search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
    X

    ஊர்வலத்தில் பங்கேற்ற விநாயகர் சிலைகளை படத்தில் காணலாம்.

    கூடலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

    • நகரின் அனைத்து வார்டு பகுதிகளிலும் மொத்தம் 32 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.
    • டிராக்டர் வண்டிகள் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூரில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. நகரின் அனைத்து வார்டு பகுதிகளிலும் மொத்தம் 32 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.

    டிராக்டர் வண்டிகள் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஊர்வலத்தை கூடலூர் நகர இந்து முன்னணி பொதுச்செயலாளர் ஜெகன் தலைமையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    கூடலூர் அருகே காஞ்சிமரத்துறை முல்லை பெரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×