என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே போலீசிடம் இருந்து தப்ப முயன்ற பெண்  கைதி படுகாயம்
    X

    கோப்பு படம்

    தேனி அருகே போலீசிடம் இருந்து தப்ப முயன்ற பெண் கைதி படுகாயம்

    • பெண் கைதியை தேனி கோர்ட்டில் ஆஜர் படுத்த அரசு பஸ்சில் அழைத்துச் சென்றனர்.
    • திடீரென பெண் கைதி பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி தங்கம் (வயது48). இவர் அதே ஊரைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரையும், அவரது மனைவி சரோஜாவையும் கடுமையாக தாக்கி கொள்ளையடிக்க முயன்றார்.

    அப்போது அவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் தங்கம் தப்பி ஓடினார். இது குறித்து க.விலக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கத்தை கைது செய்தனர்.

    பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக தலைமைக் காவலர் முத்தையா, பெண் காவலர் ராஜேஸ்வரி ஆகியோர் அவரை தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் தேனி கோர்ட்டில் ஆஜர் படுத்த அரசு பஸ்சில் அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென தங்கம் பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×