என் மலர்
தேனி
- காலையில் மாணவர்கள் வகுப்பறையில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவற்றை சரி செய்து கொண்டிருந்தனர்.
- அலமாரியில் இருந்த 4 அடி நீள நல்ல பாம்பு பிச்சம்பட்டியை மாணவனின் கையில் சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிபட்டி;
தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அருகே கன்னியப்ப பிள்ளை பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் காலையில் மாணவர்கள் வகுப்பறையில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவற்றை சரி செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அலமாரியில் இருந்த 4 அடி நீள நல்ல பாம்பு பிச்சம்பட்டியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் விக்னேஷ் (வயது 14) கையில் சுற்றி கொண்டது.
இதனால் அலறியடித்த மாணவன் பதட்டத்தில் கையை உதறினார். இதனால் பாம்பு கையில் இருந்து கீழே விழுந்து ஓடிவிட்டது. இதனை அக்கம் பக்கத்தில் இருந்த மாணவர்கள் பார்த்து கூச்சலிட்டனர். இதனால் விக்னேஷ் மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கு வந்த ஆசிரியர்கள் மாணவனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பாம்பு கடித்ததற்கான எந்தவித தடயங்களும் இல்லாத நிலையில் மாணவனுக்கு ரத்த பரிசோதனை செய்து தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறிய தாவது:-
மாணவர் விக்னேஷ் பாம்பு கடித்து விட்டதாக பதட்டத்தில் அலறியதால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். ஆனால் பாம்பு கடித்ததற்கான எந்தவித தடயங்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் 24 மணி நேர பாதுகாப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார் என்றனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. பல அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், சுகாதாரமற்ற காரணங்களால் இது போன்ற விஷ சந்துக்கள் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து விடுகின்றன. எனவே பள்ளி வளாகங்கள் தூய்மையாக இருப்பதை கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி, இந்திராநகர், நொச்சிஓடை ,பொம்ம ராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
- மலைக்கிராமங்களில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். அந்தப்பள்ளி கட்டிடமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி, இந்திராநகர், நொச்சிஓடை ,பொம்ம ராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிரா மங்களுக்கு மின்சார வசதி கிடையாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலைக்கிராமங்களில் மின்சார வசதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளதால் மின்சார வசதி செய்ய வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.
அதனைத்தொடர்ந்து கிராமங்களில் அரசு சார்பில் சோலார் விளக்கு கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்ட பின்பு 10 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்ப டவில்லை. இதனால் மலைக்கிராமங்களில் அமைக்கப்பட்ட சோலார் விளக்குகள் பழுதடைய தொடங்கியது. இதனால் மலைக்கிராம மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திராகாலனி பகுதியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது. அதன்பிறகு முற்றிலும் மின் இணைப்பு நிறுத்தப்பட்டது.இதேபோல மலைக்கிரா மங்களில் ஏராளமான மாணவ -மாணவிகள் உள்ளனர். இரவு நேரங்க ளில் போதிய வெளிச்சம் இல்லாததால் இவர்களால் படிக்க முடியவில்லை. எனவே பொதுமக்கள், தங்கள் குழந்தைகளை வெளியூர்களுக்கு அனுப்பி விடுதிகளில் தங்கி படிக்க வைத்து வருகின்றனர். மலைக்கிராமங்களில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். அந்தப்பள்ளி கட்டிடமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
தற்போது வனப்பகுதியில் மழை அளவு குறைந்துள்ள தால் யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் நீர் தேடி கிராமங்களுக்குள் வர தொடங்கியுள்ளது.தெருவிளக்குகள் இல்லாமல் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளதால் வன விலங்குகளுக்கு அச்சப்பட்டு பொதுமக்கள் இரவு நேரங்களில் வீடுகளு க்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் ,நொச்சிஓடை உள்ளிட்ட மலைக்கிரா மங்களில் பழுதடைந்துள்ள சோலார் விளக்குகளை உரிய முறையில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக மின் வசதி இல்லாததால் டிஜிட்டல் உலகில் செல்போன் , டி.வி., இண்டர்நெட் போன்ற எந்தவித வசதியும் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். குறைந்த பட்சம் வீடுகளில் மின்விளக்கு, தெருக்களில் விளக்கு வசதியாவது செய்து தரவேன்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சின்ன ஓவுலாபுரம் கிராமத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடைபெற்ற மலை மாடுகள் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.
- அப்பகுதியில் ஆக்கிரமிப்பு களை அகற்றி மறு அளவீடு செய்து கால்வாய், சாக்கடை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டர் உத்தரவிட்டார்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரம் கிராமத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடைபெற்ற மலை மாடுகள் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.
தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி கிராமங்களில் அதிகமாக வளர்க்கப்படும் பாரம்பரியமான நாட்டின மலைமாடுகளை பாதுகாப்பதற்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் பதிவு செய்ய ப்பட்ட இனமாக மலைமாடு களை அங்கீகரிப்பதற்காக வும் இந்த முயற்சி மேற்கொள்ளப்ப ட்டுள்ளது.
மலைமாடுகளை அறிவி யல் அடிப்படையிலான பராமரிப்பு மற்றும் இனவிருத்தி முறைகளை கால்நடை வளர்ப்ப வர்களிடம் கற்பிக்கவும் மற்றும் மக்களிடையே மலை மாடுகளின் மகத்துவம் குறித்த விளக்கம் அளித்தல், அழிந்து வரும் மலைமாடு களை பாதுகாப்பதற்காகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காகவும் இக்கண்காட்சி நடத்தப்பட்டு ள்ளது.
கண்காட்சியில் கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடை வளர்ப்பில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மற்றும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் தொழில்நுட்ப மாதிரிகள் தொடர்பாக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயி களுக்கு மலைமாடு களைப் பாதுகாத்தல், மரபுசாரா தீவன மேலாண்மை, நோய் பராமரிப்பு, மதிப்புக் கூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு ஆகிய தலைப்புக ளில் பயிற்சி அளிக்க ப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சின்ன மனூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் நிவேதா அண்ணாதுரை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டென்சிங் ஞானராஜ், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ரிச்சர்டு ஜெகதீசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அன்பழ கன், சின்ன ஓவுலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சிக்கு சென்ற போது கலெக்டரிடம் அப்பகுதி மக்கள்புகார் மனு அளித்தனர். அதில் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி இல்லை என்றும், இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்ைல எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்பு களை அகற்றி மறு அளவீடு செய்து கால்வாய், சாக்கடை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டர் உத்தரவிட்டார்.
- அதிகாலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம், பால், பன்னீர், தேன் உள்பட 16 அபிஷேகங்கள் நடைபெற்றது.
- பின்பு பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, 12அடி உயரமுள்ள ஏலக்காய் மாலை, தாமரை மாலை ஆகியவை சாத்தப்பட்டது
போடி:
போடி சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதிகாலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம், பால், பன்னீர், தேன் உள்பட 16 அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, 12அடி உயரமுள்ள ஏலக்காய் மாலை, தாமரை மாலை ஆகியவை சாத்தப்பட்டது. பின்பு பல்வேறு தீபாராதனைகள் நடைபெற்றது.
அது சமயம் பக்தர்கள் கோவிந்தா, நாராயணா என்று கோஷமிட்டனர். பக்தர்களால் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி பெயரில் பாடல் பாடப்பட்டது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு இனிப்பு பொங்கல், புளியோதரை, எலுமிச்ச சாதம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர், பட்டாச்சாரியார் கார்த்திக், குமரேசன், பெருமாள் பக்தர்கள் ஆகியோர் செய்தனர்.
- கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை உட்பகுதிகளில் மழைபெய்து வருகிறது.
- இந்த தண்ணீரை தடுப்பணை கட்டி இடுக்கி அணைக்கு கேரள அரசு கொண்டு செல்கிறது.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. வடமாநிலங்களில் பெய்த அளவுக்கு தென்னிந்தியாவில் 50 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. கடந்த 20 நாட்களில் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பெரியாறில் 238 மி.மீ., தேக்கடியில் 104 மி.மீ. மழை பெய்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாத மழையை காட்டிலும் அதிகமாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் இம்மாத ெதாடக்கத்தில் நீர்வரத்து குறைவாகவே இருந்தது.
தற்போதுவரை அணைக்கு 11221 கன அடி நீர் வந்துள்ளது. இதில் தமிழக பகுதிக்கு 9274 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 118.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 119.05 அடியாக அதாவது 0.95 அடி மட்டுமே உயர்ந்துள்ளது.
இந்த நீர்மட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் 15.90 அடி குறைவாகும். கடந்த ஆண்டு இதே நாளில் பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.95 அடியாக இருந்தது. அணைக்கு 510.04 கன அடி நீர் வந்தது. எனவே பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை கேரளா அரசு இடுக்கி அணைக்கு மடைமா ற்றுவதாக பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறுகையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை உட்பகுதிகளில் மழைபெய்து வருகிறது. ஆனால் முல்லைப்பெரியாறு அணைக்கு இயல்பை விட குறைவாகவே தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த தண்ணீரை தடுப்பணை கட்டி இடுக்கி அணைக்கு கேரள அரசு கொண்டு செல்கிறது. சராசரியா 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்தபோதும் அணைக்கு 510 கனஅடி நீைர தாண்டி தண்ணீர் வரவில்ைல.
