்கி மாலை வரை திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டது.
முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






