search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் கன மழை வைகை அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு
    X

    கோப்பு படம்.

    தேனி மாவட்டத்தில் கன மழை வைகை அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு

    • நேற்று வரை 239 கன அடியாக இருந்த வைகை அணையின் நீர்வரத்து இன்று 332 கன அடியாக அதிகரித்துள்ளது.
    • மதுரை மக்களின் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டில் போதிய அளவில் மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் திறக்கப்பட வில்லை.

    இதனால் விவசாய பணிகளில் தாமதம் காட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று தேனி மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 239 கன அடியாக இருந்த வைகை அணையின் நீர்வரத்து இன்று 332 கன அடியாக அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 47.64 அடியாக உள்ளது. மதுரை மக்களின் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1698 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.90 அடியாக உள்ளது. அணைக்கு 417 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2430 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.16 அடியாக உள்ளது. வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 340.60 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.22 அடியாக உள்ளது. அணைக்கு 12 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 37.36 மி. கன அடியாக உள்ளது.

    பெரியாறு 20.4, தேக்கடி 5.8, கூடலூர் 0.8, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 0.4, போடி 6.8, வைகை 0.4, சோத்துப்பாறை 17, மஞ்சளாறு 5.2, வீரபாண்டி 2.4, அரண்மனைபுதூர் 3.8, பெரியகுளம் 0.5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×