என் மலர்
தேனி
- தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதும் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர் மட்டம் உயராமலேயே உள்ளது.
- தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதால் நெல்சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு போதிய அளவு நீர் மட்டம் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதும் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர் மட்டம் உயராமலேயே உள்ளது.
இதனை நம்பியுள்ள விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதால் நெல்சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளனர்.
மேலும் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் அவர்கள் கவலையில் உள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகை அணை நீர் மட்டம் 48.62 அடியாக உள்ளது. 102 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கபப்டுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 119.45 அடியாக உள்ளது. 406 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.85 அடியாக உள்ளது. 57 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. 53 அடியை எட்டியவுடன் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். இருந்த போதும் தற்போது கரையோர மக்கள் பாது காப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர்.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 88.56 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 3.4, மஞ்சளாறு 9.8, சோத்துப்பாறை 1 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது.
- தேனி அரசு மருத்துவமனையில் 22 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தனி கவனம் செலுத்தி போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி நகரின் முக்கிய பகுதியாக காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு பைக்கில் வைக்கப்பட்டு இருந்த 9 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதே போல் எஸ்.புரம் அருகே பைக்கில் வந்த மர்ம நபர்கள் சாலையோரம் நின்று பேசிக் கொண்டு இருந்த வாலிபரின் செல்போனை பறித்துச் சென்றனர். இதே போல் சக்கம்பட்டி மெயின் ரோடு பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த அனுமார் கோவில் அருகே துணிகரமாக செல்போனை தூக்கிச் சென்றனர். இதே போல் ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே கடையின் பூட்டை உடைத்து பைக் திருடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு துணையாக இருந்த உறவினர்களின் 22 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. பெயரளவுக்கு மட்டும் வழக்கு பதிவு செய்து கிடப்பில் போடப்படுவது வாடிக்கையாகி விட்டது. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் மெத்தனமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆயுதபூஜை, தீபாவளி என தொடர் பண்டிகைகள் வர உள்ளது. எனவே ஆண்டிபட்டி பகுதியில் மக்கள் கூட்டம் சாலையில் அதிகரிக்கும் எனவே இதில் தனி கவனம் செலுத்தி போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேனி மாவட்டம் மக்களுக்கு சாலை விபத்துகள் குறித்து "விழிப்புணர்வு பொன்மொழி" எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது
- இப்போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள் அடுத்த மாதம் 31-ந் தேதியாகும்.
தேனி:
இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 1130 சாலை விபத்துகள் நடக்கின்றது. அதில் சுமார் 422 நபர்கள் உயிரிழக்கின்றனர். சாலை விபத்து உயிரிழப்புகள் அதிக வேகமாக வாகனத்தை ஓட்டுதல், செல்போனில் பேசியபடி ஓட்டுதல், மது அருந்தி ஓட்டுதல், தலைக்கவசம் இன்றி ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல், சாலை விதிகளை மதிக்காமல் ஓட்டுதல் போன்ற பல்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது.
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் போலீசாரின் பரிந்துரையின்படி 4,328 நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் அதிக வேகமாக ஓட்டியவர்கள் 211, அதிக பாரம் ஏற்றி ஓட்டியவர்கள் 151, செல்போன் பேசி ஓட்டியவர்கள் 287, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி ஓட்டியவர்கள் 185, மது அருந்தி ஓட்டியவர்கள் 58, சிவப்பு விளக்கை மதிக்காமல் ஓட்டியவர்கள் 3228 மற்றும் விபத்தினால் மரணத்தை ஏற்படுத்தியவர்கள் 208 பேர் ஆவார்கள்.
எனவே, தேனி மாவட்ட மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அதிக வேகமாக வாகன ஓட்டுதலை தடை செய்வது குறித்து "விழிப்புணர்வு பொன்மொழி" எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பங்கு பெறலாம்.
2 வரிகளில் மிகவும் சுருக்கமாகவும், கருத்து மிகுந்ததாகவும் உள்ள பொன்மொழிகள் அனைத்தும் தேர்வு செய்யப்பட்டு, அப்பொன்மொழிகளை எழுதியவர்களுக்கு மாவட்ட கலெக்டரால் பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கு பெறுவோர் அவர்களுடைய முழு முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் எழுதி அனுப்ப வேண்டும்.
