என் மலர்
தேனி
- ஏலத் தொட்டத் தொழிலாளி அடிக்கடி கஞ்சா விற்பனையில் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
- இதனால் அக்கம் பக்கத்தில் தனக்குத் தலைகுனிவாக உள்ளது என கூறி குமுளி போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.
கூடலூர்:
தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி வெப்பக்க ண்டத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி சுரேஷ் (வயது 42). ஏலத் தொட்டத் தொழிலாளி. இவர் அடிக்கடி கஞ்சா விற்பனை யில் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார். சம்பவத்தன்று குமுளி இன்ஸ்பெக்டர் சோபின் ஆண்டனி தலைமையில் போலீசார் கஞ்சா விற்பனை தொடர்பாக அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் கஞ்சா எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் முனியாண்டி சுரேஷ் எந்த காரணத்துக்காக போலீசார் தன் வீட்டில் சோதனை நடத்துகிறார்கள்? இதனால் அக்கம் பக்கத்தில் தனக்குத் தலைகுனிவாக உள்ளது என கூறி குமுளி போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.
மேலும் போலீஸ் நிலைய வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
முனியாண்டி சுரேஷ் மீது கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை தந்தம் கடத்தல், மான் கொம்பு கடத்தல் மான் இறைச்சி விற்பனை ஆகிய வழக்குகளில் 10 பேரை கேரள வனத்துறையினர் கைது செய்தனர்.
- எனவே இதனை தடுக்கவும், வேட்டையாடுபவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் கோட்டயம் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் உத்தரவிட்டார்.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லை யில் சுமார் 925 ச.கீ. பரப்பளவில் கேரள மாநிலத்தின் இடுக்கி, பத்த னம்திட்டா மாவட்டங்களில் பெரியாறு புலிகள் சரணா லயம் அமைந்துள்ளது.
இதையொட்டியுள்ள வனப்பகுதிகளில் அதிக அளவில் வன விலங்குகள் வேட்டை நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை தந்தம் கடத்தல், மான் கொம்பு கடத்தல் மான் இறைச்சி விற்பனை ஆகிய வழக்குகளில் 10 பேரை கேரள வனத்துறையினர் கைது செய்தனர்.
சரணாலயத்ைத ஒட்டி யுள்ள விளை நிலங்களில் அதிக அளவில் வன விலங்குகள் வேட்டை நடைபெற்று வருகிறது. எனவே இதனை தடுக்கவும், வேட்டையாடுபவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் கோட்டயம் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் உத்தரவிட்டார். மேலும் மாவட்ட வன அலுவலர் சந்தீப் மேற்பார்வையில் பறக்கும் படை வனத்துறை குழு அமைக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக குமுளி ரேஞ்சர் அணில்குமார் தலைமையில் வனத்துறை யினர் குழு வேட்டையாடுதல் தடுப்பு குழு, வன விலங்கு பாதுகாப்புக்குழு ஆகியோர் சரணாலய பகுதியை யொட்டி உள்ள தங்கமலை, தொண்டியாறு, மூலக்கயம், மாட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை யில் ஈடுபட்டனர். வன விலங்குகள் வேட்டையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேட்டையில் ஈடுபடு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
- கடந்த மாதம் வரை நல்ல விலைக்கு விற்பனையான ஆடுகள் தற்போது கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- தற்போது புரட்டாசி மாதம் என்பதால் விலை மந்தமாக உள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு முத்தனம்பட்டி, ரெங்கநாதபுரம், அய்யர்தோட்டம், புள்ளிமான் கோம்பை, பாலக்கோம்பை, ஏத்தக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
குறிப்பாக மலைப்பகுதியான ஏத்தக்கோவில் கிராமத்தில் ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. இவை வாரச்சந்தையில் கொண்டு வரப்பட்டு வியாபாரிகள் மூலம் வாங்கிச் செல்லப்படுகிறது. கடந்த மாதம் வரை நல்ல விலைக்கு விற்பனையான ஆடுகள் தற்போது கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
புரட்டாசி மாதம் என்பதால் விலை மந்தமாக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் விற்பனையான விலையில் பெரும்பகுதி தங்களுக்கு கிடைக்காததால் விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகளை மீண்டும் விவசாயிகள் எடுத்துச் சென்றனர். இன்னும் சில வாரங்களுக்கு இதேநிலைதான் தொடரும் என்பதால் வாரச்சந்தையில் விற்பனை சுமாராக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
விற்பனை இல்லாததால் ஆண்டிபட்டி ஆட்டுச்சந்தை களையிழந்து காணப்பட்டது.
- கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 15-ந் தேதி யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது.
