search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்கி பணி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
    X

    கோப்பு படம்.

    வங்கி பணி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

    • எஸ்.பி.ஐ. வங்கி மூலம் துணை மேலாளர் பணிக்கான அதிகார பூர்வமான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வருகிற 27-ந் தேதிக்குள் இணையதள த்தின் வழியாக விண்ண ப்பிக்கலாம்.

    தேனி:

    தாட்கோ நிறுவனத்தின் மூலம் எஸ்.பி.ஐ. வங்கியில் துணை மேலாளர் பதவி க்கான தேர்வில் வெற்றி பெற பயிற்சி நிலையத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.

    அதன்படி எஸ்.பி.ஐ. வங்கி மூலம் துணை மேலாளர் பணிக்கான அதிகார பூர்வமான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி எஸ்.பி.ஐ. வங்கியில் துணை மேலாள ருக்கான 2000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வருகிற 27-ந் தேதிக்குள் இணையதள த்தின் வழியாக விண்ண ப்பிக்கலாம்.

    இத்தேர்வுக்கு விண்ண ப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணை யதளம் வழியாக நடை பெறும். முதற்கட்டத்தேர்வு, முதன்மை, நேர்காணல் மற்றும் குழுப் பயிற்சிகள் என 3 நிலைகளில் தேர்வு நடைபெற உள்ளது. முதற்கட்டத் தேர்வு 2023 டிசம்பர் மற்றும் 2024 ஜனவரியிலும், நேர்காணல் மற்றும் குழு பயிற்சிகளு க்கான அழைப்பு 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரியி லும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    துணை மேலாளர் பதவி க்கான தேர்வில் வெற்றி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்க ளுக்கு பயிற்சி நிலையத்தின் மூலம் இலவச பயிற்சியை வழங்க தாட்கோ நிறுவனம் முடிவு செய்து ள்ளது. இப்பயிற்சியினைப் பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலமாக ஏற்க ப்படும் என தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×