search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் - கலெக்டர் ஷஜீவனா நடத்தி வைத்தார்
    X

    கலெக்டர் ஷஜீவனா தலைமையில் திருமணம் நடைபெற்றது.

    வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் - கலெக்டர் ஷஜீவனா நடத்தி வைத்தார்

    • இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் 7 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க ப்பட்டது.
    • ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை கலெக்டர் ஷஜீவனா திருமண ஜோடிகளுக்கு வழங்கினார்.

    தேனி:

    தமிழக அரசு மாநிலம் முழுவதும் பொருளா தாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 4 கிராம் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்திட உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் 7 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க ப்பட்டது. திருமணத்திற்கு தேவையான 4 கிராம் தாலி ரூ.30,000, மணமகன் ஆடை ரூ.1,000, மணமகள் ஆடை ரூ.2,000, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரூ.2,000, மாலை-புஷ்பம் ரூ.1,000, பீரோ ரூ.7,800, கட்டில் ரூ.7,500, மெத்தை ரூ.2,200, இரண்டு தலையணை ரூ.190, ஒரு பாய் ரூ.180, இரண்டு கைக்கடிகாரம் ரூ.1,000, ஒரு மிக்சி ரூ.1,490, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் ரூ.3,640 என மொத்தம் ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை கலெக்டர் ஷஜீவனா திருமண ஜோடிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா, துணை தலைவர் சாந்தகு மார், இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் கலைவாணன், கவுமாரி யம்மன்கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, குச்சனூர் கோவில் செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×