என் மலர்
நீங்கள் தேடியது "cattle fair"
- சின்ன ஓவுலாபுரம் கிராமத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடைபெற்ற மலை மாடுகள் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.
- அப்பகுதியில் ஆக்கிரமிப்பு களை அகற்றி மறு அளவீடு செய்து கால்வாய், சாக்கடை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டர் உத்தரவிட்டார்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரம் கிராமத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடைபெற்ற மலை மாடுகள் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.
தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி கிராமங்களில் அதிகமாக வளர்க்கப்படும் பாரம்பரியமான நாட்டின மலைமாடுகளை பாதுகாப்பதற்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் பதிவு செய்ய ப்பட்ட இனமாக மலைமாடு களை அங்கீகரிப்பதற்காக வும் இந்த முயற்சி மேற்கொள்ளப்ப ட்டுள்ளது.
மலைமாடுகளை அறிவி யல் அடிப்படையிலான பராமரிப்பு மற்றும் இனவிருத்தி முறைகளை கால்நடை வளர்ப்ப வர்களிடம் கற்பிக்கவும் மற்றும் மக்களிடையே மலை மாடுகளின் மகத்துவம் குறித்த விளக்கம் அளித்தல், அழிந்து வரும் மலைமாடு களை பாதுகாப்பதற்காகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காகவும் இக்கண்காட்சி நடத்தப்பட்டு ள்ளது.
கண்காட்சியில் கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடை வளர்ப்பில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மற்றும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் தொழில்நுட்ப மாதிரிகள் தொடர்பாக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயி களுக்கு மலைமாடு களைப் பாதுகாத்தல், மரபுசாரா தீவன மேலாண்மை, நோய் பராமரிப்பு, மதிப்புக் கூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு ஆகிய தலைப்புக ளில் பயிற்சி அளிக்க ப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சின்ன மனூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் நிவேதா அண்ணாதுரை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டென்சிங் ஞானராஜ், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ரிச்சர்டு ஜெகதீசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அன்பழ கன், சின்ன ஓவுலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சிக்கு சென்ற போது கலெக்டரிடம் அப்பகுதி மக்கள்புகார் மனு அளித்தனர். அதில் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி இல்லை என்றும், இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்ைல எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்பு களை அகற்றி மறு அளவீடு செய்து கால்வாய், சாக்கடை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டர் உத்தரவிட்டார்.






