search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway flyover works"

    • சேதுபாரதம் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டது. போடி டி.எஸ்.பி. அலுவல கம் அருகே தொடங்கி மத்திய அரசின் நறுமண ப்பொருள் வாரிய அலுவல கம் வரை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
    • அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளும் போது வாகனங்கள் சென்று வர உரிய ஏற்பாடுகள் செய்யவும் பணிகளை தரமாக மற்றும் விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி-மதுரை அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் போடி - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை வாய்க்கால் அருகே சாலையின் குறுக்கே ரெயில் பாதை செல்கிறது.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கேரளாவுக்கு செல்லும் அத்தியாவசிய வாகனங்களும் நீண்ட நேரம் நின்று செல்லும் நிலை உள்ளது. எனவே இதனை தவிர்க்க நெடுஞ்சாலை த்துறை சார்பில் இரட்டை வாய்க்கால் பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    சேதுபாரதம் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டது. போடி டி.எஸ்.பி. அலுவல கம் அருகே தொடங்கி மத்திய அரசின் நறுமண ப்பொருள் வாரிய அலுவல கம் வரை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படு த்தும் பணிகள் முடிவடைந்து ராட்சத கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மதுரை கோட்ட தேசிய நெடு ஞ்சாலை பொறியாளர் முருகன், தேனி உதவி கோட்ட தேசிய நெடுஞ்சா லை பொறியாளர் ரம்யா, போடி சரக உதவி கோட்ட பொறியாளர் பிரவீன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பணிகள் மேற்கொள்ளும் போது வாகனங்கள் சென்று வர உரிய ஏற்பாடுகள் செய்யவும் பணிகளை தரமாக மற்றும் விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.

    • திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் திறந்த வெளி விளையாட்டு அரங்கம் கட்டுப்பட்டு வருகிறது.
    • மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டு வரும் திறந்த வெளி விளையாட்டு அரங்கம் மற்றும் திருப்பூர் வஞ்சிபாளையத்தில் கட்டப்பட்டு வரும் ெரயில்வே மேம்பாலம் பணியினை கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் திறந்த வெளி விளையாட்டு அரங்கம் கட்டுப்பட்டு வருகிறது. இவ்விளையாட்டு அரங்கில் தரை தளத்தில் உபகரண அங்காடி அறை, உடற்பயிற்சி அறை, பணியாளர்கள் அறை, விளையாட்டு வீரர்கள் உடை மாற்றும் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் தளத்தில் சுமார் 1050 நபர்கள் அமரும் வசதியுடன் பார்வையாளர்கள் அரங்கமும், மாற்றுத்திறனாளிகள் முதல் தளம் சென்று வருவதற்கு தனியாக சாய்தளம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 400 மீட்டர் அளவில் ஓடுதளமும், கால்பந்து மைதானமும் திறந்த வெளி விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, திருப்பூர் - சோமனூர் செல்லும் சாலையில் இருந்து சிக்கண்ணா கல்லூரி செல்லும் சாலையில் திருப்பூர் - வஞ்சிபாளையம் ெரயில்வே நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்டு வரும் ெரயில்வே மேம்பாலப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    இந்த ஆய்வின் போது, உதவிக்கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலை (நெடுஞ்சாலை திட்டங்கள்) மல்லிகா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் சுரேஷ், ஈஸ்வரமூர்த்தி, பொதுபணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துசரவணன், உதவி பொறியாளர் சத்தியராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    ×