- காட்டு யானை நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானலில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர் வரத்து இருக்கும். தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் நீர்வரத்து சீராகாததால் 6-வது நாளாக தடை தொடரும் என அறிவிக்கப்பட்டது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தடை காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 15-ந் தேதி யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது. யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னர் 18-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். இந்த நிலையில் வெண்ணியாறு பீட் பகுதியில் இருந்து மீண்டும் 3 யானைகள் சுருளி அருவியில் நடமாடியதால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு பலகை சோதனை சாவடியில் வைக்கப்பட்டுள்ளது.
காட்டு யானை நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 119.40 அடியாக உள்ளது. 406 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.59 அடியாக உள்ளது. 194 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.40 அடியாக உள்ளது. 44 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87.57 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாரில் மட்டும் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
- புதிய கட்டிடத்திற்கு தேவையான ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள கம்பிகளை வைத்து சென்றார்.
- திரும்பி வந்து பார்த்த போது அந்த கம்பிகள் திருடு போயிருந்தது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கனவாபீர் (64). இவர் ரகமத் நகரில் உள்ள உறவினர் வீட்டின் புதிய கட்டிடத்திற்கு தேவையான ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள கம்பிகளை வைத்து சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது அந்த கம்பிகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இதுதொடர்பாக குணபாலன் (36) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
- வெளியே சென்ற நர்சிங் மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி ஜே.கே.பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகள் உமா(17). இவர் பி.தருமத்துப்பட்டியில் உள்ள டிரஸ்டு மூலம் நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று டிரஸ்டுக்கு செல்வதாக கூறிச்சென்றார்.
ஆனால் அவர் அங்கு செல்லவில்லை என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்திலும் தேடிபார்த்தும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
- மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டுவிழா கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- 15 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டுவிழா கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒன்றிணைந்து 2018-ஆம் ஆண்டு முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1.40 கோடி குடும்பங்கள் இணைந்துள்ளனர். ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லாமல் தரமான சிகிச்சைகள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது .
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த 5 பயனாளிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும், 15 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கியும், இத்திட்டத்தினை செயல்படுத்திய 2 அரசு ஆஸ்பத்திரி மற்றும் 2 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் பணியாற்றிய திட்ட ஒருங்கிணைப் பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு, மருத்துவ கல்லூரி மருத்துவமனை காப்பீடு திட்ட பொறுப்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், பெரியகுளம் தலைமை ஆஸ்பத்திரி டாக்டர் குமார், மாவட்ட திட்ட அலுவலர் ராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், செல்லமணி மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 2900 மீட்டர் நீள குழாய் அமைக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு 220 மீட்டர் குழாய் அழுத்தம் தாங்காமல் வெடித்தது.
- சுருளியாறு நீர்மின்நிலையத்தில் குழாய் உடைந்ததால் அதனை சரிசெய்யும் பணி, பெயிண்டிங் பணிகள் நடைபெற்றது. ஆனால் 2 ஆண்டுகளாக செயல்படாத எந்திரங்களை முறையாக கவனிக்காததால் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது.
சின்னமனூர்:
சுருளியாறு மின்நிலையத்திற்கு இரவங்கலாறு அணையில் இருந்து குழாய் மூலம் நீர் கொண்டுவரப்படுகிறது. இதில் பெரும்பாலான பகுதி வனப்பகுதியில் வருகிறது. இதற்காக 2900 மீட்டர் நீள குழாய் அமைக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு 220 மீட்டர் குழாய் அழுத்தம் தாங்காமல் வெடித்தது.
இதனைதொடர்ந்து சீரமைக்கும் பணி 2023 ஜனவரியில் தொடங்கியது. 8 மாதங்களாக நடைபெற்ற பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. மின்உற்பத்தியின் போது எந்திரத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்சினைகளை சரிசெய்து இயக்கி பார்த்தனர்.
டர்பைனில் ஏற்பட்ட கோளாறு ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவால் சீரமைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி இரவங்கலாறு அணையில் இருந்து 81 கனஅடிநீர் கொண்டுவரப்பட்டு 20 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் 2 நாட்கள் மட்டுமே மின்உற்பத்தி நடைபெற்றது. அதனைதொடர்ந்து 29-ந்தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
சுருளியாறு நீர்மின்நிலையத்தில் குழாய் உடைந்ததால் அதனை சரிசெய்யும் பணி, பெயிண்டிங் பணிகள் நடைபெற்றது. ஆனால் 2 ஆண்டுகளாக செயல்படாத எந்திரங்களை முறையாக கவனிக்காததால் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சுருளி அருவி, மகாராஜா மெட்டு, சின்னசுருளி ஆகிய 3 பகுதிகளையும் இணைத்து சுழல் சுற்றுலா தொழில்நுட்ப வனச்சரகம் அமைக்கப்பட்டுள்ளது.
