search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional water release"

    • இன்று காலை முதல் அணையிலிருந்து 300 கனஅடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
    • கனமழையை தொடர்ந்து மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய நிலத்தை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

    கூடலூர்:

    மதுரை குடிநீர் திட்டத்தி ற்காக லோயர்கேம்ப் அருகே முல்லைபெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்றுமுன்தினம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்க ப்பட்டன.

    நேற்று காலை 6 மணி யிலிருந்து 150 கனஅடி நீர்மட்டம் திறக்கப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டதால் மின்உற்பத்தி நடை பெறவில்லை. இந்நிலையில் இன்று காலை முதல் அணையிலிருந்து 300 கனஅடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பெரியாறு மின்உற்பத்தி நிலையத்தில் 22 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக உள்ளது. வரத்து 266 கனஅடி, இருப்பு 2285 மி.கனஅடி.

    தேனி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையை தொடர்ந்து மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய நிலத்தை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கியுள்ளனர். வழக்கமாக இந்த மழை ஆடி மாதத்தில் பெய்யும். தற்போது தாமதமாக பெய்துள்ள நிலையிலும் விவசாய பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

    இதேபோல் போடி, சோத்துப்பாறை, பெரிய குளம், வீரபாண்டி, தேவ தானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்தது. கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் குளித்து வருகின்றனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 46.95 அடியாக உள்ளது. நேற்று 157 கனஅடிநீர் வந்த நிலையில் இன்று 53 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலி ருந்து 69 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1615 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை யின்நீர்மட்டம் 68.22 அடியாகவும் உள்ளது.

    கூடலூர் 1.2, சண்முகாநதிஅணை 5.6, உத்தமபாளையம் 1, போடி 1.6, வைகை அணை 3.8, சோத்துப்பாறை 4, பெரிய குளம் 1.4, வீரபாண்டி 3.4, அரண்மனைப்புதூர் 6.3, ஆண்டிப்பட்டி 5.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • ரூல்கர்வ் நடைமுறைப்படி கடந்த 6ந் தேதி முதல் கேரள பகுதிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது. அணையில் மதகுகள் 10 செ.மீ. அளவுக்கு திறக்கப்ப ட்டு அந்த நீர் இடுக்கி அணைக்கு செல்கிறது.
    • இன்று காலை அணையின் நீர்மட்டம் 139.55 அடியாக உள்ளது. வரத்து 10431 கன அடி. இதில் தமிழக பகுதிக்கு 2147 கன அடியும், கேரள பகுதிக்கு 8307 கன அடியும் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ரூல்கர்வ் நடைமுறைப்படி கடந்த 6ந் தேதி முதல் கேரள பகுதிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது. அணையில் மதகுகள் 10 செ.மீ. அளவுக்கு திறக்கப்ப ட்டு அந்த நீர் இடுக்கி அணைக்கு செல்கிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 139 அடியை எட்டியது. இதனால் மாலை 5 மணி அளவில் அைணயையொட்டி உள்ள 10 ஷட்டர்கள் திறக்கப்பட்டு 7246 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

    நேற்று முன்தினம் 3266 கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 139.55 அடியாக உள்ளது. வரத்து 10431 கன அடி. இதில் தமிழக பகுதிக்கு 2147 கன அடியும், கேரள பகுதிக்கு 8307 கன அடியும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 7012 மி. கன அடியாக உள்ளது.

    லோயர்கேம்ப் அருகே வைரவனாறு, வெட்டுக்காடு, கம்பாமடை, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய 4 இடங்களில் கடந்த 2006ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை நீர் தாழ்வாக செல்லும் இடங்களில் சிறுபுனல் மின் திட்டங்கள் தொடங்கப்பட்டன. தற்போது அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால் இந்த 4 இடங்களிலும் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

    நீர் வரத்து உள்ள சமயங்களில் மின் நிலையங்கள் முழுமையாக செயல்படும். ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்திலும் 2 டிரான்ஸ்பார்மர்கள் வீதம் வினாடிக்கு 1.25 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறும். அதன்படி 4 ஜெனரேட்டர்கள் மூலம் மொத்தம் வினாடிக்கு 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும்.

    தொடர் நீர்வரத்து காரணமாக கடந்த ஒரு மாதமாக மின் உற்பத்தி நிலையம் முழுமையாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.70 அடியாக உள்ளது. வரத்து 2707 கன அடி. திறப்பு 3909 கன அடி. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கும் தண்ணீர் கூடுதலாக வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5771 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 46 கன அடி. இருப்பு 435 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடி. வரத்து 131 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    பெரியாறு 69.2, தேக்கடி 27.2, கூடலூர் 5.7, உத்தமபாளையம் 1.3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×