தேவதானப்பட்டி அருகே 2 இளம்பெண்கள் மாயம்

சம்பவத்தன்று கடைக்கு பொருட்கள் வாங்க சென்றவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் உறவினர்கள் வீடுகள் மற்றும் கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் மனைவி வெண்ணிலா (வயது20). சம்பவத்தன்று கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அதன்பி ன்னர் அவர் வீடு திரும்ப வில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் உறவினர்கள் வீடுகள் மற்றும் கடைகளில் தேடியும் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெண்ணிலாவை தேடி வருகின்றனர்.

தேவதானப்பட்டி ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் தர்ஷினி (17). பிளஸ்-2 முடித்து விட்டு தையல் பயிற்சிக்கு சென்று வரு கிறார். சம்பவத்தன்று தையல் வகுப்புக்கு சென்ற அவர் திடீரென மாயமா னார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து இளம்பெ ண்ணை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com