என் மலர்
நீங்கள் தேடியது "Theppakulla wall collapse and damage"
- ரூ.21 லட்சம் மதிப்பில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இந்த பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் பழைய சுற்றுச்சுவர் மீதே புதிய கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திரு காளாத்தீஸ்வரர் - ஞானாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலின் தெப்பக்குளம் சிதிலமடைந்து காணப்பட்டது. கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தெப்பக்குளத்தையும் சீரமைக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு பா.ஜ.க.வினர் கோரிக்ைக விடுத்தனர்.
ரூ.21 லட்சம் மதிப்பில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெப்பக்குளத்தின் கிழக்குப்பகுதியில் நடைபாதை சுவர் திடீரென சரிந்து விழுந்து சேதமானது. இந்த பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் பழைய சுற்றுச்சுவர் மீதே புதிய கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தது.
அதனால்தான் சுவர் சரிந்து விழுந்துள்ளது. எனவே அதிகாரிகள் தெப்பக்குளத்தின் கட்டுமானப்பணி உறுதித்தன்மையை முழுமையாக ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