இப்போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள் அடுத்த மாதம் 31-ந் தேதியாகும்.
விழிப்புணர்வு பொன்மொழியினை தபால் அட்டை அல்லது தபால் கவரில் எழுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- சம்பவத்தன்று பள்ளியில் இருந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மாணவி அதன்பிறகு வெளியே சென்றவர் மாயமானார்.
- மாணவியின் தாய் அப்பகுதியை சேர்ந்த வாலிபரின் மீது அளித்த கடத்தல் புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவை சேர்ந்த சன்னாசிராஜா மகள் சங்கீதா(17). இவர் கெங்குவார்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளியில் இருந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தார். அதன்பிறகு வெளியே சென்றவர் மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை். இதுகுறித்து மாணவியின் தாய் மகேஸ்வரி தேனி போலீசில் புகார் அளித்தார். அந்தபுகாரில் தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் என்பவர்தான் தனது மகளை கடத்திச்சென்றிருக்ககூடும். எனவே அவரை கண்டுபிடித்து எனது மகளை மீட்டு தரவேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் சுருளிபட்டி 2-வது வார்டு வடக்குதெருவை சேர்ந்த சிரஞ்சீவி மகள் யுகேஸ்வரி(18). இவர் கம்பத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் கவுசல்யா ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
- வடிவேல் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூளைச்சாவு அடைந்த வடிவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 44). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளராகவும் உள்ளார். இவரது மனைவி பட்டு லெட்சுமி (38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வடிவேல் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 23-ந் தேதி வடிவேல் அலுவலக பணிகளை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
சீலையம்பட்டி அருகே வந்தபோது சாலையின் குறுக்கே வந்த மாடு அவரது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தவறி கீழே விழுந்த வடிவேல் தலை, காது, மூக்கு பகுதியில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வடிவேலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி மதுரையில் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊரில் வடிவேல் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த வடிவேலின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேனி மாவட்டத்துக்கு வருகை தந்தார். அவர் மூளைச்சாவு அடைந்த வடிவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்குப் பின் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த நபரின் உடல் முதன் முறையாக அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவது சின்னமனூரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாட்டு மருத்துவ குணம் கொண்ட சீனிஅவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் பயிரி ட்டுள்ள விவசாயிகள் பெரும்பாலான காலங்களில் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.
- போதிய விலையில்லாமல் காய்கறிகளை விற்க மனமின்றி ெசடியி லேயே பறிக்காமல் விட்டு உள்ளனர்.இதன் காரணமாக காய்கறிகள் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே சிலமலை கிரா மத்தில் மொச்சை, அவரை, பச்சைமிளகாய், கத்தரி க்காய், வெண்டைக்காய், சீனி அவரைக்காய், தக்காளி உள்ளிட்ட குறுகிய கால நாட்டுரக காய்கறிகளை விவசாயிகள் அதிகம் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது இங்கு சீனி அவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் விளை ச்சல் அதிகமாக இருந்த போதும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் குறைந்த அளவே வருகின்றனர். நாட்டு மருத்துவ குணம் கொண்ட சீனிஅவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் பயிரி ட்டுள்ள விவசாயிகள் பெரும்பாலான காலங்களில் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.
ஒரு சிலர் இதனை வாங்கி வற்றலாக தயாரித்து அதனை கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது விளைச்சல் அதிகமாக இருந்தபோதும் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரையிலேயே வியாபாரிகள் வாங்க முன்வருகின்றனர். இதனால் விவசாயிகள் காய்கறிகளை விற்க மனமின்றி ெசடியி லேயே பறிக்காமல் விட்டு ள்ளனர்.
இதன்காரணமாக காய்கறிகள் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டு ள்ளது. மற்ற காய்கறிகளுக்கு ஓரளவு விலை கிடைத்தாலும் சீனி அவரை, வெண்டை க்காய் பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருவ தாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
- வனத்துறை யினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து அறிய கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி னார்.
- வண்டி ப்பெரியாறு, மூங்கிலாறு உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்களில் 3 இடங்களில் வனத்துறையி னர் கூண்டு வைத்தனர்.