எனவே கேரள அரசு பல ஆண்டுகளாக பெரியாறு அணை தண்ணீரை மடைமாற்றுகிறது என குற்றம் சாட்டி வருகிறோம். எனவே தமிழக அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கண்காணிப்பு குழுவின் முன்னிலையில் டிரோன் மூலம் அணை ப்பகுதியை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- பெரியகுளம், வடுகபட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
- காலையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி தொடங்கி மாலை வரை திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே காந்தி மைதானம் வீதியில் அமைந்துள்ள பிள்ளை செல்வ முத்து மாரியம்மன் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலமர விழுது குழு சார்பாக 231 நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரியகுளம், வடுகபட்டி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். காலையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி தொடங்கி மாலை வரை திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டது.
முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- தனது மனைவியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்று பூண்டு வியாபாரம் பார்த்து வந்துள்ளார்.
- இதனிடையே பூட்டி இருந்த அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்துள்ளதாக அவரது மாமனார் தெரிவித்துள்ளார்.
பெரியகுளம்:
திருவண்ணாமலையை சேர்ந்தவர் உதயகுமார் (30). வெள்ளை பூண்டு வியா பாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி தெலுங்கர் தெருவில் உள்ள சுப்புராஜ் கணேசன் என்பவரது வீட்டில் வசித்து வருகிறார். அவ்வப்போது வியாபாரத்திற்காக வெளியூர் சென்று விடுவது வழக்கம்.
இதனிடையே சுப்புராஜ் கணேசனின் மகள் ஹரிதா என்பவரை திருமணம் செய்து அதே வீட்டில் வாடகைக்கு இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரிதாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் தனது மனைவியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றார். அங்கேயே பூண்டு வியாபாரமும் பார்த்து வந்துள்ளார். இதனிடையே பூட்டி இருந்த அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்துள்ளதாக அவரது மாமனார் தெரிவித்து ள்ளார்.
இதனால் அதிர்ச்சி யடைந்த உதயகுமார் வடுகபட்டிக்கு வந்து தனது வீட்டை பார்த்துள்ளார். பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடி க்கப்பட்டது தெரியவந்தது. இதனால் தென்கரை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இந்த கொள்ளை யில் தனது மாமியார், மாமனாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தனது புகாரில் தெரிவித்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா கொள்ளை வழக்கு தொடர்பாக மாமனார் சுப்புராஜ் கணேசன், மாமியார் ஜமுனாராணி, ராஜாராம், சாந்தகுமாரி, முருகன், கருப்பையா, தாடி பாண்டி ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த ஆண்டு இலவம் பஞ்சு விளைச்சல் எதிர்பார்ப்புக்கு மேல் அதிகம் உள்ளதால் கடந்த மே மாதம் இலவம் பஞ்சு விலை மிகுந்த சரிவை அடையத் தொடங்கியது.
- கல்கத்தா, கேரள மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வேறு பகுதிகளுக்கு சென்று விட்டதால் இங்கு விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதி களான கொட்டகுடி குரங்கணி உத்தம்பாறை, சோலையூர், சிறக்காடு, போன்ற பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கருக்கும் மேல் இலவம் பஞ்சு விவசாயம் நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்தில் போடி மற்றும் வருசநாடு சுற்றுப்பகுதிகளில் இலவம் பஞ்சு மிகுந்த தரம் உள்ள தாகவும் பயன்படுத்துவதற்கு மருத்துவ குணம் உள்ளதால் மெத்தைகள், தலைய ணைகள், இருக்கைகள் போன்றவை தயார் செய்யப்படுகிறது. இவ்வகை தலையணைகள் உடலின் தட்பவெப்பத்தை சீராக வைக்கும் என்று நம்ப ப்படுகிறது. இதில் தயாரிக்க ப்படும் மெத்தைகள் மற்றும் தலையணைகளுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. இதனால் பஞ்சு மெத்தை, தலையணைகள் அதிக அளவில் பல்வேறு மாநில ங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகிறது
பெரும்பாலும் கல்கத்தா மற்றும் கேரள மாநிலங்க ளுக்கு அதிக அளவில் இலவம் பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இலவம் பஞ்சு உற்பத்தி விவசாயத்தை நம்பி சுமார் 50க்கும் மேற்பட்ட பஞ்சுப்பேட்டையில் இயங்கி வருகின்றன.
