என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
தேனி அருகே சபரிமலை சென்று திரும்பிய பக்தர்கள் விபத்தில் படுகாயம்
- அனுமந்தன்பட்டியில் இருந்து சின்னமனூர் செல்லும் பைபாஸ் சாலையில் பெரியாறுப்பாலத்துக்கு அருகில் உள்ள பாலத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதி அதில் வந்த 6 பேர்களும் படுகாயமடைந்தனர்.
- இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தமபாளையம்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சவடப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 40). இவர் தனது அண்ணன் லோகநாதரெட்டி (42) மற்றும் அவரது மகன்களான சுஜித் ரெட்டி (14), ரோகித் (11) மற்றும் கல்யாண்குமார் (44), பிரகாஷ் (44) ஆகியோருடன் ஒரு காரில் சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.
சபரிமலை, குருவாயூர் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று விட்டு மீண்டும் தேனி வழியாக சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அனுமந்தன்பட்டியில் இருந்து சின்னமனூர் செல்லும் பைபாஸ் சாலையில் பெரியாறுப்பாலத்துக்கு அருகில் உள்ள பாலத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதி அதில் வந்த 6 பேர்களும் படுகாயமடைந்தனர். இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.