கூடலூர்:
தமிழக - கேரள எல்லை ப்பகுதியான வண்டிப்பெரி யாறு, மூங்கிலாறு அருகே வனப்பகுதியையொட்டி தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு எஸ்டேட் மற்றும் குடியிருப்புகளில் வளர்க்கப்பட்டு வரும் பசு மற்றும் மாடுகளை கடந்த சில நாட்களாக சிறுத்தை கொன்று வந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையிரிடம் புகார் அளித்தனர். தேக்கடி ரேஞ்சர் அனில்குமார் தலைமையில் வனத்துறை யினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து அறிய கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி னார். இதில் சிறுத்தை வந்து செல்வது உறுதி செய்ய ப்பட்டது.
இதனையடுத்து வண்டி ப்பெரியாறு, மூங்கிலாறு உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்களில் 3 இடங்களில் வனத்துறையி னர் கூண்டு வைத்தனர். சிறுத்தை சிக்கும் வரை சுழற்சி முறையில் வனத்து றையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக வும் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி இதே போல் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட சிறுத்தையை பெரியாறு புலிகள் சரணாலயத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதி க்குள் வனத்துறையினர் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெரியகுளம், சிறு குளம் உள்ளிட்ட கண்மாய்களில் பெரும்பாலான பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர்.
- போர்க்கால அடிப் படையில் அனைத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 543 ஏக்கர் பரப்பளவில் பஞ்சம்தாங்கி, சாந்த நேரி, பெரியகுளம் உள்ளிட்ட 10 கண்மாய்கள் அமைந்து ள்ளன. இதில் ஓட்டணை, பெரியகுளம், பஞ்சம்தாங்கி உள்ளிட்ட கண்மாய்களுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. பிற கண்மாய்களுக்கு மேகமலை அருவி, ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது.
இந்த நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களில் 64 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பஞ்சம்தாங்கி, 81 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சாந்தநேரி, 109 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரியகுளம், சிறு குளம் உள்ளிட்ட கண்மாய்களில் பெரும்பாலான பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர். கண்மாய்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் வருசநாடு பகுதி விவசாயிகள் ஒருங்கி ணைந்து குழு அமைத்து அதன் மூலம் கண்மாய்களில் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் வாயிலாக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தனர். அதன் விளைவாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெரியகுளம், சாந்த நேரி, பஞ்சம்தாங்கி ஆகிய கண்மாய்கள் ஆக்கிரமி ப்புகளை அகற்ற அதிகாரி கள் நடவடிக்கை மேற்கொ ண்டனர்.
முதற்கட்டமாக கண்மாய் அளவீடு செய்யப்பட்டு கரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பெரியகுளம், பஞ்சம்தாங்கி கண்மாய்களில் தனிநபர்கள் ஆக்கிரமித்து வைக்க ப்பட்டிருந்த தென்னை மற்றும் இலவம் மரங்கள் அகற்றப்பட்டன. அதன் பின்பு கண்மாய் சீரமைப்பு பணிகள் திடீரென நிறுத்தப் பட்டது. பணிகள் நிறுத்த ப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது வரை மீண்டும் பணிகள் தொடங்கப்ப டவில்லை.
இதனால் பஞ்சம்தாங்கி மற்றும் பெரியகுளம் கண்மாய்கள் பொதுமக்கள் குப்பைகள் குவிக்கும் இடமாக மாறி வருகிறது. மேலும் அதிகாரிகள் நட வடிக்கை எடுக்காததால் தனி நபர்கள் மீண்டும் கண்மாயை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போ ர்க்கால அடிப் படையில் அனைத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே தேனி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
- கேரள எல்லையான குமுளி, தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது.
கூடலூர்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 2பேர் உயிரிந்தனர். 4பேருக்கு மேல் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழக எல்லைப்பகுதியான குமுளி, கம்பம் மெட்டு, போடி, மெட்டு பகுதிகளிலும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே தேனி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கேரளா சுற்றுலா பயணத்தை பலரும் ரத்து செய்துள்ளனர். இதனால் கேரள எல்லையான குமுளி, தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. இதேபோல் வாகமன், ராமக்கல் மெட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் இதேநிலை உள்ளது.
