search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rain water harvesting"

    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயிலடியில் இன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்தப் பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மழைநீர் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம், மழைநீர் உயிர் நீர். வடகிழக்கு பருவமழைக் கால மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி முறையாக பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    இதில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன் குமார், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ஜீவசங்கர், துணை மேற்பார்வை பொறியாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மழைநீர் சேமிப்போம் விழிப்புணர்வு பேரணி முத்தாலம்மன் கோவிலில் முன்பு தொடங்கி அரசு சுகாதார நிலையம் வழியாகச் சென்று தேரடியில் நிறைவு பெற்றது.
    • பள்ளி சங்கமாணவர்கள் சாரணபடை மாணவர்கள் மற்றும் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பை சேர்ந்த சுமார் 510 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரில் உத்தமபாளையம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மழைநீர் சேமிப்போம் விழிப்புணர்வு பேரணி முத்தாலம்மன் கோவிலில் முன்பு தொடங்கி அரசு சுகாதார நிலையம் வழியாகச் சென்று தேரடியில் நிறைவு பெற்றது.

    இதில் சின்னமனூர் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி சேர்மன் என்ஜினியர் முகமது சுல்தான் தலைமையில், தாளாளர் முகமது அபுபக்கர் சித்திக் முன்னிலையில் பள்ளி முதல்வர் முகமது ஷாலி, பள்ளி சங்கமாணவர்கள் சாரணபடை மாணவர்கள் மற்றும் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பை சேர்ந்த சுமார் 510 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • மழைநீர் சேகரிப்பு என்பது இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.

    சேலம்:

    நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மழைநீர் சேகரிப்பு என்பது இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது. இதனால் மழைக்காலத்திற்கு முந்தைய காலத்தில் தொடங்கி, மழைக்காலம் வரை நீர் சேமிப்பு பணிகள் நடக்கிறது. நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. இந்த பிரச்சினையை சரி செய்யவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது.

    தாலுகாக்களில்...

    நாடு முழுவதும் 225 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 225 கூடுதல் மற்றும் இணை செயலாளர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் 225 மாவட்டங்களிலும் 1592 தாலுகாக்களில் இந்த திட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வறட்சி மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், தண்ணீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்துவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய, மாநில நீர்வளத்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், நீர்வளத்துறை பொறி யாளர்கள், அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினர் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர்மேலாண்மை குழுக்களும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டம்

    சேலம் மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள், குளங்கள், பொது மற்றும் தனியார் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் தொடர்பான திறந்தவெளி கிணறுகள், பாரம்பரிய நீர்நிலைகள் தொடர்பான பணிகள், மறு பயன்பாட்டுக்குரிய நீர் கட்டமைப்புகள், நீர்வள ஆதாரம் தொடர்பான கசிவு நீர் குட்டைகள், அகழிகள், அடர்வன காடுகளில் மரக்கன்றுகள் நடுதல், நர்சரிகளை பராமரித்தல், அமிர்த குளங்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜல் சக்தி அபியான் திட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் இருந்து நீர் வெளியே செல்லும் கால்வாய்களில் நீர்கால் பகுதியை கண்டறியப்படுகிறது. அந்த பகுதியில் மீள்நிரப்பு புழை அமைக்கும்போது நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதற்கு முக்கியத்துவம் அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேபோல் குளங்களை சீரமைக்கும்போது கரைகளை மிகவும் உறுதித்தன்மை கொண்டதாகவும் பலப்படுத்த வேண்டும். மேலும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், பண்ணை குட்டை அமைத்தல், சிறு தடுப்பணைகள், விளை நிலங்களில் வரப்பு அமைத்தல், மழை வளம் அதிகரிக்க மரம் வளர்த்தல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மழைக்காலங்களில் சாஸ்திரி ரோடு, தில்லை நகர், சங்கிலி ஆண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து விடும்.
    • பொது இடங்களில் வெள்ள நீர் தேங்குவதை தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

    திருச்சி :

    திருச்சி மாநகராட்சியின் பல பகுதிகள் மழைக்காலங்களில் வெள்ளைக்காடாக மாறிவிடும். குறிப்பாக சாஸ்திரி ரோடு, தில்லை நகர், சங்கிலி ஆண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து விடும். இதனால் போக்குவரத்துக்கு தடை ஏற்படும்.

    இந்த நிலையில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் வெள்ள நீர் தேங்குவதை தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

    அந்த அடிப்படையில் சாலை ஓரங்களில் மட்டும் 150 இடங்களில் இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி செயற்பொறியாளர் சிவ பாதம் இன்று தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும் போது,

    மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து சாலையோரம் 40 மீட்டர் ஆழத்துக்கு குழாய் பதிக்கிறோம். அதன் பக்கவாட்டில் ஓட்டைகள் போடப்படுகிறது. பின்னர் அந்த குழாயில் மணல் அல்லது ஜல்லி நிரப்பி விடுகிறோம். இதன் மூலம் அப்பகுதியில் தேங்கும் மழை நீர் நிலத்தடிக்கு செல்ல வாய்ப்பு உருவாகிறது.

    பாதாள சாக்கடை திட்ட பணிகளால் இந்த மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் சில இடங்களில் தண்ணீர் செல்வதற்கு தடையாக இருந்தது. அதனையும் சீர் செய்ய நடவடிக்கை எடுத்து இருக்கின்றோம்.

    மாநகராட்சியின் 375 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உள்ளன. ஆகவே இந்த முறை மழைக்காலங்களில் சாலைகளில் அதிகம் தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும்.

    இந்த மாநகராட்சி பொருத்தமட்டில் 23 ஆயிரத்து 746 வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. மேலும் அதன் முக்கியத்துவத்தை மாநகர வாசிகளுக்கு வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

    ×