250 க்கும் மேற்பட்ட மெத்தை தலையணை உற்பத்தியாளர்கள் மற்றும் 5000 க்கும் மேற்பட்ட பஞ்சு பேட்டை தொழிலாளிகள் இலவம் பஞ்சு தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இலவம்பஞ்சு விலை அதிகரிப்பதும், குறைவதும் இதன் உற்பத்தி, விளைச்சல் மற்றும் ஏற்றுமதியைப் பொறுத்தே அமையும்.
இந்த ஆண்டு இலவம் பஞ்சு விளைச்சல் எதிர்பார்ப்புக்கு மேல் அதிகம் உள்ளதால் கடந்த மே மாதம் இலவம் பஞ்சு விலை மிகுந்த சரிவை அடையத் தொடங்கியது.
கடந்த மார்ச் மாதம் வரை கிலோ ரூ.320 வரை விற்ற முதல் தர இலவம்பஞ்சு கிலோ ரூ.200 முதல் ரூ.230 வரை வீழ்ச்சி அடைந்தது. ரூ. 140 வரை விற்கப்பட்ட விதையுடன் கூடிய சுத்தம் செய்யப்படாத இலவம் பஞ்சு கிலோ ரூ.75 முதல் ரூ.95 வரை விலை போனது.
இதனால் ஏராளமான விவசாயிகள் காய்களை மரத்திலேயே விட்டு விட்டனர். மரத்திலேயே இலவம் காய் வெடித்து சிதறி பஞ்சு வீணாகிப் போனது.
பெரும்பாலான விவசாயி கள் ஆடி மாதம் முடிந்து ஆவணி தொடங்கினால் திருமண முகூர்த்தங்கள் மற்றும் விசேஷ தினங்கள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் காய்களையும் பஞ்சு மூடைகளையும் இருப்பு வைத்துக் காத்திரு ந்தனர்.
இந்நிலையில் போடியில் இருந்து அதிகளவில் இலவம்பஞ்சு கொள்முதல் செய்யும் கல்கத்தா, கேரள மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வேறு பகுதிகளுக்கு சென்று விட்டதால் இங்கு விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. மேலும் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் தேவை குறைவின் காரணமாக தலையணை, மெத்தைகள், இருக்கைகள் தயாரிப்பு குறைந்து வியா பாரிகளும் பாதிக்கப்பட்டு ள்ளனர்.
- பேரிடர் மீட்பு பணிகளுக்கான சாத்திய கூறுகளை ஆராயும் ஒரு பகுதியாக விமான படையின் ஹெகாப்டர் சத்திரம் விமான ஓடுதளத்தில் தரை இறக்கி சோதனை செய்யப்பட்டது,
- திருவனந்தபுரம் வந்த ஹெலிகாப்டர் அங்கிருந்து சத்திரம் விமான ஓடுதளத்தை 3 முறை சுற்றியபின்னர் வெற்றிகர மாக தரை இறக்கப்பட்டது.
கூடலூர்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே வண்டிப்பெரியாறு சத்திரம் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு என்.சி.சி. விமானம் ஓடுதள கட்டுமானப்பணிகள் தொடங்கியது. இந்த தளத்தில் ஏர்ஸ்டிரிப் மூலம் ஆண்டு தோறும் 1000 என்.சி.சி.ஏர்விங் கேட்டர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறிய விமானம் இங்கு வெற்றிகரமாக தரையிறங்கியது. பருவமழை காலத்தின்போது இடுக்கி மாவட்டத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் மீட்பு பணிகளுக்கு சத்திரம் விமான ஓடு பாதையை பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராயுமாறு மாவட்ட நிர்வாகம் என்.சி.சி. மற்றும் கேரள அரசுக்கு கடிதம் எழுதியது.
இதன் அடிப்படையில் பேரிடர் மீட்பு பணிகளுக்கான சாத்திய கூறுகளை ஆராயும் ஒரு பகுதியாக விமான படையின் ஹெகாப்டர் சத்திரம் விமான ஓடுதளத்தில் தரை இறக்கி சோதனை செய்யப்பட்டது.
இதற்காக கோவை சூளூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டது. திருவனந்த புரம் வந்த ஹெலிகாப்டர் அங்கிருந்து சத்திரம் விமான ஓடுதளத்தை 3 முறை சுற்றியபின்னர் வெற்றிகர மாக தரை இறக்கப்பட்டது. இயற்கை பேரிடர் ஏற்படும் போது விமானப்படை உதவியுடன் பொதுமக்களை மீட்கவும், மீட்பு படைகளை விரைவாக கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதே இதன் நோக்கமாகும். சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
ஆய்வு குழுவால் சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை உயர் அதிகாரி களிடம் ஒப்படைக்கப்படும் என குரூப் கேப்டன் சீனிவாசன் தெரிவித்தார்.
- வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடை பெற்றது.
- வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும் என தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்ஷஜீ வனா தலைமையில் நடை பெற்றது
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:
வடகிழக்கு பருவமழைக் காலத்திற்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவ லர்களுக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
பேரிடரின் போது பொது கட்டிடங்களை முகாம்களாக பயன்படுத்த ஏதுவாக மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் போதுமான தாகவும் தகுதியானதாகவும் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை கட்டிடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களில் பழுதுகள் இருப்பின் அதனை சரிசெய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நீர்நிலைப் புறம்போக்கு களான ஆறு, ஏரி, ஓடை, வாரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலை களில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றிடவும், மேற்படி நீர்நிலைகளின் கரைகளின் உறுதித் தன்மையினை ஆராய்ந்து, பலவீனமாக உள்ள கரைகளை பலப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் உரிய நட வடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
அவசர காலங்களில் கிராமங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேறும் வழிகளுடன் கூடிய செயல் திட்டத்தினை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலமாக தயார் செய்து வைத்திருத்தல் வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள த்தால் பாதிக்கப்படும் கிராமங்களிலிருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைப்பதற்கு ஏதுவாக பள்ளிக் கட்டிட ங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களின் தொடர்பு எண்களுடன் கூடிய பட்டியலை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். வட்ட அளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புபணித் துறையினரின் செயல்முறை விளக்கம் நடத்தி பொது மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நீர்நிலைகளில் பொது மக்கள், சிறுவர் - சிறுமிகள் இறங்குவதால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்க நீர்நிலைகளின் ஆழமான பகுதிகள் குறித்த முன்னெ ச்சரிக்கை அறிவிப்பு பலகையினை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நீர்நிலைகளின் கரைகளில் வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். வெள்ளத் தடுப்பு பணிக்காக போதுமான அளவில் மணல் மூட்டைகளை தேவைப்படும் இடங்களில் முன்னதாகவே இருப்பு வைத்திட வேண்டும் என தெரிவித்தார்.
- வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக அடிமாலி போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் வாலிபரை கைது செய்து கஞ்சா செடிகளை வெட்டி அழித்தனர்.
கூடலூர்:
மூணாறு அருகே உள்ள ராஜா காடு பழைய விடுதி காலனியைச் சேர்ந்தவர் ஜோய் மகன் சனீஸ் (வயது 27). இவரது வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக அடிமாலி போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடி ப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அதிடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் தோட்டத்தில் 246 ெ ச.மீ நீீளமுள்ள ஒரு கஞ்சாசெடியும், 66 செ.மீ நீளமுள்ள மற்றொரு கஞ்சா செடியையும் கண்டு பிடித்தனர்.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சா செடிகளை வெட்டி அழித்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- லோயர்கேம்பில் இருந்து வைகை அணை வரை முல்லை ப்பெரியாறு ஆற்றின் கரையினை தனிநபர்கள் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபரை எச்சரித்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப்பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
மேலும் மறைமுக பாசனம் மூலம் தென்னை, வாழை, திராட்சை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லோயர்கே ம்பில் இருந்து வைகை அணை வரை முல்லை ப்பெரியாறு ஆற்றின் கரையினை தனிநபர்கள் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு செய்து வருவதால், ஆற்றின் அகலம் சுருங்கிக் கொண்டே செல்கின்றது.
இதனை தடுக்கும் விதமாக பொதுப்பணித்துறையினர் முல்லைப்பெரியாறு ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கம்பம் காமயகவுண்டன் பட்டி செல்லும் சாலையில் முல்லைப்பெரியாறு பாலம் உள்ளது.
இந்த பாலத்தின் வடக்குப் பகுதியில் மயானம் அருகே தனிநபர் ஆற்றின் கரையோரப்பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் கரையை சமன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து வருவதாக காமயகவுண்டன் பட்டி வி.ஏ.ஓ. நஜீம்கானிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வி.ஏ.ஓ. ஆய்வு நடத்தினார். அதில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கரையை சமன்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தி னார். பின்னர் பொதுப்பணி த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதை யடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபரை எச்சரித்த னர். இது குறித்து பொது ப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,
முல்லைப்பெரி யாற்றின் கரையோரங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தினை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளது கண்டு பிடிக்கபட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.






