search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பத்தில் யானை தந்தம் கடத்திய 2 பேர் கைது
    X

    யானை தந்தத்துடன் கைது செய்யப்பட்ட வாலிபர்கள்.

    கம்பத்தில் யானை தந்தம் கடத்திய 2 பேர் கைது

    • கம்பம்-குமுளி சாலையில் அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • சோதனையில் யானை தந்தம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் வனப்பகுதியில் யானை தந்தம் கடத்தப்படுவதாக மத்திய வ னவிலங்கு குற்றகா ட்டுப்பாட்டு பணியக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வனவிலங்கு குற்றகட்டுப்பாட்டு பணியக இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் கம்பம் மேற்கு ரேஞ்சர் ஸ்டாலின் மற்றும் வனத்துறையினர் கம்பம்-குமுளி சாலையில் அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அவர்கள் யானை தந்தம் கடத்தியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து யானை தந்தத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கூடலூர் கன்னிகாளி புரத்தை சேர்ந்த சுரேஷ்கண்ணன்(32), கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கடைசிகடவு பகுதியை சேர்ந்த முகேஷ்கண்ணன் (28) என்பதும், யானை தந்தத்தை பைக்கில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து எங்கிருந்து யானை தந்தம் கடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் ேவறு யாருக்கும் தொடர்புள்ளதா என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×