search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடியில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் மீது வழக்கு
    X

    கோப்பு படம்.

    போடியில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் மீது வழக்கு

    • லோன் கொடுத்தவர்கள் அந்த பணத்தை கட்ட ச்சொல்லி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளனர்.
    • மேலும் பணத்தை லெட்சுமணனிடமும் கேட்டதால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி முந்தல் காலனியைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 35). இவருக்கும் சிவகாமி (27) என்பவருக்கும் 13 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வர்ஷன் (7), நேத்ரா (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். லெட்சுமணன் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    சிவகாமி மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கி கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் லோன் கொடுத்தவர்கள் அந்த பணத்தை கட்ட ச்சொல்லி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளனர்.

    மேலும் பணத்தை லெட்சுமணனிடமும் கேட்டு ள்ளனர். இதனால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. யாரைக் கேட்டு லோன் வாங்கினாய்? அந்த பணத்தை கட்ட முடியாதா? என கேட்டு சிவகாமியை கத்தியால் இடுப்பு, தொடை, முழங்கை ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தினார். பலத்த காயமடைந்த சிவகாமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெ க்டர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×