- சின்ன சுருளி அருவியில் தண்ணீர் அதிக அளவு வருவதால் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக சுருளி அருவி உள்ளது. இங்கு வருடத்தில் பெரும்பாலான நாட்கள் தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் அருவியில் நீராடி செல்வது வழக்கம்.
இதேபோல் மேகமலை, மகாராஜாமெட்டு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. மேலும் மேகமலை அடிவாரத்தில் உள்ள சின்ன சுருளியில் மழைக்கால ங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது சுருளி அருவி, மகாராஜா மெட்டு, சின்னசுருளி ஆகிய 3 பகுதிகளையும் இணைத்து சுழல் சுற்றுலா தொழில்நுட்ப வனச்சரகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்சராக அஜய் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் வனக்காவலர்கள் இங்கு தொடர்ந்து பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நுழைவு கட்டணம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
சுருளி அருவி இதுவரை கம்பம் வனச்சரக அலுவலகத்தின் கட்டுப்பா ட்டில் இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சின்ன சுருளி அருவியில் தண்ணீர் அதிக அளவு வருவதால் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
- 53 அடியை எட்டுவதால் 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் என தெரிவித்தனர்.
- முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. இதன்மூலம் தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 51 அடியை எட்டியதும் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வத்தலக்குண்டு குன்னுவாரன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சளாறு கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.20 அடியாக உள்ளது. அணைக்கு 88 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. விரைவில் 53 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் என தெரிவித்தனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. 719 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.52 அடியாக உள்ளது. 333 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.60 அடியாக உள்ளது. 22 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 5.4, தேக்கடி 2.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- தேயிலை தோட்டங்களில் நின்று புகைப்படம் எடுப்பதும், குழுவாக நின்று வீடியோக்களை எடுத்து பதிவு செய்வதும் தொடர்ந்து வருகிறது.
- சுற்றுசூழல் பாதிக்கப்படுவதால் வெளியாட்கள் தேயிலை தோட்டங்களுக்குள் நுழையகூடாது என எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர்.
சின்னமனூர் :
தேனிமாவட்டம் சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது மேகமலை கிராமம். 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இப்பகுதியில் அதிகளவில் தேயிலை விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு ஹைவேவிஸ், மணலாறு, மேகமலை, மகாராஜாமெட்டு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.
திரும்பிய திசையெல்லாம் பசும்போர்வை போர்த்தியது போல பச்சை பசேலென தேயிலை தோட்டங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி என்பதால் இங்கு பெரும்பாலும் குளிர்ச்சியான சீதோசன நிலையே காணப்படும். இங்கு யானை, காட்டுமாடு, பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
மேலும் புலிகள் சரணாலய பகுதிகள் இருப்பதால் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இரவு நேரங்களில் மலைச்சாலை போக்குவரத்துக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இருந்தபோதும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மேகமலைக்கு வராமல் செல்வதில்லை. தேயிலை தோட்டங்களில் நின்று புகைப்படம் எடுப்பதும், குழுவாக நின்று வீடியோக்களை எடுத்து பதிவு செய்வதும் தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமக்களை அழைத்து வந்து போட்டோஷூட் எடுப்பதற்கு சிறந்த இடமாக இது உள்ளது. தோட்டங்களின் மையப்பகுதிகளுக்கு சென்று பலமணி நேரம் செலவிட்டு விதவிதமான புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். இதற்காக குடை, பிளாஷ், பலூன், பந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு வந்து போட்டோஷூட் நடத்துகின்றனர்.
அவை முடிந்ததும் தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக்பை உள்ளிட்ட கழிவுகளை அங்கேயே விட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதால் வெளியாட்கள் தேயிலை தோட்டங்களுக்குள் நுழையகூடாது என எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர்.
தேயிலை தோட்டங்கள் பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் இங்கு அட்டை புழுக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் தோட்டங்களுக்கு வரும் வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் ஏற்படும் பாதிப்பை தடுக்க இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளதாக தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் ரூ.3000 திருடப்பட்டது.
- புகாரின்பேரில் போலீசார் கும்பலை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(63). இவர் தெற்குரதவீதியில் உள்ள ஆறுமுகவிநாயகர் கோவிலில் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று பூஜை முடித்தபின்னர் கோவிலை பூட்டி சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இரும்பு கேட் திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் ரூ.3000 திருடப்பட்டது தெரியவந்தது.
இரவு நேரத்தில் கோவிலில் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்து உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.






