என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூடலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
Byமாலை மலர்20 Sep 2023 4:41 AM GMT
- நகரின் அனைத்து வார்டு பகுதிகளிலும் மொத்தம் 32 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.
- டிராக்டர் வண்டிகள் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூரில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. நகரின் அனைத்து வார்டு பகுதிகளிலும் மொத்தம் 32 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.
டிராக்டர் வண்டிகள் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஊர்வலத்தை கூடலூர் நகர இந்து முன்னணி பொதுச்செயலாளர் ஜெகன் தலைமையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
கூடலூர் அருகே காஞ்சிமரத்துறை முல்லை பெரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X