என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theft of gold"

    • கடமலை க்குண்டு பஞ்சாயத்து அலுவலக தெருவை சேர்ந்தவர் சிறுவனை தூக்கி சென்று அவர் கழுத்தில் அணிந்திந்த தங்க தாயத்தை திருடி சென்றார்.
    • அதன்பின் அவரை தேடி சென்ற போது அவர் மாயமானார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகில் உள்ள கரட்டுப்பட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (45). இவரது மகன் பவேஷ் (5) என்பவர் தனது வீட்டு அருகே சிறுவர்களுடன் விளையாடி க்கொண்டி ருந்தார்.

    அப்போது கடமலை க்குண்டு பஞ்சாயத்து அலுவலக தெருவை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் சிறுவனை தூக்கி சென்று அவர் கழுத்தில் அணிந்திந்த தங்க தாயத்தை திருடி சென்றார். இதுகுறித்து சிறுவன் தனது தாய் கலையரசியிடம் கூறினான். அதன்பின் பாஸ்கரனை தேடி சென்ற போது அவர் மாயமானார்.

    சம்பவத்தன்று கருப்பசாமி கோவில் அருகே நின்று கொண்டிருந்த பாஸ்கரன் குறித்து கடமலை க்குண்டு போலீஸ் நிலை யத்தில் கலையரசி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி சம்பவ இடத்திற்கு சென்று பாஸ்கரனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

    ×