இதனால் ஓட்டல், தங்கும் விடுதி, ஜீப் சவாரி உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
- சுருளி சாரல் திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- மேலும், விழா நடைபெறும் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நெகிழி பொருட்களை தவிர்த்து மாற்றுப்பொருட்களை உபயோகப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் போன்ற பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் சுருளி சாரல் திருவிழா-2023 நாளை முதல் அக்.2ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய விழிப்புணர்வு மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: - சுருளி சாரல் திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சிறப்பு பேருந்து, சாலை வசதி, வாகன நிறுத்துமிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவி குழுக்கள் தயார் செய்யும் பொருட்கள் கண்காட்சி மற்றும் சிறுதானிய உணவு வகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனைகளும், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் மலிவு விலையில் வழங்கப்படவுள்ளது.
மேலும், சுற்றுலா பயணிகளை உற்சாக படுத்தும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, மகளிர் திட்டம் சார்பில் கோலப்போட்டி, கலை பண்பாட்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகள், சமூகநலத்துறை சார்பில் சிலம்பம் கலை நிகழ்ச்சிகள் என சிறப்பாக நடைபெறவுள்ளது.
மேலும், விழா நடைபெறும் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும், கிராமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகளும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியும், நெகிழி பொருட்களை தவிர்த்து மாற்றுப்பொருட்களை உபயோகப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் போன்ற பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
சுருளி சாரல் திருவிழா நடைபெறும் நாட்களில் தேனி, உத்தமபாளையம் மற்றும் கம்பத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இவ்விழாவிற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகைதந்து பார்வையிட்டு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கேட்டுக்கொண்டார்.
- வினோதம் என்னவெனில் டி.வி.எஸ். 50 வாகனத்தில் வந்த கும்பல் தங்கள் வாகனத்தை கடை முன்பு நிறுத்தி விட்டு கடைக்குள் இருந்த ஸ்பிளண்டர் பிளஸ் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர்.
- இன்று காலை கடை முன்பு டி.வி.எஸ். 50 வாகனம் நிற்பதையும் ஷட்டரின் பூட்டு உடைந்து கிடப்பதையும் பார்த்த அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 44). இவர் சத்யாநகர் பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். தினமும் இரவில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். அதன்படி நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் கடைக்கு வந்த ஒரு மர்ம கும்பல் கடை ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
கடைக்குள் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.20000 பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதில் வினோதம் என்னவெனில் டி.வி.எஸ். 50 வாகனத்தில் வந்த கும்பல் தங்கள் வாகனத்தை கடை முன்பு நிறுத்தி விட்டு கடைக்குள் இருந்த ஸ்பிளண்டர் பிளஸ் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர்.
இன்று காலை கடை முன்பு டி.வி.எஸ். 50 வாகனம் நிற்பதையும் ஷட்டரின் பூட்டு உடைந்து கிடப்பதையும் பார்த்த அக்கம் பக்கத்தினர் முத்துகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கடைக்கு வந்து பைக் மற்றும் பணம் திருடு போனது குறித்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர் விட்டுச் சென்ற பைக் அவர்களுடையதா அல்லது அதுவும் திருடி எடுத்து வந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக இப்பகுதியில் முறையான தூய்மைப்படுத்தப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள் இல்லாததால் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து சாலையில் தேங்கி நிற்கிறது.
- இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடான இடமாக மாறி வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே அமைந்துள்ளது பத்ரகாளி புரம். இப்பகுதியை சுற்றியுள்ள விசுவாசபுரம், மீனாட்சிபுரம், அம்மாபட்டி போன்ற பகுதியிலிருந்து தேனி சந்தைக்கு விவசாய விளைபொருள்கள் கொண்டு செல்லும் முக்கிய போக்குவரத்து பகுதியாகும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக இப்பகுதியில் முறையான தூய்மைப்படுத்தப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள் இல்லாததால் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து சாலையில் தேங்கி நிற்கிறது.
ஏற்கனவே குண்டும் குழியுமாக பழுதடைந்த நிலையில் உள்ள இந்த சாலையில் மழைக்காலங்களில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள், முதியவர்கள் கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மழை காரணமாக சாலையில் தேங்கி உள்ள நீர் 2 நாட்களுக்கு மேலாகியும் வழியாமல் சாக்கடை கழிவு நீர் கலந்து குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடான இடமாக மாறி வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






